இன்றைய ராசி பலன் – 28-06-2021

rasi palan - 28-6-21
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே புதிய புரிதல் உண்டாகும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து தன வரவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புது உற்சாகம் பிறக்கும். மனதில் இருக்கும் இறுக்கங்கள் நீங்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க திணறுவீர்கள். தகுந்த சமயத்தில் நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு எதிர்மறையான சில விஷயங்கள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி இடமாற்றம் குறித்த விஷயங்களில் சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிரடி மாற்றங்களை செய்தும் முன்னேற்றம் காண்பீர்கள். ஆரோக்கியம் மேம்படலாம்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்து நிறைவேறக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை எரிச்சலூட்டும் வகையில் அமையும். எந்த சூழ்நிலையிலும் பொறுமை காப்பது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் பாதக பலனை கொடுக்கலாம்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எண்ணிய எண்ணம் எல்லாம் கைகூடி வரும் யோகமுண்டு. தடைப்பட்ட திருமண சுப காரிய முயற்சிகளில் கைகூடி வரும். தொலை தூர இடங்களிலிருந்து எதிர்பாராத சில விஷயங்கள் அதிர்ச்சியை உண்டாக்கும் வகையில் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி இருக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல லாபம் காண்பீர்கள்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி மனம் அமைதி அடைய கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீண்ட நாள் நண்பர்களை சந்திக்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சகk பணியாளர்கள் உடைய ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பீர்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான பலன்களை நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நிகழ்வுகள் எல்லாம் நிகழவிருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களை மேல் அதிகாரிகள் மூலம் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நவீன உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிலம் வீடு சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவுகள் பலிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய நினைவுகளை அசை போடும் சந்தர்ப்பங்கள் உருவாகும். உத்தியோக ரீதியான வெளியிட பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகபூர்வ விஷயத்தில் அதிரடி திருப்பங்கள் நிகழ வாய்ப்புகள் உள்ளன. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் தீர வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் அடிகளில் கவனம் தேவை. சாதகமற்ற அமைப்பு என்பதால் வீண் வம்புகள் விலைக்கு வாங்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் எனவே கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டி பொறாமைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த காரியங்கள் கைகூடி வர வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு கிடைக்கும். நிழுவையில் இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோக ரீதியான பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. குல தெய்வக் கோவிலகளுக்கு சென்று வருவது நல்லது.

- Advertisement -