வாழ்க்கையில் ஒரு முறை மட்டும், அதுவும் இன்றே இந்த எளிமையான பரிகாரத்தை செய்தால், உங்கள் வாழ்க்கையில் இனி எதுவும் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லாத அளவிற்கு செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள் என்பது உறுதி.

- Advertisement -

நாம் வாழும் இந்த வாழ்வில் எல்லாம் கிடைத்து நிறைவான ஒரு வாழ்க்கை வாழ்வது என்பது கொஞ்சம் சிரமம் தான். எல்லோருக்கும் ஏதாவது ஒரு குறை, கவலை என்று இருக்கத் தான் செய்கிறது. கவலை இல்லாத மனிதர்கள் இருக்கவே முடியாது. அந்த குறைகளையும், கவலைகளையும், தீர்த்துக் சகல செல்வத்தையும் சேர்த்து கொள்ளத் தான் நாம் கோவிலுக்கு செல்வது, பரிகாரங்களை செய்வது எல்லாமே. இப்போது இந்த பதிவில் குறிப்பிட்டிருக்கும் இந்த பரிகாரத்தை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு முறை செய்து விட்டால் போதும். உங்களின் குறைகள் அனைத்தும் நீங்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.

இந்த துன்பமானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் இருக்கிறது. ஒருவருக்கு பணத்தால், மற்றவருக்கோ உடல் உபாதையால், இன்னும் சிலருக்கோ குழந்தை இல்லை, வீடு இல்லை, என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறைகள் உண்டு. இத்தனை குறைகளுக்கும் சேர்த்து இந்த ஒரு பரிகாரம்தை மட்டும் செய்தால் போதும் அத்தனையும் சரியாகும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் தான் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள கோவிலுக்கு சென்று மூன்று தெய்வங்களை வழிபட வேண்டும். துர்க்கை அம்மன், முருகப்பெருமான், செவ்வாய் பகவான் இந்த மூன்று பேரையும் ஒரே நேரத்தில் வழிபட்டு மூன்று பேருக்கும் தீபமானது ஏற்றி வரும் பொழுது உங்களின் துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும் என்று பார்த்து விடலாம். இந்த மூன்று தெய்வங்களும் ஒரே ஆலயத்தில் இருந்தால் சிறப்பு. செவ்வாய் பகவான் நவக்கிரகத்தில் இருந்தாலும் இந்த தீபத்தை ஏற்றலாம்.

கஷ்டங்கள் தீர, துன்பம் தீர பரிகாரம்
பொதுவாகவே செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றுவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த பரிகாரத்திற்கு 9 எலுமிச்சை விளக்குகளாக ஏற்ற வேண்டும். ஒவ்வொரு விளக்கிலும் சிகப்பு திரி போட்டு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். அதே போல் செவ்வாய் பகவானுக்கும் இதே போல் இரண்டு தீபத்தை ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இவர்களோடு முருகப்பெருமானுக்கும், இதே போல் ஆறு தீபங்களை நல்லெண்ணெய் ஊற்றி சிறப்பு திரி போட்டு ஏற்ற வேண்டும். இவற்றுடன் மூவருக்குமே சிகப்பு நிறத்திலான மலர்களை சாற்ற வேண்டும். துர்க்கை அம்மனுக்கு மட்டும் இந்த விளக்கை ஏற்றும் போது குங்கும அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இந்த தீபத்தை பதினாறு வாரங்கள் தொடர்ந்து ஏற்ற வேண்டும்.

16 வாரங்கள் இந்த தீபத்தை ஏற்றி முடிக்கும் முன்பே உங்களின் குறைகள் அனைத்தும் தீர்வதற்கான வழி பிறக்கும் என்று சொல்லப்படுகிறது. துர்க்கை அம்மன், முருகப்பெருமான், செவ்வாய் பகவான் மூவருமே நமக்கு பிணியின்றி, கடன் இன்றி, புத்திர பாக்கியத்துடன், செல்வத்துடன் இருக்க அருள் புரிபவர்கள்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வம் வீட்டில் இருப்பதை அறிந்து கொள்ள என்ன செய்யலாம்? இதை மட்டும் செய்தால் எங்கிருந்தாலும் குலதெய்வம் உங்கள் வீடு தேடி வருமாம்!

இந்த மூவரையும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான தீபத்தை ஏற்றி ஒரே மலர்களை வைத்து வணங்கும் போது அனைத்து பிரச்சனைகளையும் நீக்கி சகல செல்வத்தையும் வழங்கி நம்மை வாழ வைப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. நீங்களும் இந்த தீபத்தை ஏற்றி குறைகள் அனைத்தும் நீங்கி நல்லதொரு வளமான வாழ்வை வாழுங்கள்.

- Advertisement -