இந்த கணபதியை வழிபாடு செய்து வந்தால் உங்களுடைய வீட்டில் செல்வக் கடாட்சம் தாண்டவம் ஆடும்.

vinayagar1
- Advertisement -

செல்வ வளங்களை அள்ளி அள்ளி கொடுக்கக் கூடிய ஒரு கணபதி வழிபாடை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஆதி காலத்தில் இருந்தே இந்த கணபதி வழிபாடு செய்யப்பட்டு வந்தது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் இந்த வழிபாடானது மறைக்கப்பட்டு விட்டது. இந்த கணபதியின் திருவுருவப்படத்தை வீட்டில் வைத்து பின் சொல்லக்கூடிய மந்திரத்தை உச்சாடனம் செய்து வந்தால் உங்கள் வீட்டில் செல்வ கடாட்சம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. வாழ்க்கையில் துன்பத்தை மட்டுமே அனுபவித்து வந்தவர்கள் கொஞ்சம் சிரமப்பட்டு தொடர்ந்து 108 நாட்கள் இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத நல்லது, எதிர்பாராத அதிர்ஷ்டம், பணவரவு, சந்தோஷம், திகைக்க திகைக்க கிடைக்கும்.

இன்று நாம் பார்க்கக் கூடிய வழிபாடு உச்சிஷ்ட கணபதி வழிபாடு. கணபதியை நிறைய உருவங்களைக் கொண்டு நாம் இன்று வழிபாடு செய்து வருகின்றோம். ஆனால் பெரும்பாலும் நம்முடைய வீட்டில் இந்த உச்சிஷ்ட கணபதி வழிபாட்டை மேற்கொள்வது கிடையாது. சிறிய அளவில் உச்சிஷ்ட கணபதியின் திருவுருவப்படம் கிடைத்தால் பூஜை அறையில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். இல்லை என்றால் இணையதளத்தில் டவுன்லோட் செய்து பிரிண்ட் போட்டு வைத்துக்கொள்ளலாம்.

- Advertisement -

ஒருவேளை உங்களுடைய வீட்டில் இருப்பவர்கள் இந்த கணபதியின் திருவுருவப்படத்தை வீட்டில் வைக்கக் கூடாது என்று சொன்னாலும் பரவாயில்லை. தினமும் காலையில் எழுந்து தீபம் ஏற்றி உச்சிஷ்ட கணபதியை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். உச்சிஷ்ட கணபதி வந்து நீங்கள் ஏற்றி வைத்த தீபத்தில் அமர்ந்து கொள்வார். நீங்கள் ஏற்றி வைத்த தீபத்திற்கு முன்பு அமர்ந்து உங்களுடைய வீட்டில் எந்த விநாயகரின் திரு உருவப்படம் இருந்தாலும் அவரை பார்த்து பின் சொல்லக்கூடிய மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

ஓம் ஹஸ்தி பிஸாச்சி லிகே நமஹா!

- Advertisement -

இந்த ஒரே ஒரு வரி மந்திரம் தான். காலையில் பூஜையறியில் நீங்கள் இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு உங்களுடைய அன்றாட வேலைகளை தொடங்கினால் காரிய தடை விலகும். எதிர்பார்த்த வேலை வெற்றிகரமாக உங்களுக்கு சாதகமாக நல்லபடியாக முடியும். வீட்டின் வறுமை விரட்டி அடிக்கப்படும். குறைவில்லா செல்வ வளம் கோடி கோடியாக உங்களைத் தேடி வரும். இதோடு மட்டுமல்லாமல் ஏதாவது சங்கடமான சூழ்நிலையில் இருந்த இடத்திலிருந்து நீங்கள் உச்சிஷ்ட கணபதியை நினைத்து இந்த ஒரு வரி மந்திரத்தை, மனதிற்குள் சொல்லும் போது உங்களுக்கு வந்த சங்கடங்கள் உடனடியாக விலகும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த மந்திரம் தான் இது.

ஒரு நல்ல காரியத்திற்காக வெளியே செல்லும்போது, புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து போடும் போது, இன்டர்வியூக்கு போகும்போது, இப்படி உங்களுக்கு எந்த இடத்தில் எல்லாம் நல்லது நடக்க வேண்டுமோ அந்த இடத்தில் எல்லாம் இந்த மந்திரத்தை சொல்லலாம். அந்த விநாயகர் உங்களுக்கு அருகில் வந்து இருந்து ஆசீர்வாதத்தை வணங்கி எல்லா விஷயங்களையும் நல்லபடியாக முடித்து தருவார் என்றால் பாருங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -