தெரியாத குல தெய்வத்தை தெரிந்து கொள்ள ஆன்மீகம் சொல்லும் ஒரு வழி

kuladheivam
- Advertisement -

உங்களுடைய குடும்பத்திற்கு எது குலதெய்வம் என்பது தெரியவில்லையா. குல தெய்வ வழிபாடு செய்வதற்கு உங்களுடைய குடும்பத்திற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை என்றால், உங்கள் குடும்பத்திற்கு கர்மா அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். உங்களுடைய கர்மா தான் உங்களுடைய குல தெய்வத்தை மறைத்து வைத்திருக்கிறது.

குலதெய்வ வழிபாடு செய்யாமல் போனால், குடும்பத்தில் நிச்சயம் நல்லது நடக்காது. இது ஒரு விஷயம். இது மட்டுமல்லாமல் 13 தலைமுறைக்கு ஒரு முறை குலதெய்வமானது மாறும் என்றும் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மையா பொய்யா என்பதை இதுவரை யாரும் கண்டு பிடிக்கவில்லை.

- Advertisement -

எதுவாக இருந்தாலும் ஒரு குடும்பத்தில் குலதெய்வ வழிபாடு செய்யவில்லை என்றால், அந்த குடும்பம் கஷ்டப்படும். இதுவும் ஜோதிடத்தில் சொல்லி வைக்கப்பட்டுள்ள ஒரு விஷயம் தான். உங்கள் குடும்பம் தீராத கஷ்டத்தில் இருக்கிறது. குலதெய்வ வழிபாடும் செய்யவில்லை, ஏனென்றால் குலதெய்வம் எது என்று எங்களுக்கு தெரியவில்லை.

என்ன செய்வது. குலதெய்வத்தை அறிந்து கொள்ள ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிமையான வழிபாடு இதோ உங்களுக்காக. இதை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் கஷ்டத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

- Advertisement -

குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி

உங்கள் ஜாதகத்தை கொண்டு போய் ஒரு நல்ல ஜோதிடரிடம் காண்பித்தால் உங்கள் குலதெய்வம் எது என்று கணித்து சொல்லிவிடுவார். அதாவது அய்யனாரா, அம்மனா, முருகரா, பெருமாளா. பெரும்பாலும் இதிலிருந்து யாராவது ஒருவர் தான் உங்களுக்கு குலதெய்வமாக இருக்க முடியும். இதை கண்டுபிடிப்பது ரொம்ப ரொம்ப சுலபம்.

இந்த நான்கு பேரில் தான் வெவ்வேறு பெயரை வைத்து, வெவ்வேறு உருவமாக, வெவ்வேறு சுவாமிகளை வழிபாடு செய்கிறார்கள். சரி இப்போ இதிலிருந்து நம்முடைய குலதெய்வம் எது என்பதை நாம் எப்படி அறிவது. உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு பழமையான கோவிலுக்கு செல்லுங்கள்.

- Advertisement -

எந்த கோவிலாக இருந்தாலும் சரி, அந்த கோவிலில் நான்கு துண்டு சீட்டில், இந்த நான்கு தெய்வங்களின் பெயரையும் எழுதி மடித்து போடவும். இந்த துண்டு சீட்டில் இருந்து ஒரு சீட்டை யாராவது ஒரு குழந்தையை எடுக்க சொல்லலாம். அப்படி இல்லை என்றால் இந்த விஷயத்தை நீங்கள் பூசாரி இடம் சொன்னீர்கள் என்றால், அவரே உங்களுக்கு சீட்டு எழுதி போட்டு சுவாமியின் பாதங்களில் வைத்து அவரே கூட ஒரு சீட்டை எடுத்து உங்களுக்கு கொடுக்கலாம்.

அந்தப் பூசாரியின் மூலம் உங்களுடைய குலதெய்வம் உங்களுக்கு தெரிவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. சில பேருடைய குலதெய்வம் அவரவருடைய சொந்த ஊரில் இருக்கும். அதை கண்டுபிடிப்பதில் தான் கொஞ்சம் கஷ்டம் இருக்கும்.ஸஒரு மரத்துக்கு அடியில் சின்ன கல் நட்டு வைத்திருப்பார்கள். அந்த கல்லை தான் குலதெய்வமாக வழிபாடு செய்து வந்திருப்பார்கள்.

அப்படிப்பட்டவர்கள் எல்லாம் அந்த குலதெய்வத்தை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்றால் உங்களுடைய அப்பாவின் சொந்த ஊருக்கு சென்று, அங்கு இருப்பவர்களை விசாரித்து உங்கள் குல தெய்வத்தை கண்டுபிடித்து அந்த மரத்தையும் அந்த கல்லையும் நீங்கள் பூஜை செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு முழுமையான பலன் கிட்டும்.

தெய்வம் எப்போதுமே நேரில் வந்து நமக்கு நல்லது செய்யாது. யாருடைய ரூபத்தில் யாவது ஒரு நல்லதை காட்டிக் கொடுக்கும். அப்போது நாம் அதை பிடித்துக் கொண்டு வாழ்க்கையில் மேலே வந்து விட வேண்டும். குலதெய்வத்தை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற முயற்சியில் நீங்கள் ஈடுபட்டு விட்டால், நிச்சயமாக உங்களுடைய முன்னோர்கள் உங்களுக்கு சரியான குலதெய்வத்தை காட்டிக் கொடுத்திருப்பார்கள்.

இரண்டு தலைமுறையாக குலதெய்வம் எங்களுக்கு தெரியவில்லை மூன்றாவது தலைமுறையில் நான் தான் இப்போது என்னுடைய குலதெய்வத்தை தேடி வருகின்றேன், என்று நீங்கள் முயற்சியை எடுத்து பாருங்கள். உங்களுக்கான குலதெய்வம் எது என்று நிச்சயம் அந்த குல தெய்வமே உங்களுக்கு காட்டி தரும்.

அந்த குலதெய்வ வழிபாட்டை அன்றிலிருந்து நீங்கள் செய்ய தொடங்கினால், நிச்சயமாக உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல விமோசனம் கிடைக்கும். இதெல்லாம் படிப்பதற்கு நம்பும் படி இல்லை என்று சிலர் சிந்திக்கலாம். ஆனால் கஷ்டங்களுக்கு தீர்வு காட்ட வேண்டும் என்றால் அது குலதெய்வத்தால் மட்டும்தான் முடியும்.

நீங்கள் என்னதான் ஓடி ஓடி கஷ்டப்பட்டு ஏதேதோ பரிகாரங்கள் செய்தாலும் அதில் பலன் கிடைக்க குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தை நீங்கள் முதலில் வாங்க வேண்டும். குலதெய்வம் என்றால் யார். நம்முடைய முன்னோர்கள் தான், நமக்கு முன்னால் வாழ்ந்த ஆத்மாக்கள் தான், அறிவியல் ரீதியாக சொல்லப்போனால் நம்முடைய ஜீன், உயிரணுக்கள் தான் குலதெய்வம்.

இதற்கு முன்னால் வாழ்ந்தவர்கள் ரத்தம், நம்முடைய உடம்பில் ஓடிக் கொண்டிருக்கிறது. நமக்கு முன்னால் வாழ்ந்து மறைந்தவர்கள் உருவம் இல்லாமல் நம்மை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த ஆத்மாவுக்கு சாவே கிடையாது. அந்த ஆத்மா சென்று வழிபாடு செய்த அந்த இடத்தில், நம்முடைய காலடி போய் பட்டால் மட்டுமே நம்முடைய கர்ம வினைகள் குறையும். வாழ்வில் வெற்றிய பெறவும் முடியும்.

இதையும் படிக்கலாமே: பிறக்கும் போதே அறிவாளிகளாக பிறக்கும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்.

அதற்குத்தான் நம்முடைய குல வழக்கத்தை மாற்றக்கூடாது பாரம்பரியத்தை மறக்கக்கூடாது. நம் பாட்டி செய்ததை அம்மா செய்ததை நாமும் வழி வழியாக பின்தொடர வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அப்போதுதான் நம்முடைய குலமும், நம்முடைய குல தெய்வமும் அழியாது. மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த எளிய வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -