பண பிரச்னைகள் அனைத்தும் நொடி பொழுதில் மறைந்து, தாராளமான பண வரவிற்கு, இந்த பச்சை இலை தீபம் ஏற்றுங்கள் . கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் அதிசய இலை.

- Advertisement -

பணம் என்ற இந்த காகிதம் எப்படி காற்று அடித்தால் நிற்காமல் பறந்து விடுமோ? அதைப் போல தான் நாமும் இந்த பணத்தை நோக்கி பறந்து பறந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படி பாடுப்பட்டாலும் இந்த பணம் நமக்கு நிலையாக நிற்கிறதா என்றால் அதுவும் இல்லை. பெரும்பாலானோரின் பெரிய கவலையே இது தான் என்ன தான் கஷ்டப்பட்டாலும் நம்மிடம் ஒரு ரூபாய் தங்குவதில்லை என்பது தான். இந்த நிலை மாறி நம் கையிலும் நாலு காசு தங்க, நாமும் சில செயல்களை செய்ய தான் வேண்டும். பணம் சம்பாதிக்கும் அனைவரிடமும் இருப்பதில்லையே. இதற்கு ஆன்மீகத்தில் சில வழிமுறைகள் உண்டு அதில் ஒன்றை தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசையில் ஓடா விட்டாலும், இந்த வாழ்க்கையை நல்ல முறையில் வாழ பணம் தேவை என்ற காரணத்திற்காகவே நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சிலருக்கு எதை தொடங்கினாலும் அதில் லாபம் வராது, நாளை கைக்கு பணம் கிடைத்து விடும் இதை செய்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள் கடைசி நேரத்தில் பணம் கைக்கு வராது. இப்படி எல்லாம் கைக்கு வருவது போல் வந்து கடைசியில் இல்லாமல் போய் விடும். இப்படி பணம் வராமல் தடை படும் காரணத்தை சொல்லி கொண்டே இருக்கலாம். இந்த ஒரு தீபத்தை வீட்டில் ஏற்றி வரும் போது உங்களின் காரியத்தடை, பணத்தடை திருஷ்டி உங்கள் வீட்டு சுற்றி இருக்கும் எதிர்மறை எண்ணங்கள், துஷ்டசக்தி போன்ற அனைத்து தீய விஷயங்களும் மறைந்து நல்ல ஆற்றல் வீட்டிற்கும், உங்களுக்கும் கிடைக்கும் அது என்னவென்று பார்க்கலாம்.

- Advertisement -

அதற்கு நீங்கள் வாங்க வேண்டிய ஒரு பொருள் பேய் மிரட்டி இலை. இதற்கு குபேர இலை என்ற பெயரும் உண்டு. இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் இந்த இலை பச்சையாக கிடைத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள் அல்லது காய்ந்த இலையாக கிடைத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள் இரண்டுமே நன்றாகவே எரியும்.

இந்த விளக்கை சனிக்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு, உங்கள் வீட்டு பூஜையறையில் ஏற்ற வேண்டும். அதற்கு முதலில் ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய அகலாக இருந்தாலும் பரவாயில்லை எடுத்து சுத்தமாக கழுவி, அதில் மஞ்சள் குங்குமம் வைத்து கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி இந்த பேய் மிரட்டி இலையை அதில் போட்டு, ஒரு சின்ன தட்டு வைத்து அதன் மேல் இந்த அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த தீபமானது கிழக்கு பார்த்து தான் எரிய வேண்டும்.

- Advertisement -

இப்படி ஏற்றிய தீபத்தின் முன் அமர்ந்து நீங்கள் உங்கள் குறைகளையும், கவலைகளையும் ஏன் உங்களுக்கு ஏதேனும் கனவுகள் இருந்தால் கூட இந்த விளக்கை ஏற்றி வைத்து அதன் முன் அமர்ந்து வேண்டினால் நிச்சயம் நடக்கும். இந்த இலையினால்ஏற்றப்படும் தீபம் உங்கள் வீட்டில் எரியத் தொடங்கும் போது உங்கள் வீட்டில் உள்ள மற்ற தேவை இல்லாத எதிர்மறை சக்திகள் அனைத்துமே மறைய தொடங்கி விடும். உங்கள் கனவு ஆசை எல்லாமே உங்களுக்கு கைக்கு கூட இந்த ஒரு தீபத்தை மறக்காமல் ஏற்றி வாருங்கள்.

இந்த விளக்கு சனிக்கிழமைகளில் மட்டும் ஏற்றினால் போதும் மற்ற நாட்களில் ஏற்ற வேண்டாம். ஏற்றி முடித்த பிறகு இந்த விளக்கில் எரிந்து மிச்சம் இருக்கும் கருகிய இலையை அந்த எண்ணெயிலே குழைத்தால், மை போல கிடைக்கும். அதை நீங்கள் எடுத்து வைத்துக் கொண்டு தினமும் நெற்றியிலும் பொட்டாக வைத்துக் கொள்ளலாம் நீங்கள் போகும் இடத்தில் எல்லாம் உங்கள் காரியத்தை நல்லபடியாக முடித்துக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே:  மகிழ்ச்சி, நிம்மதி, பணவரவு இந்த மூன்றும் எப்போதுமே தடையில்லாமல் கிடைக்க 3-ஆவது வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்து உங்கள் துன்பங்கள் அனைத்தையும் நீக்கி கொள்ளுங்கள். தடை இல்லாமல் பண வரவை பெற்று உங்கள் வாழக்கையை சந்தோசமாக வாழுங்கள்.

- Advertisement -