தீராத சிக்கலில் சிக்கி தவிக்கும் வேளையில் இந்த தெய்வத்தை ஒரு கணம் மனதார நினைத்தாலே போதும். எப்பேர்ப்பட்ட துன்பமும் வந்த திசை தெரியாமல் ஓடி விடும்.

- Advertisement -

குழப்பம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஏற்படக்கூடிய ஒரு விஷயமாகும். அப்படிப்பட்ட குழப்பம் நம் மனதில் இருக்கும் பொழுது நம்மால் தெளிவான ஒரு முடிவை எடுக்கவே முடியாது. வாழ்க்கை நல்ல வழியில் செல்ல வேண்டும் என்றால் தெளிவான முடிவு எடுக்கும் திறன் நம்மிடம் இருக்க வேண்டும். அந்த திறனை அதிகரிக்கவும், குழப்பங்கள் நீங்கவும் எந்த தெய்வத்தை வழிபடலாம் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பேராற்றல் மிக்க சிவபெருமான் பல அவதாரங்களை எடுத்துள்ளார். அவற்றுள் சாந்தரூபமாக, தியான நிலையில் இருக்கக்கூடிய அவதாரமே தக்ஷிணாமூர்த்தி அவதாரம். இந்த தக்ஷிணாமூர்த்தியை நாம் வழிபடுவதால் நமக்கு எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன.

- Advertisement -

தீராத பிரச்சனைகளில் இருந்து வெளியே வர
பலரும் குரு பகவானும் தக்ஷிணாமூர்த்தியும் ஒருவரே என்று நினைத்து, குரு பகவானுக்குரிய பரிகார முறைகளை தக்ஷிணாமூர்த்திக்கு செய்வார்கள். அது முற்றிலும் தவறான ஒன்று. அவ்வாறு செய்யக்கூடிய தவறுகளில் மிகவும் முக்கியமான தவறு கொண்டைக்கடலை மாலையை தக்ஷிணாமூர்த்திக்கு சாற்றுவது. தக்ஷிணாமூர்த்தி எப்பொழுதுமே ஆழ்ந்த தியானத்தில் இருக்கக்கூடியவர். அவருக்கு நாம் கொண்டைக்கடலை மாலை சாற்றுவதால் அவருடைய தியானம் கலையக்கூடிய நிலை ஏற்படும். ஆதலால் அந்தத் தவறை நாம் எப்போதும் செய்யக் கூடாது.

தக்ஷிணாமூர்த்திக்கு உகந்த கிழமை வியாழக்கிழமை என்றும் ஆதலால் வியாழக்கிழமை தான் தக்ஷிணாமூர்த்தியை வணங்க வேண்டும் என்றும் பலரும் நினைத்திருக்கிறார்கள். அதுவும் தவறான கருத்து. அன்றாடம் நாம் வணங்கும் பொழுது தக்ஷிணாமூர்த்தியை நினைத்து வழிபட வேண்டும். மேலும் தக்ஷிணாமூர்த்தி ஞானத்தின் வடிவமாக திகழ்வதால் அவருக்கு வெண்ணிறம் மிகவும் பிடித்த நிறமாகும். அவருக்கு நாம் முல்லைப் பூ மாலை சாற்றி வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது. வெண்ணிறத்தில் ஆன பிரசாதங்களை நெய்வேத்தியமாக படைக்கலாம். வெண்ணிற ஆடைகளை சாற்றலாம்.

- Advertisement -

உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று தக்ஷிணாமூர்த்தியின் பாதங்களை பார்த்து நம்முடைய கோரிக்கைகளை நாம் வைக்க வேண்டும். மேலும் அவர் இருக்கும் இடத்தில் அமர்ந்து அவரை போலவே நாமும் சிறிது நேரம் தியான நிலையில் இருந்தால் தக்ஷிணாமூர்த்தியின் பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பெரிய பெரிய பதவி, பணம், அந்தஸ்து இவையெல்லாம் தானாக உங்களைத் தேடி வந்து செல்வாதிபதியான வாழ்க்கையை நீங்கள் வாழ நினைத்தால் ஏலக்காயை தினமும் இப்படி பயன்படுத்துங்கள்.

தக்ஷிணாமூர்த்தியை நாம் இவ்வாறு வழிபடுவதால் நம் மனதில் ஏற்படக்கூடிய குழப்ப நிலை மாறும். தெளிவான அதே சமயம் திறமையான முடிவு எடுக்கும் ஆற்றலை தட்சிணாமூர்த்தி நமக்கு வழங்குவார். குழந்தைகள் கல்வியில் மேன்மை அடைய இவரை வழிபடலாம். மேலும் அவர் ஞானத்தை உபதேசிக்கும் நிலையில் இருக்கும் குரு அம்சம் என்பதால் நமக்கு தெளிவான அறிவு ஏற்படும். அதனால் நம்முடைய வாழ்க்கை சீரும் சிறப்புடனும் இருக்கும்.

- Advertisement -