துன்பம் வரும் பொழுது கடவுள் உங்கள் கண்முன்னே வந்து நிற்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? துயர் தீர்க்கும் பதிகம்!

sivan-mantra
- Advertisement -

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான துயரங்களும், துன்பங்களும் வந்து கொண்டிருக்கும். இன்பமும், துன்பமும் சேர்ந்தது தான் வாழ்க்கை எனவே இன்பத்தை ஏற்றுக் கொள்ள தெரிந்த நமக்கு துன்பத்தையும் ஏற்றுக் கொள்ள தெரிய வேண்டும். கஷ்டம் என்று வரும் பொழுது மட்டுமே கடவுளை தேடுவதும், சந்தோஷம் வரும் பொழுது அவரை மறந்து விடுவதும் மனித இயல்பாகிப் போனது. துன்பத்தில் நீங்கள் இறைவனை வேண்டும் போது நேரடியாக இறைவன் இந்த கண்முன்னே வந்து நிற்க செய்யக் கூடிய அற்புத திருப்பதிகம் பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

1.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே!!!

- Advertisement -

2.
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே!!!

3.
ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளாத சுரையோ தொழும்பர் செவி
வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே!!!

- Advertisement -

4.
நடலை வாழ்வு கொண்டு என் செய்தீர் நாணிலீர்
சுடலை சேர்வது சொல் பிரமாணமே
கடலின் நஞ்சு அமுது உண்டவன் கைவிட்டால்
உடலினார் கிடந்தூர் முனி பண்டமே!!!

5.
பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
காக்கைக்கே இரையாகிக் கழிவரே!!!

- Advertisement -

6.
குறிகளும் அடையாளமும் கோயிலும்
நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியீலீர் மனம் என்கொல் புகாததே!!!

7.
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடுங்காலமே!!!

8.
எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான்
தொழுது போற்றி நின்றேனையும் சூழ்ந்து கொண்டு
உழுத சால் வழியே உழுவான் பொருட்டு
இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே!!!

9.
நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடை புண்ணியன்
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே!!!

10.
விறகில் தீயினன் பாலில் படுநெய் போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவுக் கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே!!!

இறைவன் நம் கண்முன்னே தெரிவது இல்லை, எப்பொழுதும் மறைபொருளாகவே இருக்கும் இறைவன் நம் கண்முன்னே தெரிவதற்கு, விறகில் மறைந்திருக்கும் தீயை போல, பாலுக்குள் இருக்கும் நெய்யை போல, தீட்டாத மாணிக்கத்திற்குள் இருக்கும் பிரகாசத்தை போல மறைந்தே இருக்கும் இந்த இறைவனை நாம் அடைவதற்கு பக்தி என்னும் உறவாகிய மத்தினை நட்டு, உணர்வு எனும் கயிறை கொண்டு அதனை இறுக கட்டிக்கடைந்தால் மறைந்திருக்கும் இறைவன் நம் கண் முன்னே தோன்றுவான் என்பது பாடலின் பொருளாகும். தீராத துயரங்கள் நம்மை ஆட்கொள்ளும் பொழுது இந்த திருப்பதிகத்தை பாடினால் நமக்குள் ஒரு அதிசயம் நடக்கும், அந்த அதிசயம் துன்பங்களை போக்கி அதனை எதிர்கொள்ளும் தைரியத்தை கொடுக்கும், முயன்று பாருங்கள்.

- Advertisement -