தினமும் ராகு கால நேரத்தில் துர்கை அம்மனை இவ்வாறு பூஜை செய்து வர நீங்களே ஆச்சரியப்படும் வகையில் அதிசயங்கள் நிகழும்

dhurgai
- Advertisement -

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பலவிதமான பிரச்சனைகள் இருந்து கொண்டிருக்கின்றன ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை ஒவ்வொருவரின் நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொரு சூழ்நிலையை சமாளித்து வருகின்றனர் ஆனால் அனைவரும் எதிர்கொள்கின்ற ஒரே பிரச்சனையை மையமாக இருப்பது பலம் என்ற ஒன்று தான் அவ்வாறு நடந்து விட்டால் எந்த வேதனையையும் முடிந்தவரை சமாளித்து விடலாம் ஆனால் கையில் எதுவும் இல்லாமல் பிரச்சனையை சமாளிப்பது என்பது மிகவும் சிரமமான காரியமாக இருக்கும் இதனால் மன நிம்மதி இல்லாமல் போகும் குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படும் இதற்கு காரணம் ராகு கேது தோஷமாகும் ராகு கேது தோஷம் இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கை அம்மனை ராகு கால நேரத்தில் பூஜை செய்துவர அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் ஆனால் வாரம் தோறும் ராகு கால நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டால் அனைவருக்கும் நல்ல காலம் பிறக்கும் வாரங்கள் இதனை எவ்வாறு செயல்படவேண்டும் என்பதே இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஒருவர் செய்யும் ஒவ்வொரு காரியமும் வெற்றி அடையாமல் தோல்வியில் முடிந்தாலும், அவர்களின் குடும்பசூழல் எப்பொழுதும் மனக் கசப்புடன் இருந்தாலும் அவர்களுக்கு ராகு கேது தோஷம் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இதனை தகுந்த ஒரு ஜாதக வல்லுனரிடம் அவர்களின் ஜாதகத்தை கொடுத்து சரிபார்க்கும் பொழுது தெரிந்து கொள்ள முடியும்.

- Advertisement -

இவ்வாறு தோஷம் உள்ளவர்கள் துர்கை அம்மனை வழிபட்டு வர அந்த தோஷத்தில் இருந்து விடுபட்டு அவர்களின் பிரச்சினைகளுக்கு தகுந்த தீர்வு கிடைக்கும். அவ்வாறு செவ்வாய்க்கிழமை மற்றும் துர்க்கை அம்மனை வழிபடுவதோடு, வாரம் முழுவதும் ஒவ்வொரு கிழமையிலும், ஒவ்வொரு நேரத்திலும் வரும் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு பூஜை செய்து வந்தால் நீங்கள் எதிர்பாராத பல நல்ல விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்தேறும்.

முடிந்தவரை கோவிலுக்குச் சென்று ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு நெய் விளக்கு தீபம் ஏற்றுவதை தொடர்ந்து செய்து வந்தால் சிறப்பு பலன் கிடைக்கும். அப்படி முடியாதவர்கள் வீட்டில் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.

- Advertisement -

ஆனால் முடிந்தவரை கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றினால் மட்டுமே நீங்கள் விரைவான பலனை பெற முடியும். அவ்வாறு கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி விட்டு வந்த பிறகு வீட்டில் உள்ள அனைவரையும் ஒன்றாக நிற்க வைத்து சுற்றி போட்டுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு ஞாயிற்றுக் கிழமையில் மாலை நான்கரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றவேண்டும். திங்கட்கிழமை காலை 7 மணி முதல் 9 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும். செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணி முதல் 4 1/2 மணிக்குள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். புதன்கிழமை மதியம் 12 மணி முதல் 1 1/2 மணிக்குள் வழிபட வேண்டும். வியாழக்கிழமை மதியம் 1 1/2 மணியிலிருந்து மூன்று மணிகுள்ளும், வெள்ளிக்கிழமை காலை பத்து முப்பது மணி முதல் 12மணிகுள்ளும், சனிக்கிழமை காலை 9 மணி முதல் பத்து முப்பது மணிகுள்ளும் தீபமேற்றி வழிபட வேண்டும்.

- Advertisement -