குலதெய்வம் வீட்டில் இருப்பதை அறிந்து கொள்ள என்ன செய்யலாம்? இதை மட்டும் செய்தால் எங்கிருந்தாலும் குலதெய்வம் உங்கள் வீடு தேடி வருமாம்!

vasambu-murugan
- Advertisement -

நம்முடைய ஒவ்வொரு குடும்பத்திற்கு என்று ஒவ்வொரு விதமான சாஸ்திர சம்பிரதாயங்கள் இருப்பதை அறிந்திருப்போம். இஷ்ட தெய்வங்களை காட்டிலும், குலதெய்வமே நம்முடைய குலத்தை காக்கும் கடவுளாக இருந்து வருகிறார். குலதெய்வ கோவிலுக்கு செல்ல மறந்தவர்களுக்கு பல்வேறு விதமான பிரச்சனைகள் வருவதை கண்டிருப்போம். குலதெய்வ அருள் இருப்பவர்களுக்கு குப்பையில் இருந்தாலும் கோபுரத்தில் ஏறுவதற்கான அத்தனை அம்சங்களும் இருக்கும். அப்படிப்பட்ட இந்த குலதெய்வ அருள் கிடைக்க நம் வீட்டில் என்ன செய்ய வேண்டும்? குலதெய்வம் இருப்பதை நாம் எப்படி உணரலாம்? என்பதை தான் ஆன்மீக குறிப்பு தகவலாக இப்பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம் வாருங்கள்.

குலதெய்வ அருள் கிடைக்க முதலில் வீட்டில் இருக்கும் நிலை வாசல் கதவை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சில வீடுகளில் நிலை வாசல் கதவை சுத்தம் செய்து அதற்கு மஞ்சள், குங்குமம் பொட்டிட்டு விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். இத்தகையவர்களுக்கு குலதெய்வ தோஷங்கள் அணுகுவதில்லை. ஆனால் சிலர் அப்படியே வீட்டு நிலை வாசலை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். தூசும், தும்புமாக காட்சியளிக்கும் மேலும் அதில் விரிசல்கள், உடைசல்கள் இருந்தாலும் குலதெய்வ அருள் கிடைக்காது.

- Advertisement -

குலதெய்வம் நம்முடைய வீட்டில் நிலை வாசலில் தங்கி இருப்பதாக ஐதீகம் உண்டு. எனவே வீட்டு நிலை வாசலை முதலில் வாரம் ஒரு முறையாவது ஈரத்துணி அல்லது சாதாரண துணியை வைத்து துடைத்து சுத்தம் செய்யுங்கள். பின்னர் மஞ்சள், குங்குமம் இட்டு வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது இரு புறங்களிலும் விளக்கு ஏற்றி வையுங்கள். பூஜை அறையில் கண்டிப்பாக ஒரு சிறு புது கண்ணாடி ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பூஜை செய்யும் பொழுது குலதெய்வ படம் உங்களிடம் இல்லை என்றாலும் சிறு கலசத்தில் தண்ணீரை நிரப்பி அதில் மஞ்சள் கலந்து வைக்க வேண்டும். குலதெய்வம் நீரில் ஆவாகனம் ஆவதாக கூறப்படுகிறது எனவே தண்ணீர் வைத்து அதில் மஞ்சள் கலந்து வைத்து பூஜை செய்யும் பொழுது நீரில் சிறு சலனம் ஏற்படுவதை நீங்கள் பார்க்கலாம். இந்த சலனத்தை உணர்ந்தால் உங்கள் இல்லத்தில் குலதெய்வம் இருப்பதை உணரலாம்.

- Advertisement -

கதவை தாழிடும் பொழுது சத்தம் வரக்கூடாது. கதவை பிடித்து ஆட்ட கூடாது மேலும் அதில் இருக்கும் பிரச்சினைகளை உடனே சரி செய்து விட வேண்டும். மேலும் வாசலுக்கு மேலே ஒரு சிறு மஞ்சள் துணியில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய வசம்பு என்னும் மூலிகையை நாலைந்து எடுத்து அதில் வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். பிறகு மஞ்சள் நூலால் அதை இறுக்கமாக வெளியில் வராதவாறு நன்கு முடிந்து கட்டிக் கொள்ளுங்கள். பின்னர் இதை நிலை வாசலுக்கு மேலே நேராக ஆணியில் தொங்க விட்டு விடுங்கள். அவ்வளவுதான் இப்படி செய்தால் குலதெய்வ அருள் நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும். குலதெய்வ தோஷங்கள் இருந்தாலும் அவை விலகும்.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்தால் என்ன பலன் தெரியுமா? இப்படி நடந்தா உடனே மாத்திடுங்க!

குலதெய்வம் தெரியாதவர்கள் கூட இப்படி செய்யும் போது உங்களுக்கு ஏதாவது ஒரு வழியில் அவர் அருள் புரிவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. மேலும் குலதெய்வம் எங்கிருந்தாலும் உங்களை நோக்கி தேடி ஓடிவரும் அற்புதமான ஒரு எளிய பரிகாரமாகவும் இது இருந்து வருகிறது. வசம்புக்கு அவ்வளவு ஒரு சக்தி உண்டு. இந்த வசம்பை எரியும் விளக்கில் காண்பித்து சுட்டு அதிலிருந்து கிடைக்கும் கருப்பு கரியை நெற்றியில் தினமும் இட்டுக் கொண்டால் உடலில் இருக்கும் எதிர்மறை சக்திகள் விலகும் மேலும் வெற்றி உங்கள் பக்கம் வந்து சேரும், தீய எண்ணங்கள் தோற்கும்.

- Advertisement -