வாழ்க்கையில் நீங்கள் எப்பேர்பட்ட வெளியில் சொல்ல முடியாத பிரச்சனையில் இருந்தாலும் அதிலிருந்து வெளிவர ஆஞ்சநேயரை இப்படி வழிபாடு செய்யுங்கள். மலை போல் வந்த துன்பம் கூட பனி போல உருகி விடும்.

- Advertisement -

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பிரச்சனைகள் என்பது இருக்கத் தான் செய்யும். பிரச்சனைகள் நம்முடைய கை மீறியதாகவும் நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் நேரங்களில் நாம் தெய்வத்தை சரணடைவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு சென்று விடுவோம். அது போன்ற சமயங்கள் அந்த சிக்கல்கள் இருந்து நம்மை காக்கக் கூடிய தெய்வமாக விளங்குபவர் ஆஞ்சநேயர். அவரை எப்படி வழிபட்டால் பிரச்சனைகளிலிருந்து நாம் சுலபமாக வெளிவரலாம் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொருவருக்கும் பிரச்சனை ஒவ்வொரு விதமாக இருக்கும் ஒரு சிலருக்கு பண பிரச்சினை, சிலருக்கு உடல் பிரச்சினை, சிலருக்கு திருமணம் ஆகாமல் இருக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பேறு இல்லாமல் இருக்கும். இப்படி உங்கள் வாழ்க்கையில் எந்த விதமான பிரச்சனைகள் இருந்தாலும் அதை தீர்ப்பதற்கான முயற்சிகளை மட்டுமே நம்மால் எடுக்க முடியும் பலனை கொடுத்து அதை தீர்க்கக் கூடிய இடத்தில் இருப்பது தெய்வங்களே.

- Advertisement -

இப்படி எந்த வகையான பிரச்சனைகள் இருந்தாலும் அதை தீர்க்கக் கூடிய சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குபவர் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயர் வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது பயம், பிணி, கடன் அனைத்தும் நீங்கி விடும். இத்தகைய சக்தி வாய்ந்த ஆஞ்சநேயரை இந்த முறையில் வழிபடும் போது நம்முடைய துயரங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன வழிபாடு என்பதை தான் இப்போது பார்க்க போகிறோம்.

பிரச்சனைகள் தீர ஆஞ்சநேயர் வழிபாடு:
இந்த வழிபாட்டை நாம் வியாழக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். வியாழக்கிழமை அன்று காலை 8 லிருந்து 9 மணிக்குள்ளாக உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று 27 அகல் தீபங்கள் நெய் ஊற்றி ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை காலையிலே ஏற்ற வேண்டியதால் அகல், நெய், திரி, முதலியவற்றை எல்லாம் முன்னரே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தீபம் ஏற்றும் அந்த நேரம் சரியாக ஆலயத்திற்கு சென்று ஏற்றி விடுங்கள். இந்த நேரம் தவறக் கூடாது என்பது மிகவும் முக்கியமானது.

- Advertisement -

நீங்கள் எப்பேர்பட்ட சிக்கலில் இருந்தாலும் சரி, வெளியில் யாரிடமும் சொல்ல முடியாத மனவேதனையில் தவித்தாலும் சரி, ஆஞ்சநேயரை நினைத்து இந்த தீபம் ஏற்றி வழிபடும் போது உங்கள் சகல விதமான பிரச்சனைகளையும் நீக்கி நிம்மதியான வாழ்க்கையை அளிப்பார்.

இதையும் படிக்கலாமே: சகல தெய்வங்களின் அருளையும் ஒரு சேர பெற இந்த ஒரு படத்தை பூஜை அறையில் வைத்து இப்படி வழிபட்டாலே போதும். அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதற்குரிய பலன் நமக்கு கிடைக்கும்

நம்பிக்கையுடன் இந்த ஆஞ்சநேயர் வழிபாட்டையும் இந்த தீப முறையையும் கடைபிடித்து உங்கள் வாழ்க்கையில் உள்ள துன்பங்களை எல்லாம் தூர எரிந்து நிம்மதியாக சந்தோஷமான வாழ்க்கையை வாழ வழி தேடி கொள்ளலாம் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -