தாங்க முடியாத துன்பத்தைக் கொடுக்கும் கெட்ட சக்திகளை எல்லாம் தேடி தேடி, ஓட ஓட விரட்டும் தக்காளி பழம். இதுவரை கேள்விப்படாத அரிய பரிகாரம்.

thakkali
- Advertisement -

இந்த உலகத்தில் மனிதர்களுக்கு தாங்கவே முடியாத துன்பம் வருவதற்கு முதல் காரணம் அடுத்தவர்களுடைய கண் திருஷ்டி தான். அடுத்தவர்களுடைய பொறாமை குணம், அடுத்தவர்களுடைய பெரு மூச்சு,  இவைகள் எல்லாம் ஏவல் பில்லி சூனியத்தை விட மிக மிகக் கொடுமையானவை. ஏவல் பில்லி சூனியத்திலிருந்து கூட ஒரு காலகட்டத்திற்கு பின் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த பொறாமை குணம் கொண்ட மனிதர்களின் பார்வையில் இருந்து தப்பிப்பது ரொம்ப ரொம்ப கடினம்.

இதற்கு நம்முடைய வாழ்நாள் முழுவதும் பரிகாரம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் கண் திருஷ்டி நம்மை கவிழ்க்காது. இல்லையென்றால் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்டு விடும். இந்த கண் திருஷ்டியை கெட்ட சக்தியை அடித்து ஓட ஓட விரட்டுவதற்கு இன்று புதுமையான எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை தான் பார்க்கப் போகின்றோம்.

- Advertisement -

துன்பங்களை தரும் கண் திருஷ்டியை விரட்டும் தக்காளிப் பழ பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தக்காளி பழத்துடன் சேர்த்து இன்னும் ஒரு சில பொருட்கள் தேவை. அது எல்லாம் என்னென்ன என்று இப்போது பார்க்கலாம். தக்காளி பழம் 1, ஓமம் 1 ஸ்பூன், கல் உப்பு 1 கைப்பிடி, அளவு வரமிளகாய் 3, எலுமிச்சம்பழம் 1, இந்த பொருட்களை எல்லாம் அப்படியே ஒரு வெள்ளை காட்டன் துணியில் வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இதை வைத்துதான் திஷ்டி சுற்றி போட போகின்றோம்.

உங்கள் வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் கிழக்கு பார்த்தவாறு அமர வைத்து விட்டு இந்த முடிச்சை அவர்களுடைய தலையை வலப்பக்கம் மூன்று முறை, இடப்பக்கம் மூன்று முறை, ஏற்ற இறக்கமாக மூன்று முறை சுற்றிய பிறகு இதைக் கொண்டு போய் முச்சந்தியில் ஒரு ஓரமாக போடலாம். அதற்கு உங்களுக்கு வசதி இல்லை என்றால் ஊருக்கு ஒதுக்கப்பறம் கொண்டு போய் போடலாம். அதுவும் உங்களால் முடியாது என்றால் இதை ஒரு கேரிபேக்கில் போட்டு நன்றாக கட்டி குப்பை கூடையில் போட்டு வீட்டிற்கு வெளியே வைத்து விடுங்கள். திருஷ்டி சுற்றி எப்போதும் அந்த பொருளை வீட்டிற்குள் வைத்துக் கொள்ளவே கூடாது. அதனுடைய எதிர்மறையாற்றலானது, அந்த கெட்ட சக்தி மீண்டும் நம்மை தாக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

அப்படி இல்லை என்றால் உங்களுக்கு இந்த பொருட்களை எல்லாம் தீயில் இட்டு எரிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் ஒரு கொட்டாங்குச்சியில் நெருப்பு மூட்டி அந்த நெருப்பில் இந்த முடிச்சை அப்படியே போட்டு எரித்து விடலாம். தவறு கிடையாது. கண் திருஷ்டி கெட்ட சக்தி அடுத்தவர்களின் வயிற்றெரிச்சல் எல்லாம் நெருப்போடு நெருப்பாக பொசுங்கிவிடும். கண் திருஷ்டி கழிக்கும் பரிகாரத்தை மட்டும் ஒரு முறை வாழ்க்கையில் செய்தால் போதாது. இதே போல பரிகாரத்தை நீங்கள் வாரம் ஒரு முறை செவ்வாய் ஞாயிறு அல்லது அமாவாசை தினங்களில் செய்து கொள்ளலாம்.

கண் திருஷ்டி கழிப்பதில் பல வகைகள் உண்டு. கண் திருஷ்டியையும் கெட்ட சக்தியையும் போக்கக்கூடிய சக்தி சிவப்பு நிறத்திற்கு அதிகம் உண்டு. அதனால் தான் எலுமிச்சம் பழத்தில் குங்குமத்தை தடவி வாசலில் வைப்பார்கள். சிவப்பு மிளகாயை சுற்றிப் போடுவார்கள்.

இதையும் படிக்கலாமே: உங்க நகை பெட்டி முழுவதும் தங்கத்தாலே நிரப்ப வேண்டும் என நினைப்பவர்கள் கொஞ்சம் ஆவாரம் பூவை இதில் போட்டு வைத்து விடுங்கள். அங்கம் முழுவதுமே தங்கமாக வலம் வர அருமையான பரிகாரம்.

அதே போல தான் சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த தக்காளி பழத்திற்கும் எதிர்மறலை ஆற்றலை அழிக்கும் தன்மை உண்டு. திருஷ்டி சுற்றும் பொருட்களில் இனி உங்களுடைய வீட்டில் இந்த தக்காளி பழமும் சேரட்டும். சந்தோஷம் நிறைவாக இருக்கும். பிரச்சனைகள் தூர ஓடிவிடும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -