உடல் சக்கரங்களை சீராக செயல்பட வைக்க உதவும் கற்பூரவள்ளி.

sakkaram
- Advertisement -

மனிதனின் உடலில் சக்கரங்கள் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மையே. இந்த சக்கரங்கள் சீராக இயங்குவதன் மூலம் மனிதனின் வாழ்க்கையும் சீராக இயங்கும் என்று கூறப்படுகிறது. இந்த சக்கரங்களை சீராக இயக்குவதற்கு பல யோகாசனங்களும் தியானங்களும் இருக்கின்றன. இதையும் தவிர்த்து கற்பூரவள்ளியை வைத்து இந்த சக்கரங்களை எப்படி சீராக செயலாற்றுவது என்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்ப்போம்.

பொதுவாக இயங்காத சக்கரங்களை இயக்க வைப்பதற்கு நாம் யோகாசனம், தியானம் என்று செய்வோம். ஆனால் இயங்கிக் கொண்டிருக்கும் சக்கரம் திடீரென்று இயங்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிகவும் குறிப்பாக கூறுவது அண்ட திருஷ்டி ஆகும். திருஷ்டிகளில் பல வகைகள் இருக்கின்றன அவற்றில் மிகவும் குறிப்பாக நாம் கூறுவது அண்ட திருஷ்டியாகும்.

- Advertisement -

இது அண்டத்தால் ஏற்படக்கூடிய திருஷ்டி என்று கூறப்படுகிறது. இது பொதுவாக பட்சி தோஷத்தால் ஏற்படும். எப்பொழுது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி ஒருவருக்கு அந்த திருஷ்டி ஏற்பட்டு விட்டால் அவருடைய சக்கரங்கள் சீராக வேலை செய்யாமல் தடுத்து நிறுத்தப்படும். அதனால் அவர்களுடைய வாழ்க்கையில் தடுமாற்றங்கள் ஏற்பட்டு சோம்பேறித்தனம் என்பது உண்டாகி அவர்களுடைய வேலையை அவர்களால் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும்.

மேலும் இந்த திருஷ்டி ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மாறக்கூடிய தன்மை உடையதாக திகழ்கிறது. அதனால் பாதிக்கப்பட்டவர் மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவருமே இந்த பரிகாரத்தை செய்தால் தான் முழு பலனையும் அடைய முடியும். இதற்கு ஒரு மண்சட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அது சிறிய அளவில் இருந்தாலும் தவறில்லை.

- Advertisement -

புதிதாக ஒரு மண் சட்டியை வாங்கிக்கொண்டு அதில் ஐந்து கற்பூரவள்ளி இலைகளை பறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பச்சை கற்பூரத்தை வைத்து கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த மண் சட்டியை சுற்றி வீட்டில் இருக்கும் அனைவரும் அமர்ந்து கொண்டு பச்சை கற்பூரத்தை ஏற்ற வேண்டும். அந்த பச்சை கற்பூரம் எரிய எரிய கீழே இருக்கும் கற்பூரவள்ளி இலையும் சேர்ந்து எரிய ஆரம்பிக்கும். கற்பூரவள்ளி இலை முழுவதும் எரிந்து முடியும் வரை பச்சை கற்பூரத்தை நாம் சிறிது சிறிதாக அதில் சேர்த்துக் கொண்டே வரவேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் நம்மிடமும் நம் வீட்டில் இருப்பவர்களிடமும் இருக்கக்கூடிய பட்சி தோஷமாக இருந்தாலும் சரி அல்லது அண்ட திருஷ்டியாக இருந்தாலும் சரி அவை அனைத்தும் நீங்கி உடலில் இருக்கக்கூடிய சக்கரங்கள் நிலையாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: தெரியாத குல தெய்வத்தை தெரிந்து கொள்ள ஆன்மீகம் சொல்லும் ஒரு வழி

இந்த பரிகாரத்தை வாரத்தில் எந்த நாட்களில் வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நாம் செய்யலாம். முக்கியமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது வீட்டில் இருக்கும் அனைவரும் அந்த பச்சை கற்பூரம் மற்றும் கற்பூரவள்ளியின் வாசத்தை நுகர வேண்டும் என்பதுதான். வாரத்திற்கு ஒரு முறையோ, மாதத்திற்கு ஒரு முறையோ இதை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -