உங்க நகை பெட்டி முழுவதும் தங்கத்தாலே நிரப்ப வேண்டும் என நினைப்பவர்கள் கொஞ்சம் ஆவாரம் பூவை இதில் போட்டு வைத்து விடுங்கள். அங்கம் முழுவதுமே தங்கமாக வலம் வர அருமையான பரிகாரம்

nagai
- Advertisement -

தங்கம் வாங்க வேண்டும் என்றும் தங்கத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்காதவர்கள் உலகில் ஒருவர் கூட இருக்க முடியாது இதில் ஆண்கள் பெண்கள் என்ற எந்த பாகுபாட்டிற்கும் இடமே கிடையாது. எவ்வளவு நகைகள் சேர்த்தாலும் கூட இன்னும் கொஞ்சம் சேர்க்க வேண்டும் என்று ஆசையை தூண்டக்கூடிய ஒன்றுதான் இந்த தங்க நகைகள். இந்த தங்க நகைகளை அதிகமாக சேர்க்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த ஆவாரம்பூ பரிகாரத்தை செய்து பலன் அடையலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

தங்கம் வாங்க வேண்டும் என்று இருப்பவர் இல்லாதவர் என அனைவரும் ஆசைப்படுவது நியாயமான ஒன்று தான். ஆனால் என்ன தங்கத்தை எல்லோராலும் சேமிக்க முடிவதில்லை வாங்க நினைத்தாலும் அதற்கென எடுத்து வைத்த பணம் வேறு வழியில் செலவழிந்து விடும் சிலரால் அதை வாங்கவே முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். சிலருக்கு நகை வீட்டில் தங்கவே தாங்காது எப்பொதும் அடகு கடையில் தான் இருக்கும். இப்படியானவர்கள் கூட தங்கத்தை எளிமையாக சேர்க்க தங்கத்தை இருக்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

தங்க நகைகள் அதிகமாக சேர ஆவாரம்பூ பரிகாரம்
இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று தொடங்கலாம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயார் உகந்த நாள் தங்கம் வெள்ளி பொன் பொருள் போன்றவை சேர மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் மிகவும் முக்கியம் எனவே வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கலாம் அப்படி இல்லை எனில் பௌர்ணமி நாளில் இந்த பரிகாரத்தை தொடங்கலாம் இரண்டுமே நல்ல பலனை கொடுக்கும்.

இந்த பரிகாரத்திற்கு நீங்கள் வாங்க வேண்டிய ஒரே பொருள் ஆவாரம் பூ மட்டுமே உங்கள் வீட்டில் அருகில் ஆவாரம் பூ கிடைக்கும் என்றால் அதை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது நாட்டு மருந்து கடைகளில் ஆவாரம்பூ காய்ந்ததாக கிடைக்கும் அதை வாங்கிக் கொள்ளலாம். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை காலையிலே செய்ய வேண்டும் என்பதால் நீங்கள் வேடன் இரவே இதை வாங்கி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

வெள்ளி அன்று காலையில் பிரம்ம முகூர்த்த வேலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு பூஜையறையில் அன்றைய தின பூஜைகளை எல்லாம் முடித்து விடுங்கள் மறக்காமல் மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் சில்வர் தவிர்த்து வேறு எந்த கிண்ணம் ஆனாலும் எடுத்துக் கொள்ளலாம். இந்த கிண்ணத்தில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் ஆவாரம் பூவை முழுவதுமாக நிரம்பும் படி கொட்ட வேண்டும் எனவே நீங்கள் வாங்கி வைத்திருக்கும் பூவின் அளவிற்கு ஏற்றார் போன்றதொரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அத்துடன் அதில் ஒரே ஒரு சிறிய குண்டுமணி அல்லது தங்கத்தை போட வேண்டும் இது அவசியம்.

இந்த கிண்ணத்தை பூஜை அறை வரவேற்ப்பறை அல்லது நீங்கள் பணம் வைக்கும் இடம் நகை வைக்கும் இடம் என எங்கு வேண்டுமானாலும் வைத்து விடலாம் தவறில்லை ஆவாரம் பூ தங்கத்தையும் சொர்ண தேவதையும் வசியப்படுத்தக்கூடிய தன்மை உண்டு இந்த மலருடன் நீங்கள் தங்கத்தை சேர்த்து வைக்கும் போது அது இருக்கும் இடத்தில் சொர்ண ஆகாசனம் அதிகமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் நீங்கள் எப்பேர்பட்ட வெளியில் சொல்ல முடியாத பிரச்சனையில் இருந்தாலும் அதிலிருந்து வெளிவர ஆஞ்சநேயரை இப்படி வழிபாடு செய்யுங்கள். மலை போல் வந்த துன்பம் கூட பனி போல உருகி விடும்.

இப்படி வைத்திருக்கும் இடத்தில் தங்கம் அதிகம் அளவு சேர்வதுடன் உங்களின் தங்க நகைகள் அடமானத்தில் இருந்தாலும் கூட அதையும் விரைவில் மூட்டக்கூடிய வாய்ப்புகள் பெருகும். ஆவாரம் பூ காய்ந்த மலராக நீங்கள் கிண்ணத்தில் வைத்தால் வாரத்திற்கு ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று இதை மாற்றினால் போதும் அல்லது அப்போது பறித்த ஆவாரம் பூவை தான் அதில் போட்டு வைத்திருக்கிறீர்கள் என்றால் வாடியவுடன் எடுத்து விட வேண்டும் வாடிய பூக்களை அதில் வைக்கக் கூடாது. இந்த ஆவாரம் பூ பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து தங்க நகைகளை அதிகமாக வாங்கி குவிக்கும் யோகத்தை பெறலாம் என்று தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -