- Advertisement -
அரிசி வகைகள் எத்தனை | Arisi vagaigal athan payangal
உலகில் இருக்கின்ற மக்களில் சரிபாதி அளவு மக்களின் அன்றாட பிரதான உணவு தானியமாக அரிசி விளங்குகிறது. அரிசி பெரும்பாலும் ஆசிய நாடுகளிலேயே அதிகம் பயிரிடப்படுகின்றன. அரிசியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இன்று உலகப் பிரசித்திப் பெற்ற அரிசி வகையான “பாஸ்மதி அரிசி” வகை இந்திய நாட்டை பூர்விகமாகக் கொண்டதாகும். நம் இந்திய நாட்டில் குறிப்பாகத் தென்னிந்திய பகுதிகளில் பல வகையான அரிசிகள் பயிரிடப்படுகின்றன. ஒவ்வொரு வகை அரிசிக்கும், ஒவ்வொரு விதமான நிறம், ருசி, மருத்துவ குணங்கள் போன்றவை இருக்கின்றன. அந்த வகையில் நம் தமிழ்நாட்டில் அதிகம் பயிரிடப்படுகின்ற அரிசி வகைகள் (Types of rice in Tamil) குறித்தும், இந்த வகை அரிசிகளை உணவாக செய்து சாப்பிடுவதால் நமக்கு ஏற்படக்கூடிய மருத்துவ ரீதியான பலன்கள் என்ன என்பது குறித்தும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
அரிசி வகைகள் அதன் பயன்கள் – Variety of rice names in Tamil
பூங்கார் கைக்குத்தல் அரிசி பயன்கள் – Poongar rice health benefits in Tamil
- அரிசி விலையை தேவைப்படும் காலம் 110 – 120 நாட்கள்
- வழக்கொழிந்து போன பாரம்பரிய அரிசி வகைகளில் இந்த பூங்கா கைகுத்தல் அரிசியும் ஒன்று. இந்த பூங்கா கைக்குத்தல் அரிசியில் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
- பூங்கார் கைக்குத்தல் அரிசியில் மைக்ரோ நியூட்ரியன்ஸ் எனப்படும் நுண்ணூட்டச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
- Celiac diseases எனப்படும் பரம்பரை நோய்கள் நமக்கு வராமல் காக்க உதவும் சத்துக்கள் இந்த பூங்கார் கைக்குத்தல் அரிசியில் உள்ளன.
- இந்த வகை அரிசியின் பிரதான சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த அரிசியை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை உட்கொண்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகாமல் விடாமல் பார்த்துக் கொள்வதுதான்.
- பேறுகாலத்தில் இருக்கும் பெண்களுக்கும், அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும், இந்த வகை அரிசி சிறந்த ஊட்டச்சத்து உணவாக திகழும்.
- ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும்.
- உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது இந்த அரிசி வகை.
- இட்லி, தோசை, மதிய உணவுகள் போன்றவற்றை இந்த அரிசியை கொண்டு செய்து சாப்பிடலாம்.
இதையும் படிக்கலாமே: சப்ஜா விதை பயன்கள்
மாப்பிள்ளை சம்பா அரிசி பயன்கள் – Mappillai samba arisi payangal
- அரிசி விளைவிக்க தேவையான காலம் 155 – 160 நாட்கள்.
- இந்த வகை அரிசியை சில ஆண்டுகளுக்கு முன்பு விளைவிப்பது மிகவும் அருகிவிட்டது. எனினும் தற்போது தன்னார் வல விவசாயிகளின் முயற்சியால் இந்த வகை அரிசி மீண்டும் பெருமளவில் பயிரிடப்படுகிறது. முற்காலத்தில் புதிதாக திருமணம் ஆகி மணப்பெண் வீட்டிற்கு, வருகை தரும் மணமகனுக்கு இந்த வகை அரிசியால் செய்யப்பட்ட உணவுகளை பரிமாறுவார்கள்.
- தொடர்ந்து இந்த அரிசி உணவுகளை சாப்பிடும் அந்த மணமகன், தனது பலத்தை நிரூபிக்க இளவட்டக் கல்லைத் தூக்கி காட்ட வேண்டும் என்பது அப்போதைய சம்பிரதாயமாக இருந்தது.
- மாப்பிள்ளை சம்பா அரிசியில் புரோ ஆன்தோ சைனின் சத்துக்கள் இருப்பதால் உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படுகின்ற ஹைபர்களைசிமிய எனம் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
- அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் செரிமான பிரச்சனைகளை போக்க உதவுகிறது.
- இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் மாப்பிள்ளை சம்பா அரிசி உண்டு.
- நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி, இனப்பெருக்க உறுப்புகளின் ஆற்றலை மேம்படுத்தி மலட்டுத்தன்மை ஏற்படாமல் தடுக்கும்..
- உடலில் இருக்கும் தசைகள் மற்றும் திசுக்களில் தேவையான அளவு பிராண வாயு மற்றும் புரதச்சத்து சேர்வதை உறுதி செய்கிறது.
- உடலில் அதிக கொழுப்பு சேராமல் தடுக்கும்.
- மாப்பிள்ளை சம்பா அரிசியில் இட்லி தோசை கஞ்சி போன்றவைகளை செய்து சாப்பிடலாம்.
காட்டுயானம் அரிசி பயன்கள் – Kaatuyanam rice benefits in Tamil
- அரிசியை விளைவிக்க தேவையான நாட்கள்: 125 -130 நாட்கள்
- இந்த காட்டுயானம் அரிசி செய்யும் பண்டைய தமிழர்கள் உணவு வகைகளில் முக்கிய இடம் பெற்றது. காலப்போக்கில் இந்த அரிசி விளைவிப்பது குறைந்துவிட்டது. காட்டில் திரிகின்ற யானைக்கு அதன் கால்கள் தான் பலம் வாய்ந்த அடித்தளமாக விளங்குகிறது. அதே போல் மனிதனின் உடம்பில் அடித்தளமாக இருப்பது எலும்புகள். அந்த எலும்புகளை உறுதி செய்வதற்கு சிறந்த உணவுப் தானியமாக இந்த காட்டுயானம் அரிசி திகழ்கிறது.
- காட்டுயானம் அரிசியில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் எலும்புகளின் உறுதிக்கும், வளர்ச்சிக்கும் மிகவும் துணைபுரிகின்றது.
- ஆண்களை விட பெண்களின் எலும்புகளின் அடர்த்தி மிகவும் குறைவு. அதிலும் 30 வயதை கடந்த பெண்களுக்கு அவர்களின் எலும்பில் அடர்த்தி தன்மை குறையத் தொடங்குகிறது. இப்படிப்பட்ட பெண்கள் அவ்வப்போது இந்த காட்டுயானம் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் அவர்களின் எலும்புகள் உறுதியாகும்.
- புற்று நோய்களை எதிர்த்து போரிடும் ஆற்றல் இந்த அரிசியில் அதிகம் இருப்பதால் எந்த வகை புற்று நோயாளிகளுக்கும் இந்த அரிசியை கொண்டு உணவு செய்து பரிமாறலாம்.
- நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுக்கும் ஆற்றல் கொண்டது இந்த அரிசி.
- இந்த காட்டுயாணம் அரிசியை இட்லி தோசை இன்னபிற சாத வகைகளை செய்து சாப்பிடலாம்.
மூங்கில் அரிசி பயன்கள் – Moongil arisi payangal
- அரிசி விளைவிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 30 – 40 ஆண்டுகள்.
- கிடைப்பதற்கு மிகவும் அரிதான அரிசியாக இந்த மூங்கில் அரிசி திகழ்கிறது.. ஏனெனில் பல வருடங்கள் வளர்ந்து மிக பழுத்த மூங்கில் மரங்களில் மட்டுமே இந்த அரிசியை அறுவடை செய்ய முடிகிறது.
- மூங்கில் அரிசியில் லோ – கிளைசிமிக் இன்டெக்ஸ் தன்மை அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற உணவாக திகழ்கிறது.
- இந்த அரிசியில் வைட்டமின் பி6, பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
- உடலில் வீண் கொழுப்புகள் சேர்வதைத் தடுக்கும்.
- அன்றாடம் சாப்பிட்டு வருபவர்களுக்கு மூட்டுவலி, இடுப்பு வலி போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும்.
- இந்த அரிசி சற்று கடினமானது என்பதால் சமைப்பதற்கு முன்பாக 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அது முடியாத பட்சத்தில் பிரஷர் குக்கரில் 6 முதல் 8 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
- இந்த மூங்கில், அரிசியில், இட்லி, பொங்கல், தோசை, பிரியாணி, கிச்சடி போன்ற உணவு வகைகளை செய்து சாப்பிடலாம்.
கிச்சிலி சம்பா அரிசி பயன்கள் – Kichili samba rice benefits in Tamil
- விளைவிக்க தேவையான நாட்கள்: 140 நாட்கள்
- இந்தியாவில் உள்ள அரிசி ஆராய்ச்சி கழகம் இந்த கிச்சிலி சம்பா அரிசியை கொண்டு தான் பல புதுமையான அரிசி வகைகளை உருவாக்கியது.
- கிச்சிலி சம்பா அரிசி அனைத்து வயதினருக்கும் எளிதாக செரிமானம் ஆகக் கூடிய ஒரு அரிசி வகையாக உள்ளது.
- சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற அரிசி வகையாக இந்த கிச்சடி சம்பா உள்ளது.
- தோல் மினுமினுப்பு பெற, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த கிச்சடி சம்பா அரிசியில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடலாம்.
- இட்லி, பொங்கல், கிச்சடி, பிரியாணி, தோசை போன்றவற்றை இந்த கிச்சிலி சம்பா அரிசியில் செய்யத்தக்க உணவு வகைகளாக உள்ளன.
தூயமல்லி அரிசி பயன்கள் – Thooyamalli arisi payangal
- பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் மல்லிகைபூ போல இருப்பதால், இந்த அரிசிக்கு தூயமல்லி அரிசி என்கிற பெயர் வந்தது. தமிழக மக்களின் பாரம்பரிய அரிசி வகைகளில் இந்த தூயமல்லி அரிசியும் ஒன்று. பூச்சிக்கொல்லி தெளிக்க தேவையற்ற ஒரு அரிசி வகையாக இந்த தூய மல்லி அரிசி வகை உள்ளது.
- சமைப்பதற்கு மிகவும் எளிதான வகை அரிசி.
- தூயமல்லி அரிசியால் செய்யப்பட்ட உணவை சாப்பிடுவதால் நரம்பு மண்டலம் பலம் பெறும்.
- நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த அரிசியை சமைத்து கொடுத்துவர, நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்,
- உடல் ஆரோக்கியம் மேம்படும். தோலில் இருக்கின்ற சுருக்கங்களை போக்கவல்லது இந்த அரிசி.
- குழந்தைகளின் உடல், மன வளர்ச்சிக்கு ஏற்ற சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த அரிசி வகை.
- உடலில் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக இருப்பதை இந்த வகை உறுதி செய்கிறது.
சீரக சம்பா அரிசி பயன்கள் – Seeraga samba rice benefits in Tamil
- விளைவிக்க தேவையான நாட்கள்: 135 – 140 நாட்கள்
- இந்த சீரக சம்பா அரிசி தமிழர்களின் மிகப் பழமையான பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றாகும். மற்ற எல்லா அரிசி வகைகளை விட இந்த ரக அரிசி சற்று கூடுதல் விலை கொண்டதாகும். எனினும் உணவு செய்து சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும். குறிப்பாக பிரியாணி வகை உணவை இந்த அரிசியில் செய்து சாப்பிட்டால் அதன் சுவையே தனியாக இருக்கும் என கூறப்படுகின்றது.
- இந்த அரிசியில் பைட்டோ- நியூட்ரியன்ட்டுகள் அதிகம் உள்ளதால், உடலில் ஏற்படுகின்ற பல நோய்களை எதிர்த்து செயலாற்றுகிறது.
- புற்று நோயாளிகளுக்கு ஏற்ற உணவு அரிசி வகையாகும்.
- ஏறக்குறைய தூயமல்லி அரிசியின் மருத்துவ குணங்களை கொண்டுள்ளதாக இந்த சீரக சம்பா அரிசி திகழ்கிறது.
- சைவ – அசைவ பிரியாணி வகைகள் இட்லி, தோசை, பொங்கல், போன்ற உணவு வகைகளை இந்த சீரக சம்பா அரிசியில் செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
கருடன் சம்பா அரிசி பயன்கள் – Garudan samba arisi payangal
- பயிர் விளைவிக்க தேவையான நாட்கள் 160-165
- தமிழ்நாட்டின் மிகவும் பாரம்பரிய அரிசி வகையில். தற்போது சிலரின் தனிப்பட்ட முயற்சியால் மீண்டும் இந்த கருடன் சம்பா அரிசி வகை சற்று கூடுதலாக தமிழ்நாட்டில் பயிரிடப்படுகிறது.
- கருடனின் கழுத்துப்பகுதி வெள்ளையாக இருப்பது போல இந்த கருடன் சம்பா அரிசியில் நுனிப்பகுதி மட்டும் வெள்ளை யாக இருந்து மற்ற பகுதி கரும் பழுப்பு நிறத்தில் இருப்பதால், இந்த அரிசிக்கு கருடன் சம்பா அரிசி என பெயர் உண்டானது.
- எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை உண்ண விரும்புபவர்களுக்கு ஏற்ற அரிசி வகை இந்த கருடன் சம்பா அரிசி ஆகும்.
- சிறுநீரக நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு ஏற்ற உணவாக இந்த கருடன் சம்பா அரிசி திகழ்கிறது.
- கருடன் சம்பா அரிசி தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இரத்த சோகையை நீக்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- உடல் வலிமையைப் பெருக்கும்.
- இட்லி, பொங்கல், தோசை, பிரியாணி போன்ற உணவு வகைகளில் இந்த கருடன் சம்பா அரிசியில் செய்து சாப்பிடலாம்.
இதையும் படிக்கலாமே: சால்மன் மீன் பயன்கள்
குடவாழை அரிசி பயன்கள் – kudavazhai rice benefits in Tamil
- இந்த குடவாழை அரிசியும் மிகப் பழங்காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் பயிரிடப்பட்ட ஒரு அரிசி வகை ஆகும். உப்புத் தன்மை மிகுந்த கடலோரப் பகுதி நிலங்களில் பயிரிட ஏற்ற அரிசி இந்த குடவாழை அரிசி தற்போதைய தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதிகளில் இந்த குடவாழை அரிசி அதிகம் பயிரிடப்படுகிறது. நன்கு வளர்ந்த இந்த குடவாழை நெல் செடியின் கதிர்கள் நான்கு திசைகளிலும் விரிந்து குடை போல் காணப்படுவதால், இதற்கு குடவாழை அரிசி என்கிற பெயர் உண்டானது. இந்த நெல்வகை பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கும்.
- குடவாழை அரிசியை கொண்டு செய்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு செரிமான சக்தி கூடும்.
- தோல் பளபளப்பு பெறும், சுருக்கங்கள் நீங்கும்.
- மலச்சிக்கல் தீரும்.
- இந்த குடவாழை அரிசியில் புரதச்சத்து, நார்ச்சத்து, தாதுச் சத்து மற்றும் உப்புச் சத்துகள் அதிகம் உள்ளதால் இந்த அரிசியில் செய்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருந்து உடல் நலத்தை சீராக பேணிக்காக்கும்.
- குடவாழை அரிசியில் இட்லி, பொங்கல், தோசை, பிரியாணி போன்ற உணவுகளை செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
- Advertisement -