அடிக்கடி உடம்பு சோர்வுற்றால் உங்களை பிடித்த பீடை, தரித்திரம் ஒழிய அரை பக்கெட் தண்ணீரில் காலை இப்படி செய்யுங்கள்!

leg-in-water-maruthani
- Advertisement -

அடிக்கடி உடல்நிலை சரியில்லாதது போல உடம்பு சோர்வுற்றால் உங்களிடம் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து இருக்கிறது என்று அர்த்தம். உடல் அடிக்கடி பலவீனமடைந்தால், மனமும் பலவீனமாக இருப்பதாக அர்த்தமாகிறது. எந்த நோய் நொடியும் இல்லாமல் இப்படி அடிக்கடி உடம்பானது சுறுசுறுப்பு இல்லாமல் இருந்தால், நெகட்டிவ் வைப்ரேஷன்ஸ் அதிகமாக இருக்கலாம். எனவே இத்தகைய நெகட்டிவ் வைப்ரேஷன்சை தான் பீடை, தரித்திரம் என்றெல்லாம் கூறுவார்கள். இது ஒரு வகையான கண்ணுக்கு தெரியாத ஆற்றல் ஆகும். இதை ஓட ஓட விரட்டி அடிக்க அரை பக்கெட் தண்ணீரில் இதை செய்தால் போதும், எப்படி செய்வது? என்பதை இனி காண்போம்.

நெகட்டிவ் வைப்ரேஷன் அதிகரிக்க மனமும் ஒரு காரணம். மனம் சரியாக செயல்படா விட்டால், ஏதாவது ஒரு பிரச்சனையை பற்றி சிந்தித்து கொண்டு இருந்தால், தொடர்ந்து இது போல நடைபெறுவதால் உடலும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது. இதனால் சுறுசுறுப்பாக இல்லாமல் எப்பொழுதும் சோர்வுடன், ஏதோ பேய் அறைந்தார் போல உட்கார்ந்து கொண்டிருப்போம். மனம் சரியாக இருந்தால் தான் உடலும் சரியாக இருக்கும் எனவே எப்பொழுதும் எதிர்மறை சிந்தனைகளை சிந்திக்க கூடாது.

- Advertisement -

எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை எதிர்க்கக் கூடிய பலத்தை மனரீதியாகவும் நாம் பெற வேண்டும். மனோபலம் இல்லாமல் இருப்பவர்களுக்கு தான் இது போல அடிக்கடி உடம்பு சோர்வுறும். இத்தகையவர்கள் அமாவாசை நாட்களில் இரவு நேரத்தில் இப்படி செய்யலாம். அமாவாசையில் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. சனிக்கிழமைகளில் கூட இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.

அரை பக்கெட் அளவிற்கு வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் இருந்தால் போதும். அதில் ஒரு கைப்பிடி அளவிற்கு கல் உப்பு சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு பிரஷ் ஆன வேப்பிலைகள் சேர்க்க வேண்டும். கொஞ்சம் மஞ்சள் தூள் மற்றும் 2, 3 மிளகுகளை இடித்து சேருங்கள். இதனுடன் மருதாணி விதைகள் அல்லது மருதாணி இலைகள் இருந்தால் சேர்க்க வேண்டும். மருதாணி இலைகளில் இருக்கக்கூடிய தெய்வாம்சம் எதிர்மறை ஆற்றல்களை விரட்டி அடிக்க கூடியது.

- Advertisement -

மேற்க்கூரிய எல்லா பொருட்களையும் நன்கு கலந்த பின்பு கால்களை பாதி அளவிற்கு மூழ்குமாறு வைத்து இருங்கள். ஒரு 20 நிமிடம் இது போல தொடர்ந்து காலை வெளியே எடுக்காமல் ஊற விட்டு விடுங்கள். இதனால் உங்கள் கால்கள் மூலம் பரவக்கூடிய ஒரு விதமான எதிர்மறை ஆற்றல் உங்களை விட்டு நீங்கும். எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் அல்லது துர்சக்திகளும் பாதம் வழியாக நுழையும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள்.

எனவே பாதத்தை இது போல செய்தால் நமக்கு ஒரு தன்னம்பிக்கை வர ஆரம்பித்து விடும். நம்மை பிடித்த பீடை, தரித்திரம் எல்லாம் போய்விட்டது என்கிற அந்த நினைப்பே நம்மை சுறுசுறுப்பாக மாற்றி விடும். இது போல தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் அமாவாசைகளில் செய்து வர மனமும், உங்கள் உடலும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கும். இதனால் பல பிரச்சனைகளை நீங்கள் தைரியமாக எதிர்கொள்வீர்கள்.

- Advertisement -