சகல தெய்வங்களின் அருளையும் ஒரு சேர பெற இந்த ஒரு படத்தை பூஜை அறையில் வைத்து இப்படி வழிபட்டாலே போதும். அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதற்குரிய பலன் நமக்கு கிடைக்கும்

Poojai arai
- Advertisement -

நாம் பலவிதமான தெய்வங்களை வணங்குகிறோம். அதில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்திகள் இருக்கும். ஒவ்வொரு வேண்டுதலுக்காகவும் நாம் ஒவ்வொரு தெய்வத்தை வழிபடுவோம். ஆனால் இப்படி தனித்தனியாக ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபடுவதற்கும் பதிலாக, அனைத்து தெய்வங்களையும் ஒரு சேரப் பெற்றிருக்கும் காமதேனுவை முறையாக வழிபட்டாலே நமக்கு அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதற்குரிய பலன் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் காமதேனு படத்தை நம் வீட்டில் எவ்வாறு வைத்து வழிபட வேண்டும் என்று தான் ஆன்மிகம் சார்ந்த இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

காமதேனு பசுவின் உடலையும், பெண்ணின் முகத்தையும், இரண்டு இறக்கைகளையும் கொண்ட அமைப்பில் இருக்கும். இந்த காமதேனுவை நாம் நன்மை பயக்கும் தேவதையாக வழிபடுகிறோம். காமதேனுவின் உருவமான பசுவை நாம் நம் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளிலும், கோவிலில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளிலும் அழைத்து வந்து கோ பூஜை செய்கிறோம். இவ்வாறு கோ பூஜை செய்வதால் அனைத்து தெய்வங்களையும் பூஜிப்பதற்கு சமம் என்று கருதப்படுகிறது. அப்படிப்பட்ட காமதேனுவின் படத்தை நம் வீட்டில் நாம் வைத்து தினமும் பூஜிப்பதால் நமக்கு நன்மைகள் ஏற்படும் அல்லவா….

- Advertisement -

பொதுவாக காமதேனுவை படமாகவோ அல்லது சிலையாகவோ வைத்து பூஜிப்பார்கள். அதே சமயம் காமதேனுவை எந்திர வடிவத்தில் வைத்து பூஜிக்கும் பொழுது அதன் பலன் நமக்கு அதிகமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. வீடுகளில் வைத்து பூஜிக்கும் பொழுது காமதேவனுவின் படத்தை வைத்து பூஜிக்க வேண்டும் என்றும், தொழில் ஸ்தாபனங்களில் எந்திர வடிவத்தில் வைத்து பூஜிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. காமதேனுவின் படத்தை வாங்கும் பொழுது காமதேனு அதன் கன்றுடன் இருப்பது போலவோ அல்லது கன்று பால் குடிப்பது போலவோ இருக்குமாறு வாங்க வேண்டும்.

காமதேனு படத்தை வைக்கும் முறை:
காமதேனுவின் படத்தை நம் வீட்டு பூஜை அறையில் கிழக்கு பார்த்தவாறு வைக்க வேண்டும். மேலும் காமதேனு படத்திற்கு மேலாகவோ, கீழாகவோ வேறு எந்த தெய்வங்களின் படங்களையும் வைக்கக் கூடாது. தினமும் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து காமதேனுவை பார்த்து மனதார நாம் பிரார்த்தனை செய்து கொண்டு நம்முடைய அன்றாட வேலைகளை தொடங்கும் பட்சத்தில் நாம் செய்யக்கூடிய அனைத்து காரியங்களிலும் நமக்கு வெற்றிகள் கிட்டும்.

- Advertisement -

காமதேனு பூஜை செய்யும் முறை:
காமதேனு பூஜை செய்வதற்கு வெள்ளிக்கிழமை உத்தமமான கிழமையாக கருதப்படுகிறது. இந்த பூஜையை சூரிய உதயம் ஆகும் பொழுது செய்ய வேண்டும். காமதேனுவின் படமாக இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாக ஒரு தாம்பாளத்தை வைக்க வேண்டும். அந்த தாம்பாளத்தில் சிறிது மஞ்சள், குங்குமம், சந்தனம் மூன்றையும் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும். (ஆராத்தி போல்) பிறகு அதில் வெண் தாமரை மலர் ஒன்றை வாங்கி வந்து வைக்க வேண்டும்.

அந்த வெண்தாமரை மலரில் நாம் குங்குமத்தை வைத்து “ஓம் காமதேனுவே நமஹ” என்று 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு தூப தீப ஆராதனை காட்டி பூஜையை முடித்து விட வேண்டும். தாமரையில் போட்ட குங்குமத்தை நாம் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் அந்த குங்குமத்தை நாம் நெற்றியில் வைக்கலாம். பூ வாடியதும் அந்தப் பூவையும், ஆரத்தியையும் கால்படாத இடத்தில் வைத்து விட வேண்டும். சிலையாக வைத்து வழிபடுபவர்கள், அந்த சிலையை தாம்பாளத்தின் நடுவில் வைத்து இந்த பூஜையை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

வீட்டில் நாம் காமதேனு படத்தை வைத்து வழிபடுவதன் மூலம் அனைத்து விதமான செல்வ செழிப்புகளும் நமக்கு ஏற்படும். அஷ்டலட்சுமிகளின் கடாட்சம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமைகள் மேலோங்கும். மன நிம்மதி கிடைக்கும். சிறப்பான வாழ்க்கை அமையும். தொழில் ஸ்தாபனங்களில் வைத்து வழிபடுவதன் மூலம் தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும். தொழில் விருத்தி ஏற்படும். தொழிலில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கவும் வியாபாரம், தொழில் செய்யும் இடங்களில் லாபம் அதிகரித்து வருமானம் பெருகவும் பச்சை கற்பூரத்தை இதில் போட்டு வைத்தால் போதும். பணவரவை அதிகரிக்கும் பரிகாரம்.

காம தேனுவை பூஜிப்பதால் அனைத்து தெய்வங்களையும் பூஜிப்பதற்கு உரிய பலனை பெற்று அனைத்து விதமான நன்மைகளையும் அடைவோம்.

- Advertisement -