இரண்டு ஏலக்காயை வைத்து விநாயகரை எளிமையாக இப்படி வழிபாடு செய்தால் எப்பேர்பட்ட பிரச்சனைகள், துன்பங்கள், மனக்குழப்பங்கள், வேதனைகள் அனைத்தையும் போக்கி இன்பமாக வாழ வைப்பார்.

vinayagar elakkai
- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சுமந்து கொண்டு தான் வாழ்கிறான். பிரச்சனைகள் இல்லாத மனிதர் என்று ஒருவரை கூட நம்மால் அடையாளம் காட்ட முடியாது தான். அதற்காக எப்பொழுதுமே பிரச்சினை உடனே வாழ்ந்து கொண்டிருந்தாலும் அந்த வாழ்க்கையில் கொஞ்சமும் நிம்மதி இருக்காது. இன்று நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயல்களுக்கும் நம்முடைய கர்ம வினைகளின் பலன் தான். இந்த கர்மவினைகளின் தாக்கங்கள் குறைந்து நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்க ஒரு எளிய வழிபாடு முறை பற்றி மிகவும் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

மனக் குழப்பங்கள் பிரச்சனைகள் தீர விநாயகர் வழிபாடு
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் முழு முதற் கடவுள் எனில் அது விநாயகர் பெருமான் தான். கடவுள்களிலே மிகவும் எளிமையான கடவுளாகவும் எளிமையான வழிபாட்டு முறையிலும் நம்முடைய குறைகளை தீர்த்துக் கொள்ள முடியும் எனில் அதுவும் இந்த விநாயகர் தான். ஆகையால் தான் ஒருவருக்கு துன்பம் என்று வரும் வேளையில் இவரை தேடி சென்று வணங்க வேண்டிய அவசியம் இல்லாமல் நின்ற நிலையிலே ஒரு கணம் நினைத்தாலே போதும் அவர்களின் துன்பத்தை அனைத்தும் தீர்க்கக் கூடியவராக இருக்கிறார். ஆகையால் தான் திரும்பும் திசையெல்லாம் இவரின் ஆலயங்களை நிறைந்து இருக்கிறது.

- Advertisement -

இத்தகைய சக்தி வாய்ந்த விநாயகரை நாம் எளிமையாக வழிபடுவதன் மூலம் நம்முடைய குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் மன குழப்பங்கள் சண்டை சச்சரவுகள் தீராத வியாதிகள் கடன் சுமை என எப்பேர்பட்ட தொல்லையிலிருந்தும் எளிதாக நம்மளை வெளியேற்றி காப்பாற்றி விடுவார். இந்த வழிபாடு முறையை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். இதை தொடங்கும் நாளிலிருந்து தொடர்ந்து 48 நாட்கள் வரை செய்யுங்கள்.

இந்த வழிபாட்டை செய்ய நீங்கள் பெரிதாக எந்த செலவையும் செய்ய வேண்டாம். தினமும் காலையில் எழுந்ததும் குளித்து முடித்த பிறகு விநாயகர் படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு தீபத்திற்கு முன்பாக ஒரு சிறிய தட்டை வைத்து அதில் இரண்டே ஏலக்காய் மட்டும் வைத்து உங்களுடைய பிரச்சனைகள் எதுவோ அது தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இவ்வளவு தான் வழிபாடு. இதை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக விலகி செல்வதை நீங்களே கண்கூடாக காண்பீர்கள்.

- Advertisement -

அதன் பிறகு இவருக்கு வைத்து படைத்த இந்த ஏலக்காவை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது சமையலிலும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த விநாயகரை கடன் தீரவும் எளிமையான முறையில் வழிபடலாம் அதற்கு தோரண கணபதியின் புகைப்படத்தை வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த கணபதிக்கு நெய்வேத்தியமாக கொஞ்சம் பச்சரிசி நாட்டுச்சர்க்கரை ஏலக்காய் மூன்றையும் ஒன்றாக கலந்து வைத்து படைத்து வேண்டிய பிறகு இதை பசுமாட்டிற்கு தானமாக கொடுத்து விடுங்கள்.

இந்த முறையில் தோரண கணபதி வழிபட்டு வரும் போது உங்களுக்கு இருக்கும் எப்பேர்பட்ட பிரச்சனைகளும் கடன் தொல்லைகளும் விரைவில் தீர்ந்து விடும். இந்த வழிபாட்டை நீங்கள் தினந்தோறும் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது வாரத்திற்கு ஒரு நாள் செவ்வாய்க்கிழமை அன்று செய்தால் மட்டும் போதும். கடன் என்ற சொல்லே இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.

இதையும் படிக்கலாமே: பிரிந்து விடலாம் என்ற எண்ணம் கொண்ட கணவனும் மனைவியும் நரசிம்மரை இப்படி வழிபட்டால் அந்த எண்ணம் மாறி ஒற்றுமையுடன், சந்தோஷமாக வாழ்வார்கள்.

நம்முடைய பிரச்சனைகள் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பமாய் வாழ விநாயகரை இப்படி எளிமையான முறையில் பூஜித்து வந்தாலே போதும் இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருந்தால் நீங்களும் இது போல செய்து பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -