நாளுக்கு நாள் வேரோடு கொத்து கொத்தாக முடி கொட்டும் பிரச்சனை அதிகமாக உள்ளதா? இந்த 1 பேக் உங்கள் முடி உதிர்வை உடனடியாக தடுத்து நிறுத்தும்.

hair2
- Advertisement -

சில பேருக்கு நாளுக்கு நாள் முடி உதிர்வு பிரச்சனை அதிகமாகி கொண்டே செல்லும். என்னதான் சாப்பிட்டாலும், என்னதான் ஹேர்பேக் போட்டாலும், அந்த முடி உதிர்வை நிறுத்தவே முடியாது. நிறைய பேர் அதிக காசு கொடுத்து வாங்கி ஹேர் ஆயில், ஷாம்பு கூட பயன்படுத்தி பார்ப்பார்கள். ஆனால் முடி கொட்டுவது நிற்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருமுறை நீங்கள் நல்ல மருத்துவரை ஒரு முறை அணுகுவது நல்லது. ஏனென்றால் ஆரோக்கிய ரீதியாக ஏதாவது உடம்பில் பிரச்சனை இருந்தால் கூட, இப்படி அளவில்லாத முடி உதிர்வு ஏற்படும். இது தவிர இயற்கையான முறையில் சில வழிகளையும் நீங்கள் பின்பற்றி பார்க்கலாம். இயற்கையான முறையில் முடி உதிர்வை தடுத்து நிறுத்த அதிக செலவில்லாத குறிப்பு இதோ உங்களுக்காக.

இந்த பேக் தயார் செய்ய நமக்கு தேவையான 4 பொருட்கள். வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன், கருஞ்சீரகம் – 1 டேபிள் ஸ்பூன், தயிர் – 2 டேபிள் ஸ்பூன், முருங்கைக்கீரை – 2 கைப்பிடி அளவு. கீரையை காம்புகளில் இருந்து உருவி சுத்தம் செய்து கழுவி, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (உங்களுக்கு ஓரளவுக்கு கொஞ்சம் பெரிய முடியாக இருந்தால் இதனுடைய அளவுகளை கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.)

- Advertisement -

வெந்தயத்தையும், கருஞ்சீரகத்தையும் முந்தைய நாள் இரவே தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் முதலில் ஊறிய வெந்தயம் கருஞ்சீரகம் இரண்டு பொருட்களையும் சேர்த்து, அரைத்துக் கொள்ள வேண்டும். ஊறவைத்த தண்ணீரோடு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு 2 டேபிள் ஸ்பூன் தயிர், இறுதியாக முருங்கைக்கீரை சேர்த்து இதை ஒரு பேக் போல மொழு மொழு என அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த இந்த பேக்கை அப்படியே தலையில் போட்டு 20 நிமிடங்கள் விட்டு விட்டு, பிறகு மைல்டான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்துக் கொள்ளலாம். ஆனால் அரைத்த இந்த பேக்கை அப்படியே போடும்போது, உங்களுடைய தலையை என்னதான் அலசினாலும், அதில் சின்ன சின்னதாக தூசி ஒட்டி இருக்கும். கசக்கிய தலையை உலர வைத்து காய விடும்போது நன்றாக உதறி விட வேண்டும்.

- Advertisement -

ஒருவேளை உங்களுக்கு இதில் சிரமம் இருந்தால், இந்த பேக்கை அரைத்த பின்பு, ஒரு மெல்லிசான காட்டன் துணியில் ஊற்றி நன்றாக அழுத்திப் பிழிந்து வடிகட்டியும் தலையில் போட்டுக் கொள்ளலாம். ஆனால் வடிகட்டுவதில் கொஞ்சம் சிரமம் இருக்கும். அப்போது உங்களுக்கு தலைமுடியில் தூசு ஒட்டும் என்ற பிரச்சனையே இருக்காது. வாரத்தில் ஒரு நாள் இந்த பேக்கை போட்டால் போதும் தொடர்ந்து பத்து வாரம் இந்த பேக்கை போட்டவுடன் உங்கள் முடி உதிர்வில் நல்ல வித்தியாசத்தை உணர்வீர்கள். உங்களுக்கு இந்த பேக் செட் ஆகிவிட்டால், தொடர்ந்து ஒரு வருடத்திற்கு இதே பேக்கை நீங்கள் பயன்படுத்தலாம். தவறு கிடையாது. எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. ஆனால் வாரத்தில் ஒரு நாள் மட்டும் இந்த பேக்கை போட்டு வாங்க.

கூடவே வாரம் ஒரு நாள் முருங்கைக் கீரையை உணவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கால்சியம் சத்து நிறைந்த பொருட்களை அதிகம் சாப்பிடுங்கள். நீங்கள் அசைவ பிரியர்களாக இருந்தால் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம் தவறு கிடையாது. இப்படியாக உங்களுடைய உணவு பழக்க வழக்கங்களில் சின்ன சின்ன மாற்றங்களை கொண்டு வந்து கூடவே இந்த பேக் போடும்போது இரட்டிப்பு மடங்கு பலன் கூடிய சீக்கிரத்தில் கிடைக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -