துஷ்ட சக்திகள் நம்மை நெருங்காமல் இருக்க ஒரு சொட்டு இந்த எண்ணெயை மட்டும் உச்சந்தலையில் தடவிக்கோங்க போதும். கண் திருஷ்டி கூட நம் மேல் விழாது.

amman1
- Advertisement -

சின்ன சின்ன குழந்தைகள், வயது வந்த பிள்ளைகள், பெரியவர்கள் என்று சொல்லி எல்லோரும் இப்போது நேரம் காலம் இல்லாமல் வெளியில் சுற்றக்கூடிய சூழ்நிலை. மதியம் உச்சி நேரம் என்று பார்ப்பது கூட கிடையாது. நடு ஜாமம் என்றும் பார்ப்பது கிடையாது. வெளியே சுற்றித் திரிகிறார்கள். இதனால் அவர்களுக்கு கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை சக்திகளால் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எதிர்மறை சக்திகள் என்றால் பெரிய அளவில் பேய் பிசாசு தான் பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. யாராவது வீதியில் எலுமிச்சம் பழம் சுற்றி போட்டு இருப்பார்கள். ஆலம் சுற்றி கரைத்து ஊற்றி இருப்பார்கள். திருஷ்டி சுற்றி மிளகாய் கடுகு போன்ற பொருட்களை போட்டு வைத்திருப்பார்கள். பூசணிக்காய் உடைத்து வைத்திருப்பார்கள். அறியாமல் அதை நாம் மிதித்தோ தாண்டியோ செல்லும் போது, அதில் இருக்கும் எதிர்மறை ஆற்றலால் ஏதாவது ஒரு பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்க ஒரு எளிய பரிகாரத்தை தான் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகின்றோம். அது மட்டுமல்லாமல் நம்முடைய வீட்டுக்குள்ளும் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் வராமல் இருக்க ஒரு பரிகாரத்தையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம். நிலை வாசலில் இந்த ஒரு செடியை நட்டு வளர்த்தால் வீட்டிற்குள் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் வராமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அது எந்த செடி. வாங்க அந்த அருமையான இரண்டு குறிப்புகள் என்னென்ன என்பதை பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

எதிர்மறை சக்திகளிலும் இருந்து நம்மை பாதுகாக்க செய்ய வேண்டிய பரிகாரம்:
முதல் பரிகாரமாக நிலை வாசலில் வைக்கக்கூடிய அந்த செடியை பற்றி தெரிந்து கொள்வோம். நிலை வாசலில் மருதாணி செடியை நட்டு வைத்து வளர்த்தால் வீட்டிற்குள் எந்த ஒரு எதிர்மறை சக்தியும் நுழையாது. கெட்ட எண்ணத்தோடு வரக்கூடிய மனிதர்களுடைய எண்ணங்கள் கூட பாசிட்டிவ் ஆக மாறிவிடும். உங்கள் வீட்டிற்கு ஒரு பாதுகாப்பு கவசம் போல இந்த மருதாணி செடி காவலாக நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தபடியாக நம்மை எதிர்மறை ஆற்றலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உச்சந்தலையில் வைக்க வேண்டிய எண்ணெயைப் பற்றியும் தெரிந்து கொள்வோம். விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் மூன்றையும் சம அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா எண்ணெயிலிருந்தும் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, மிதமாக தீயில் சூடு செய்யவும். இதில் 5 அல்லது 6 மருதாணி இலைகளை போட்டு லேசாக சூடு செய்து அடுப்பை அணைத்து விடுவோம்.

- Advertisement -

இந்த எண்ணெயை ஒரு சின்ன பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சமாக ஆள்காட்டி விரலில் இந்த எண்ணெயை தொட்டு அப்படியே லேசாக உச்சந் தலையில் தடவி விட்டால் போதும். உங்களுக்கான பாதுகாப்பு கவசம் இருக்கும். உங்களைச் சுற்றி ஒரு பாசிட்டிவ் எனர்ஜி எப்போதும் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: தினமும் இந்த எண்ணெயில் சமைத்தால், வீட்டில் நிரந்தரமாக தங்கி தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் கடன், சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே ஓடிடும்.

உங்களுக்குள் எந்த ஒரு நெகட்டிவ் எனர்ஜியும் நுழைய முடியாது. சின்ன சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம் தவறு கிடையாது. தினமும் பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு கூட நீங்கள் இந்த பரிகாரத்தை செய்து அனுப்பலாம். நம்பிக்கை உள்ளவர்கள் மேலே சொன்ன இந்த எளிமையான விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்று கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -