தங்கம் போல உங்களுடைய சருமத்தை பளபளக்க வைக்க இந்த மஞ்சள் போதும். பொங்கலுக்கு வாங்கிய மஞ்சள் உங்கள் வீட்டில் இருக்குதா?

face1
- Advertisement -

இயற்கையாக நமக்கு கிடைக்கும் இந்த பச்சை மஞ்சளை அப்படியே கல்லில் இழைத்து முகத்தில் பூசிக் கொண்டால் நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு படிப்படியாக தீர்வு கிடைத்து விடும். ஆனால் அந்த அளவிற்கு நமக்கு நேரமும் கிடையாது. மஞ்சள் பூசிக் குளிக்க நிறைய பெண்களுக்கு இப்போது ஆர்வமும் கிடையாது. ஆனால் அந்த மஞ்சளை பயன்படுத்தி ஒரு எண்ணெயை தயார் செய்து வைத்துக்கொண்டால் போதும்.

குளிக்கும் போது ஒரு மணி நேரத்திற்கு முன்பு லேசாக அந்த எண்ணெயை முகம் கை கால்களில் தடவி கொண்டு நன்றாக ஊற வைத்துவிட்டு அதன் பின்பு எப்போதும் போல சோப்பு அல்லது பாடி வாஷ் அல்லது குளியல் பவுடரை போட்டு குளித்து விடலாம். உங்களுடைய சருமம் சில நாட்களில் பளபளப்பாக மின்ன தொடங்கிவிடும். சரும பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

- Advertisement -

பச்சை மஞ்சள் கிழங்கை வைத்து ஒரு எண்ணெயை எப்படி தயார் செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள். முதலில் மஞ்சள் கிழங்குகளை எடுத்து அதில் இருக்கும் மண் போக நன்றாகத் தண்ணீரில் அலம்பி கழுவி விடுங்கள். அதில் உள்ள தோலை சீவி விடுங்கள். அதன் பின்பு இதை ஒரு உரலில் போட்டு நன்றாக நசுக்கி கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் துருவிக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் 250ml தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள் அந்த எண்ணெயில் நசுக்கி வைத்திருக்கும் இரண்டு கைப்பிடி அளவு மஞ்சளை சேர்த்துக் கொள்ளவேண்டும். எண்ணெய் மிதமான தீயில் சூடு ஆன பின்பு, மஞ்சள் எண்ணெயில் கொதித்து சிட சிடப்பு அடங்கிவிடும். இந்த எண்ணெயை அடுப்பில் இருந்து இறக்கி 4 மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும்.

- Advertisement -

எண்ணெய் உங்களுக்கு லேசான மஞ்சள் நிறத்தில் மாறி இருக்கும். ஒரு காட்டன் துணியில் இந்த எண்ணெய்யை ஊற்றி அப்படியே பிழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். எண்ணெயை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் போதும். மூன்றிலிருந்து நான்கு மாதங்களுக்கு இந்த எண்ணெய் எதுவும் ஆகாது. அதாவது கெட்டுப் போவதற்கு வாய்ப்பு இல்லை.

இந்த எண்ணெயை லேசாக தொட்டு உங்களுடைய முகம் கை கால் உடம்பு முழுவதும் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து விட்டு அதன் பின்பு எப்போதும் போல குளிக்க வேண்டும். 13 வயதுக்கு மேலே உள்ள பெண்கள் இந்த குறிப்பை தாராளமாக பின்பற்றி பார்க்கலாம்.

ஒருவேளை உங்களுக்கு ரொம்பவும் ஆயில் ஸ்கின் ஆக இருந்தால் இந்த எண்ணெயை நீங்கள் முகத்தில் பயன்படுத்த கூடாது. முகத்தில் முகப்பரு கட்டிகள் அதிகமாக இருந்தால் நீங்களும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது. முகம் தவிர்த்து உடலின் மற்ற பாகங்களில் இந்த எண்ணெயை தடவி குளித்து வரும் பட்சத்தில் உங்களுடைய சருமம் பளபளப்பாக மாறி வரும். ஒரே நாளில் பலனை எதிர்பார்க்கக்கூடாது.

இந்த எண்ணெயை மூன்று மாதம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நிச்சயம் சருமத்தில் மாற்றம் தெரியும். உங்களுக்கு இந்த டிப்ஸ் யூஸ்ஃபுல்லா இருக்கும்னு நினைச்சா நீங்க ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -