துவரம் பருப்பு டப்பாவில் இந்த 1 பொருளை போட்டு வைத்தால் வீட்டில் இருக்கும் பெண்கள் கையில் காசு சேர்ந்து கொண்டே இருக்கும்.

thuvaram-paruppu
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் தங்களுக்கு தெரிந்த வேலையை செய்து அவர்களால் முடிந்த பணத்தை சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சில பெண்கள் எல்லாம் ஆண்களை விட அதிகமாகவும் சம்பாதிக்கிறார்கள். சந்தோஷம் தான். ஆனால் வீட்டில் இருக்கும் ஆண்களை விட, பெண்களுக்கு சேமிக்க வேண்டிய பொறுப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. சில ஆண்கள் செலவை கொஞ்சம் தாராளமாக செய்வார்கள். சில வீட்டில் பெண்கள் செலவை தாராளமாக செய்வார்கள். எது எப்படி இருந்தாலும், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொறுப்பு என்பது ஒரு படி அதிகமாக தான் இருக்க வேண்டும்.

பெண்கள் கையில் எப்போதும் காசு தங்க செய்ய வேண்டிய ஒரு சின்ன பரிகாரத்தை பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். புதியதாக நாம் எதுவும் சொல்லப்போவது கிடையாது. அந்த காலத்தில் நம்முடைய அம்மா, பாட்டி எல்லாம் சிலுவான காசு அப்படின்னு சேர்த்து வச்சிருப்பாங்க அதாவது. அவர்கள் கையில் செலவுக்காக கொடுக்கக்கூடிய பணத்தை எல்லாம் முழுமையாக செலவு செய்யாமல், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து போட்டு சேமித்து வைத்திருப்பார்கள். அந்த காசை துவரம் பருப்பு டப்பா, கடுகு டப்பா, மிளகாய் பெட்டி டப்பா என்று சமையலறையில் தான் வைத்திருப்பார்கள்.

- Advertisement -

இந்த டப்பாவில் இருந்து அவர்கள் செலவுக்காக கொஞ்சம் கொஞ்சம் பணத்தை எடுத்தாலும், அதில் பணம் மீண்டும் மீண்டும் சேர்ந்து கொண்டே தான் இருக்கும். இப்படி சமையலறையில் இருக்கும் பணம் காசை மொத்தமாக சேகரித்து எடுத்தால், ஆயிரக்கணக்கில் பெரிய அளவு தொகை இருக்கும் என்றால் பாருங்கள்.

சமையலறையில் இப்படி தானியங்களோடு பணத்தை வைக்கும் போது, பணம் சிறுக சிறுக சிறுக சேரும். பணம் பெருகும் என்பதும் ஒரு நம்பிக்கை. அது உண்மையாகவும் கூட இருந்தது. இன்றளவிலும் பெண்கள் நிறைய பேர் சமையல் அறையில் இப்படி மசாலா டப்பாவில் காசு வைத்திருப்பார்கள். அது ரொம்ப ரொம்ப நல்லது. அப்படி வீட்டில் இருக்கும் துவரம் பருப்பு டப்பாவில் நாம் பணத்தை சேர்த்து வைக்க வேண்டும்.

- Advertisement -

பணம் சேர துவரம் பருப்பு டப்பாவில் எப்போதும் ஒரு சுக்கு இருக்க வேண்டும். துவரம் பருப்பில் படும் படி சுக்கை வைத்து விடுங்கள். ஒரு சின்ன கவர் எடுத்துக்கோங்க. அதில் சிறிதளவு பணம், அது சிலரை நாணயமாக இருக்கட்டும், நோட்டாக இருக்கட்டும், அதை போட்டு சுருட்டி துவரம் பருப்பு டப்பாவுக்கு அடியில் வைத்து மேலே துவரம் பருப்பை கொட்டி விடுங்கள். தினமும் நீங்கள் துவரம் பருப்பை சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி துவரம் பருப்பு டப்பாவில் சுக்கும் பணமும் சேர்ந்து இருந்தால், வீட்டு பெண்களின் கையில் மேலும் மேலும் பணம் சேரும்.

இதே போல அரிசி கொட்டி வைக்கும் பாத்திரத்திலும் ஒரே ஒரு துண்டு சுக்கை மட்டும் போட்டு வையுங்கள். இது உங்களுக்கு அரிசியை பூச்சி வராமல் பாதுகாப்பதோடு, உங்களுடைய வீட்டில் லட்சுமி கடாட்சத்தையும் கொடுக்கும். சுக்குக்கு அப்படி ஒரு மகிமை இருக்கிறது. இது ஒரு சின்ன பரிகாரம் தான். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக கையில் பணமே தங்கவில்லை என்று நினைத்து கவலைப்படும் பெண்கள் கையில் கூட சிறுக சிறுக பணம் சேர தொடங்கும்.

- Advertisement -