உங்க பிரச்சனைகளுக்கு எல்லாம் முடிவு கட்ட, இந்த ஒரு ரூபாய் போதும். உங்க வாழ்க்கையில் ஒரு முறை இதை மட்டும் செஞ்சுடுங்க இனி நீங்க தொட்டதெல்லாம் ஜெயம் தான்.

- Advertisement -

வாழ்க்கை என்றால் பிரச்சனைகள் இருக்கத் தான் செய்யும். பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் உலகத்தில் யாரும் கிடையாது. சில சமயங்களில் இந்த பிரச்சனைகள் அளவுக்கு அதிகமாக சென்று நாம் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நின்று விடுவோம். இது போன்ற சமயங்களில் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு மனிதன் உயிர்ப்புடன் இருக்கிறான் என்பதை உறுதி செய்வதே, அவன் ஒவ்வொரு நாளும் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சமாளித்து வெற்றி காண்கிறான் என்பதில் தான் இருக்கிறது. இருப்பினும் நம்மையும் மீறி நடக்கும் சில காரியங்களுக்கு நம்மால் இதற்கு மேல் முடியாது என்று திணறும் சமயங்களில் ஒரு சில தாந்திரீக பரிகாரங்களின் மூலம் அதிலிருந்து வெளி வரலாம். அப்படியான ஒரு பரிகாரம் தான் இந்த ஒரு ரூபாய் நாணயம் பரிகாரம்.

- Advertisement -

கஷ்டம் தீர ஒரு ரூபாய் பரிகாரம்:
இந்த பரிகாரம் செய்வதற்கு நீங்கள் அதிகமாக எதையும் வாங்க வேண்டியது இல்லை செலவும் செய்ய வேண்டியதில்லை. இந்த பரிகாரத்திற்கு ஒரு நல்ல வெற்றிலையை காம்புடன் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தது ஒரு ரூபாய் நாணயம் ஒரு ஏலக்காய், ஒரு விரலி மஞ்சள் இது மட்டுமே தேவை.

இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். மேற்கூறியவற்றையெல்லாம் தயாராக எடுத்து வைத்துக் வைத்துக் கொண்டு உங்கள் பூஜை அறையில் அமர்ந்து வெற்றிலையின் மீது ஒரு ரூபாய், விரலி மஞ்சள், ஏலக்காய் இவற்றையெல்லாம் ஒன்றாக வைத்து ஒரு மஞ்சள் நூலில் முடிச்சாக கட்டி விடுங்கள். இதை எடுத்து வைக்கும் போதும் கட்டும் போதும் நீங்கள் அந்த நேரத்தில் எந்த பிரச்சனையால் ஊழன்று கொண்டு இருக்கிறீர்களோ அது சரியாக வேண்டும் என்று அல்லது உங்களுக்கு வேறு ஏதேனும் தேவைகள் இருப்பினும் அதையும் சொல்லி வேண்டியபடி அந்த முடிச்சை கட்ட வேண்டும்.

- Advertisement -

உங்கள் வீட்டின் அருகில் அல்லது ஆலயங்களில் மிகவும் பழமையான அரசமரம் இருந்தால் அங்கு இந்த முடிச்சை எடுத்துச் சென்று அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றிய பிறகு இந்த முடிச்சை அந்த மரத்தின் அடியில் வைத்து உங்களுடைய வேண்டுதலை பலிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு, முடிச்சை அங்கேயே வைத்து விட்டு, திரும்பி வந்து விடுங்கள். அரச மரத்தடியில் இந்த முடிச்சை வைக்கும் போது மாலை 6 மணிக்குள் வைத்து விட வேண்டும். அதற்கு மேல் விருச்சகங்களிடம் சென்று வேண்டுதல் வைத்தால் அது பலிக்காது என்று சொல்வார்கள்.

இதை உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டும் செய்தால் போதும். இதில் நாம் கவனித்து செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் நீங்கள் கொண்டு சென்று வைக்கும் அந்த மரமானது பழமை வாய்ந்த மரமாக இருக்க வேண்டும். நிறைய இடங்களில் மரங்களுக்கு விளக்கேற்றி பூஜை செய்து பரிகாரங்கள் எல்லாம் செய்வார்கள். அது போன்ற மரத்தின் அடியில் தான் இந்த முடிச்சை வைக்க வேண்டும்.

உங்கள் வாழ்வில் இருக்கும் கெட்டவற்றையெல்லாம் நீக்கி நீங்கள் விருப்பப்பட்ட அனைத்தும் உங்களைத் தேடி வரவும், உங்கள் பிரச்சனைகள் நீங்கி நல்லதொரு வாழ்க்கை வாழுவும் இந்த பரிகாரம் ஒரு நல்ல தீர்வாக அமையும் என்ற கருத்து இந்த பதிவையும் முடிவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -