மீளா துன்பத்திலிருந்து மீள மந்திரம்

kastam theera
- Advertisement -

நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் கடினமான சூழ்நிலைகள் என்ற ஒரு காலம் நிச்சயமாக இருக்கும். அது எந்த மாதிரியான துன்பமாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக வேலை செய்யும் இடங்களில் அல்லது சில நேரங்களில் வீட்டுக்களிலும் கூட தவறேதும் செய்யாமல் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவோம்.

நாம் எத்தனை சொன்னாலும் அவர்கள் புரிந்து கொள்ளாது நம்மை காயப்படுத்தி விடுவார்கள். இது போன்ற சூழ்நிலைகளை கட்டாயம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அனுபவித்து இருப்போம். அப்படியான சூழ்நிலையில் நாம் துர்க்கையின் இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இதன் மூலம் நம்மை தவறாக புரிந்து கொண்டு குற்றம் சாற்றியவர்களே நம்மை சரியாகப் புரிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. அதைப் பற்றி மந்திரம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

துன்பத்திலிருந்து மீள மந்திரம்

இந்த வழிபாடு நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம். காலை மாலை இரண்டு நேரத்திலும் செய்யலாம் முடிந்த வரையில் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்வது சிறந்த பலனை கொடுக்கும். இந்த வழிபாடு செய்வதற்கு முதலில் ஒரு சிறிய சூலாயுதத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த சூலாயுதம் வெள்ளி பித்தளை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அது உங்கள் வசதியை பொறுத்து. ஒரு கலச சொம்பு எடுத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். அந்த கலச சொம்பு நிறைய பச்சரிசியை கொட்டி விடுங்கள். அதன் பிறகு சூலாயிரத்துக்கும் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அதை கலசத்தில் நிறுத்தி வையுங்கள்.

இந்த கலசத்தையே அன்னையாக பாவித்து அதற்கு முன்பு ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். நெய்வேத்தியமாக மண்டை வெல்லத்தை ஒரே ஒரு துண்டு வைத்து விடுங்கள் போதும். இப்போதுகலசத்திற்கு முன் அமர்ந்து
கீழ் வரும் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

ஓம் தும் துர்காய நமக

என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். 108 முறை சொல்லும் போதும் செவ்வரளி மலரை அச்சனையாக போடுவது சிறந்தது. அப்படி கிடைக்காத பட்சத்தில் சூலாயுதத்திற்கு மட்டுமாவது செவ்வந்தி பூக்களை வைத்து விடுங்கள். இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வாருங்கள். தினமுமே சூலயுதத்திற்கு செவ்வரளி பூக்களை வைக்க வேண்டும்.

இந்த மந்திரத்தை நீங்கள் சொல்ல சொல்ல உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் அனைத்து வீர துன்பங்களும் அவமானங்களும் கட்டாயமாக மாறக் கூடிய சூழ்நிலை உருவாகும். உங்களை துன்பத்திற்கு ஆளாகிய அவர்களே உங்களிடம் வந்து மன்னிப்பு கோருவார்கள். ஏனெனில் துன்பம் என்று வந்தவர்களை காக்கும் மகிஷாசுர வர்த்தினியாக இருப்பவள் தான் இந்த துர்க்கை.

இதையும் படிக்கலாமே: கடன் தீர முருகன் மந்திரம்

அத்தகைய அன்னையை தினந்தோறும் நினைத்து மனதார வேண்டி உருகும் போது நிச்சயம் நம்மையும் இந்த துன்பத்திலிருந்து காப்பாற்றி கரை சேர்ப்பார் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த மந்திர வழிபாட்டை செய்தால் நிச்சயம் நல்ல பலனை பெறலாம்

- Advertisement -