உங்களைச் சுற்றி ஓர் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் அனைத்தும் நொடி பொழுதில் காணாமல் போக இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும். துன்பக் கடலில் தத்தளிப்பவர்களின் துயர் நீக்கும் எளிமையான தீப பரிகாரம்.

ragu dheepam
- Advertisement -

இப்போதெல்லாம் பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்கவே முடிவதில்லை பெரியவர்கள் முதல் சிறியவர் வரை ஏதேனும் ஒரு பிரச்சனையை சுமந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதிலிருந்து வெளிவர முடியாமல் பிரச்சனைக்குள்ளே உழன்று போகிறவர்கள் தான் இன்றைய காலகட்டத்தில் அதிகம். இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து அதில் இருந்து வெளிவர கூடிய ஒரு அற்புதமான தீப பரிகாரத்தை பற்றி தான் இப்போது நாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

பிரச்சனைகளை நினைத்து நாம் கவலை கொள்வதை விட பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்று தான் முதலில் சிந்திக்க வேண்டும். எல்லா பிரச்சனைகளையும் நம்மால் தீர்த்து வைக்க முடியாது. சில பிரச்சனைகளுக்கு தீர்வு கடவுளின் அனுகிரகம் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். சிலர் நீண்ட நாட்களாக நோய்வாய் பட்டு இருப்பார்கள் என்ன மருத்துவம் பார்த்தும் சரியாகாது, குழந்தை பேரு இல்லாமல் இருப்பது, திருமண தடை, வீடு வாசல் இல்லாமல் துன்பப்படும் நிலை இப்படி ஆன பிரச்சனைகளுக்கும் தடைகளுக்கும் இந்த தீபம் ஒரு அற்புதமான பரிகாரம்.

- Advertisement -

தீராத பிரச்சனைகள் தீர தீபம்
இந்த பரிகாரத்தை நாம் தொடங்கும் நாள் செவ்வாய்க்கிழமையாக இருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை தொடங்கி வாரத்தில் மூன்று நாட்கள் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். செவ்வாய்க்கிழமை ராகு கால நேரம், வெள்ளிக்கிழமை ராகு காலம் நேரம், ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரம், இப்படி வாரத்தில் மூன்று நாட்களும் ராகு காலம் நேரத்தில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்தை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஆலயத்திலேயே ஏற்றி கொள்ளலாம். முதல் தீபத்தை துர்க்கை அம்மனை மனதார வேண்டிக் கொண்டு எலுமிச்சை பழ தீபத்தை ஏற்றுங்கள் இல்லையெனில் ஒரே ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினாலும் போதும். உங்களின் எந்த வேண்டுதல் நிறைவேற வேண்டுமோ அதை நிறைவேற்றி தர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு தீபத்தை ஏற்றுங்கள். இந்த தீபத்தை ஏற்றும் போது உங்கள் வேண்டுதல் நிறைவேறினால் மனதில் எவ்வளவு மகிழ்ச்சி அடையுமோ அதே மகிழ்ச்சியுடன் தீபத்தை ஏற்ற வேண்டும்.

- Advertisement -

துர்க்கை அம்மனுக்கு தீபத்தை ஏற்றி வழிபட்டு பின்பு அங்கு பைரவருக்கு ஒரு தீபத்தை ஏற்றி விடுங்கள். அவருக்கு ஏற்றி வணங்கிய பிறகு நவகிரகத்தில் உள்ள ராகு பகவானின் நினைத்து இந்த விளக்கை ஏற்றி விடுங்கள். ராகு கால நேரத்தில் மூன்று பேருக்கும் மூன்று அகல் விளக்கு தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஒரு மாதம் தொடர்ந்து போடும் போது உங்களுடைய வேண்டுதலானது நிறைவேற கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

இந்த தீபத்தை நான்கு மாதங்கள் தொடர்ந்து ஏற்ற வேண்டும். நான்கு மாதங்கள் முடியும் போது இந்த தெய்வங்களுக்கு நன்றி சொல்லும் விதமாக அர்ச்சனை, அபிஷேகம், வஸ்திரங்கள் வாங்கிக் கொடுப்பது இப்படி உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்த பின்பு இல்லாதவர்களுக்கு உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு உதவியை செய்யுங்கள்.

இதையும் படிக்காலமே: இன்று சோமவார பிறை தரிசனம்! இன்று மாலை பிறை நிலவை பார்த்துவிட்டு இந்த 2 பொருளை கொண்டு போய் பீரோவில் வைத்தால் சகல ஐஸ்வர்யமும் வசியமாகும்.

வாழ்க்கையில் எப்போதும் துன்பத்திலும் துயரத்திலும் இருப்பவர்கள் இந்த தீப பரிகார முறையை பயன்படுத்திக் கொண்டு தெய்வங்களின் அனுகிரகத்தையும் ஆசிர்வாதத்தையும் பெற்று வாழ்க்கையில் சகல சௌபாக்கியத்தோடு வாழலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை முடிவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -