எலுமிச்சம் பழத்தில் இதை மட்டும் தடவி வரவேற்பு அறையில் வைத்தால், கெட்டதை எல்லாம் இந்த ஒரு பழம் ஈர்த்துக் கொள்ளும்.

lemon
- Advertisement -

இன்று பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த போகும் பழம் எலுமிச்சம்பழம். எலுமிச்சம் பழத்தை வைத்து நாம் எவ்வளவு பெரிய பரிகாரத்தை வேண்டும் என்றாலும் சுலபமாக செய்யலாம். கடைகளில் சுலபமாக காசு கொடுத்தால் இந்த பழம் கிடைத்துவிடும். ஆனால் இந்த பழம் யார் கையில் இருக்கிறது என்பதில் தான் சூட்சமமே மறைந்திருக்கிறது. அம்மன் பாதங்களில் இருந்தால் எலுமிச்சம் பழத்திற்கு நல்ல சக்தி. நம் கையில் இருந்தால் சமைப்பதற்கு அல்லது சாறு பிழிவதற்கோ திருஷ்டி கழிப்பதற்கோ பயன்படுத்துவோம்.

அதுவே ஒரு மந்திரவாதி தந்திரவாதியிடம் இந்த ஒரு எலுமிச்சம் பழம் சிக்கினால் அதை வைத்து அவர்கள் எதை வேண்டுமென்றாலும் செய்ய முடியும். அப்படி ஒரு அதிசய சக்தியை கொண்ட பழம்தான் இந்த எலுமிச்சம் பழம். இந்த எலுமிச்சம் பழத்தை வைத்து இங்கு நம் வீட்டில் நல்லதற்காக ஒரு எளிமையான ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரத்தை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை விரட்ட எலுமிச்சம் பழ பரிகாரம்:
குலதெய்வத்தை நினைத்து ஒரு எலுமிச்சம் பழத்தை கடையிலிருந்து வாங்குங்கள். கரும்புள்ளிகள் இல்லாமல் இருக்கட்டும். அந்த பழத்தை வீட்டிற்கு கொண்டு வந்து சுத்தமான தண்ணீரில் கழுவி துடைத்து விடுங்கள். பூஜை அறையில் வைத்து விட்டு விளக்கு ஏற்றி குலதெய்வத்தை முழு மூச்சுடன் நினைத்து இந்த பழத்தின் மேலே கொஞ்சமாக நல்லெண்ணெயை தடவ வேண்டும்.

நல்லெண்ணெய் தடவிய எலுமிச்சம் பழத்திற்கு மேலே சிவப்பு நிறம் குங்குமத்தை ஒரே ஒரு பொட்டாக விரலில் வைத்து, ஒரு கண்ணாடி கிண்ணத்திலோ, டம்ளரிலோ போட்டு வரவேற்பு அறையில் வைக்க வேண்டும். அதாவது அந்த கிண்ணத்தில் இருக்கும் எலுமிச்சம் பழம் வெளியே தெரிய வேண்டும். மற்றவர்களுடைய கண்ணுக்குத் தெரிந்தாலும் பரவாயில்லை. இது நல்லதுக்காக நம் வீட்டில் வைத்திருக்கக் கூடிய எலுமிச்சம் பழம் தான். திறந்தபடி எப்படி உங்கள் வரவேற்பறையில் வைக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தை வாரம் ஒருமுறை மாற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை செவ்வாய்க்கிழமை எந்த நாளில் வேண்டும் என்றாலும் தொடங்கலாம். அது உங்களுடைய விருப்பம் தான். ஆனால் ஏழு நாட்களுக்கு ஒரு முறை இந்த பழத்தை மாற்ற வேண்டும். உங்களுடைய வீட்டில் நெகட்டிவ் எனர்ஜி அதிகமாக இருந்தால் ஒரு வாரத்திற்குள் இந்த பழம் அழுகிப் போய்விடும். அதுவே வீட்டில் தெய்வ சக்தி இருக்கிறது. வீடு கண் திருஷ்டி இல்லாமல் கெட்ட சக்தி இல்லாமல் நேர்மறை ஆற்றல் நிரம்பி இருக்கிறது எனும் பட்சத்தில் இந்த எலுமிச்சம் பழம் காய்ந்து போகுமே தவிர, கெட்டுப் போகாது.

இதையும் படிக்கலாமே: செல்லும் இடமெல்லாம் உங்களை வெல்ல யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஆளுமை திறனுடன் பேர், புகழ், அந்தஸ்து என செல்வாக்குடன் வாழ இந்த அம்பிகையை வழிபாடு செய்தாலே போதும்.

எலுமிச்சம் பழம் ஒரு வாரத்திற்குள் காய்ந்து போனால் தவறு இல்லை. நீங்கள் எலுமிச்சம் பழம் வைத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் அந்த எலுமிச்சம்பழம் அழுகி விட்டால் நிச்சயம் அது தவறுதான். உங்கள் வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியை அந்த எலுமிச்சம் பழம் உறிஞ்சி விட்டது என்று அர்த்தம். உடனடியாக கைப்படாமல் அந்த எலுமிச்சம் பழத்தை கொண்டு போய் வீட்டிற்கு வெளியே போட்டு விட்டு வந்து விடுங்கள். குப்பையிலே தூக்கி போட்டு விடலாம் அவ்வளவுதான். உங்கள் வீட்டை பாதுகாக்க கூடிய இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -