உங்கள் முடியை வளர விடாமல் தடுக்கும் எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும், அதை இந்த 1 பேக்கில், 1 நாளில் சரி செய்து விடலாம்.

hair15
- Advertisement -

உங்களுடைய தலை முடி வராமல் இருப்பதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை. எந்த பேக் போட்டாலும் கொட்டுகின்ற முடி, கொட்டியபடி கொட்டிக் கொண்டே தான் இருக்கின்றது. ஒரு முடிகூட வளர்ந்த பாடாக இல்லை என்பவர்கள் இந்த பேக்கை டிரை பண்ணி பார்க்கலாம். இந்த பேக்கை நம் தலையில் போடுவதன் மூலம் நம்முடைய ஸ்கேல்பில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அது உடனடியாக ஒரே நாளில் சரியாகிவிடும். அந்த அளவிற்கு பவர்ஃபுல்லான ஒரு பொருளை தான் இந்த பேக்கில் நாம் சேர்க்க போகின்றோம்.

மருத்துவ குணங்கள் முற்றிலும் நிறைந்த திரிபலா பொடி தான் அது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். திரிபலா பொடி என்பது நெல்லிக்காய் கடுக்காய் தான்றிக்காய் இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து செய்யப்படும் போடி தான். இந்த பொடியை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் திரிபலா பொடி, இந்த பொடியை கலப்பதற்கு தேவையான அளவு வெங்காயச்சாறு, 2 டேபிள்ஸ்பூன் தயிர், இந்த பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்.

வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து, பிழிந்து சாறு எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து வெங்காயசாறு தண்ணீரில் இறங்கியவுடன் இந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொண்டாலும் சரிதான்.

- Advertisement -

வெங்காயத்தை பச்சையாக பிழிந்து சாறு எடுக்கும் போது நமக்கு சீக்கிரத்தில் ஜலதோஷம் பிடிக்கும். அதுவே வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சாறு எடுக்கும் போது ஜலதோஷம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. சரி கிண்ணத்தில் திரிபலா பொடி, வெங்காய சாறு, தயிர் மூன்றையும் போட்டு கட்டி இல்லாமல் தளதளவென லேசான லிக்விட் பக்குவத்தில். கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய ஸ்கால்ப்பில் நன்றாக எண்ணெய் வைத்து மசாஜ் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு மண்டை ஓட்டில் மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி இந்த பேக்கை அப்ளை செய்து விட்டு, 15 நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு முடியை அலசி கொள்ள வேண்டும். இந்த பேக்கை நுனி முடி வரை போட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மேலே மண்டை ஓட்டில் படும்படி மட்டும் போட்டால் போதும்.

இந்த பேக்கை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. 30 நாட்களுக்கு ஒரு முறை அல்லது 50 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் இந்த பேக்கை பயன்படுத்தி வரும் போது தலையில் அரிப்பு இருக்காது. பேன் பொடுகு தொல்லை இருக்காது. முடி உதிர்வு ஏற்படுத்தக்கூடிய தொற்று பிரச்சினைகளை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும் இதற்கு உண்டு என்பது குறிப்பிடதக்கது. உங்களுக்கு இந்த ஹேர் பேக் பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -