துன்பம் விலக சொல்ல வேண்டிய மந்திரம்

sivan manthiram
- Advertisement -

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இன்பம் துன்பம் இரண்டும் கலந்து தான் இருக்கும். இவை கலந்து தான் வாழ்க்கை அதை ஒரு நாளும் மறுப்பதற்கு இல்லை. இன்பம் ஒரு நாள் துன்பம் ஒரு நாள் என்றால் கட்டாயம் எல்லோரும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இன்பம் என்றோ ஒரு நாள் துன்பமே தினந்தினம் அனுபவிக்கிறோம் என்றால் அந்த வாழ்க்கை கடினம் தானே.

அப்படியான வாழ்க்கை முறையில் தான் இன்று பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் வரக் கூடிய துன்பங்களில் இருந்து தப்பித்து இன்பமாய் வாழ பல வழிபாடுகள், பரிகாரங்கள் இருப்பது போல ஒரு சில மந்திர வார்த்தைகள் உண்டு. அதை நாம் தினமும் உச்சரிப்பதால் இந்த துன்பங்கள் விலகி ஓடும் என்று சொல்லப்படுகிறது. அது குறித்த தகவலை மந்திரம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

துன்பம் தீர மந்திரம்

நம்முடைய வழிபாட்டு முறைகளில் மந்திரங்களுக்கு எப்பொழுதுமே அதீத சக்தி உண்டு. நாம் ஒரு விஷயத்தை உளமாற வேண்டி சொல்வதை காட்டிலும் ஒரு முறை மந்திரங்களை சொல்லி வேண்டுவது பல வகையில் பலனை தரும். ஆகையால் தான் அனைத்து வழிபாடுகளும் மந்திரத்தைக் மையமாக கொண்டே செய்யப்படுகிறது. இந்த மந்திரங்களுக்கு அத்தனை சக்தி உள்ளது.

அப்படியான ஒரு மந்திரத்தை தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த மந்திரத்தை நாம் தினமும் உச்சரிப்பதனால் நம்மை தொடரும் துன்பங்கள் அனைத்தும் விலகி விடும் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி வாழ்க்கையில் இருக்கும் தடைகள் நீங்கி முன்னேற்ற பாதையிலும் செல்லலாம்.

- Advertisement -

ஓம் நமோ பரமேஸ்வராய நமக

என்ற இந்த மந்திரத்தை மார்ச் மாதம் முடிவதற்குள் 5001 முறை சொல்ல வேண்டும். பெண்கள் மாதவிலக்கான நேரத்தில் சொல்ல வேண்டாம். அதே போல் வெளியில் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது இதை சொல்லக் கூடாது.

ராகுகாலம், எமகண்டம் போன்ற நாட்களிலும் அசைவம் சாப்பிடும் நாட்களிலும் இந்த மந்திரத்தை சொல்லக் கூடாது. இதை தவிர்த்து மற்ற நாட்களில் நீங்கள் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். இதை சொல்ல சொல்ல உங்களுடைய மனோ தைரியம் அதிகரித்து இறையருள் கிடைத்து வரக்கூடிய துன்பங்களை எதிர்கொள்ளக்கூடிய பக்குவங்களும் அதை தடுத்து செயலாற்றக்கூடிய ஞானமும் பிறக்கும்.

- Advertisement -

இதன் மூலம் துன்பங்கள் மறைந்து இன்பமாய் வாழக்கூடிய யோகங்களும் உங்களுக்கு ஏற்படக்கூடிய தடைகளும் நீங்கி வாழ்க்கையில் நல்ல ஒரு முன்னேற்றத்தை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த மந்திரத்தை இந்த மாதம் மட்டும் தான் சொல்ல வேண்டுமா? என்றால் இந்த மாதம் மட்டும் தான் சொல்ல வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பணம் சேர கற்பூர பரிகாரம்

ஒரு சில மந்திரங்களை குறிப்பிட்ட காலத்தில் சொல்லும் போது அதற்கான பலன் அதிகம். இந்த மந்திர வழிபாடு குறித்த தாந்த்ரீக பரிகாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்கள் முயற்சி செய்து பார்த்து நல்ல பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -