துன்பங்கள் எல்லாம் உங்களை விட்டு தொலைதூரம் தலை தெறிக்க ஓட, ஒரே ஒரு துளசி இலை இருந்தால் போதும்.

karunthulasi
- Advertisement -

ஒரே ஒரு துளசி இலையை வைத்து பலவிதமான பலன்களை கொடுக்க கூடிய, பல பரிகாரங்களை இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். மகாலட்சுமி அம்சம் கொண்ட விஷ்ணு பகவானின் அம்சம் கொண்ட இந்த துளசி இலை எந்த இடத்தில் இருக்கின்றதோ, அந்த இடத்தில் எந்த ஒரு கெட்டதும் நெருங்காது. மகாலட்சுமி அம்சம் நிறைந்திருக்கும் அந்த இடத்திற்கே ஒரு பிரகாசமான வெளிச்சம் கிடைக்கும். கஷ்டங்கள் தீர, மனபாரம் குறைய, பண பிரச்சனையில் இருந்து விடுபட, வரக்கூடிய கெடுதலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, துளசி இலையை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

என்ன கவலை என்றே தெரியவில்லை. மனது ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. இரவு படுத்தால் தூக்கம் இல்லை. மன அழுத்தத்திலிருந்து விடுபட துளசி இலையை எப்படி பயன்படுத்துவது. நகம் படாமல் துளசி இலையை, செடியிலிருந்து பறித்துக் கொள்ளுங்கள். இரண்டு அல்லது மூன்று இலை. உங்கள் சௌகரியம். இத்தனை இலைகள் என்ற கணக்கு கிடையாது. துளசி இலைகளை உள்ளங்கைகளில் வைத்து கசக்கினால் அதிலிருந்து நல்ல வாசம் வெளிவரும். வாசம் நிறைந்த இந்த துளசி இலையை பெண்களாக இருந்தால் தலையில் சூடிக்கொள்ளலாம். ஆண்களாக இருந்தால் சிறிது நேரம் காதின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வாசம் அப்படியே உங்களுடைய மூக்கிற்கு நிச்சயம் வரும். (காதுக்கு உள்ள வச்சிடாதீங்க. காதுக்கு மேலே சொருகிக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

இரவு இப்படி வைத்துக்கொண்டு அப்படியே தூங்க செல்லலாம். அப்படி இல்லை என்றால் கசக்கிய இலைகளை ஒரு வெள்ளை காட்டன் துணியில் வைத்து சிறிய முடிச்சாக கட்டி தலையணைக்கு பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வாசம் வெளிவரும் படி பார்த்துக் கொள்ளுங்கள். தலையனுக்கு அடியில் வைத்து மூடி வாசத்தை வெளிவராமல் செய்யக்கூடாது. இப்படி செய்தால் மனபாரம் குறையும்.

திடீரென்று ஒரு நல்ல காரியத்திற்காக வெளியே செல்கின்றோம். அந்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு நகம் படாமல் இரண்டு துளசி இலைகளை பறித்து உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது இந்த துளசி இலை உங்களுடைய உடம்பை உரசும் படி வைக்க வேண்டும். பேப்பரில் மடித்து பாக்கெட்டில் எல்லாம் வைக்க கூடாது. உங்களுடைய கையில் வைத்துக் கொள்ளலாம். அல்லது சட்டைக்கு உள்பக்கத்தில் கூட வைத்துக் கொள்ளலாம். ஆடைக்கு உள்ளே மறைத்து வைத்துக் கொள்ளுங்கள். துளசி உங்கள் உடம்போடு உரசி இருக்க, முயற்சிகள் வெற்றியைத் தரும்.

- Advertisement -

சில விஷயங்களுக்கு நமக்கு நேரம் காலம் பார்க்காமல் அப்பாயின்மென்ட் கிடைத்துவிடும். ராகு காலம் எமகண்ட நேரத்தில் நல்ல விஷயங்களை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். கெட்ட நேரத்திலும் நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால், அதாவது ராகுகால எமகண்டதில் நல்ல காரியத்திற்கு கிளம்ப வேண்டும், ட்ரைன் புக் பண்ணிட்டோம், பஸ் புக் பண்ணிட்டோம் என்றால் அந்த சமயம் நீங்கள் வெளியே கிளம்பும்போது இரண்டு துளசி இலைகளை உங்களோடு எடுத்துச் சென்றால் எதிர்மறையான பிரச்சனைகள் எதுவும் வந்து உங்கள் நல்ல காரியத்தை தடுத்து நிறுத்தாது.

தொடர்ந்து பண கஷ்டம் இருக்கிறது. வீட்டில் பணத்தை வைத்தால் அது வீண்விரயம் ஆகிறது என்றால், துளசியிலேயே எப்படி பயன்படுத்துவது. நகம் படாமல் துளசி இலையை பறித்து அதை லேசாக கசக்கினால் வாசம் வரும். அந்த இலையோடு ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து பணம் வைக்கும் பெட்டி, பணம் வைக்கும் பர்ஸ், எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் வைக்கலாம்.

இந்த துளசி இலையை பச்சை கற்பூரத்தோடு சேர்த்து வைத்த இடத்தில் பணம் வந்து சேரும். பண விரயம் குறையும். வருமானம் அதிகரிக்கும். வறுமை நீங்கும். இதுவும் ஒரு சின்ன பரிகாரம் தான். நம்பிக்கையோடு செய்து பாருங்கள். அந்த துளசித்தாய், துளசி தேவி உங்களுடனே இருந்து உங்களுக்கு எல்லாவற்றையும் நல்லதாகவே செய்து தருவாள் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -