சொத்து தகராருக்கு உடனடியாக முடிவு கட்ட சிவன் வழிபாடு

sivan1
- Advertisement -

சொத்து இல்லாதவனுக்கு ஒரே ஒரு பிரச்சனை தான். எனக்கு சொத்து இல்லை. பணம் காசு இல்லை என்ற கவலை தான் இருக்கும். ஆனால் சொத்து இருப்பவனுக்கு பலதரப்பட்ட பிரச்சனை. நிறைய சொத்து வைத்திருப்பவர்களுக்கு என்ன பிரச்சனை வரும் என்று இந்த பதிவில் ஒரு சில வரிகளால் சொல்லி விட முடியாது. அது சொத்து வைத்திருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். சரி உங்களுடைய குடும்பத்திலும் இப்படிப்பட்ட சொத்து பிரச்சனைகள் தொடர்கிறதா.

ரொம்ப வருடமா ஒரு சொத்தை பாகம் பிரிக்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா. அந்த சொத்துக்கு சொந்தக்காரர்கள் வந்து கையெழுத்து போட மாட்டேன் என்கிறார்களா? ரொம்ப நாளா இந்த சொத்துக்கு மேல் இருக்கும் கேஸ் கோர்ட்டில் நிற்கிறது. ஆனால் அந்த சொத்து யார் கைக்கு செல்லும். கேஸ் யார் பக்கம் ஜெயிக்கும் என்று தெரியாத குழப்பம் நீடித்து வருகிறதா.

- Advertisement -

இப்படிப்பட்ட பலதரப்பட்ட சொத்து பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு சிவன் வழிபாடு உள்ளது. அந்த வழிபாட்டை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கோர்ட் கேஸ் வழக்குகள் ஏதாவது இருந்தால் சிவனது பாதங்களை சரணடைந்தால் நிச்சயம் அதற்கான ஒரு தீர்வு கிடைக்கும். அது என்ன வழிபாடு என்பதை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

அதற்கு முன்பாக ஒரு விண்ணப்பம். சொத்து என்பது ஒரு குடும்பத்தில் பொதுப்படையானது. அந்த சொத்துக்காக ஆண் வாரிசு இருந்தாலும் பெண் வாரிசு இருந்தாலும் அதை சரிசமமாக பகிர்ந்து கொள்ளுங்கள். அதை விடுத்து பெண் வாரிசுக்கு கொடுக்க மாட்டேன் என்று அவர்களை ஏமாற்றி கையெழுத்து வாங்குவது, உனக்கு சொத்தில் பங்கு இல்லை என்று, ஏமாற்றுவது போன்ற தவறுகளை ஒருபோதும் செய்யாதீங்க.

- Advertisement -

அது உங்களுக்கு காலத்தால் தீர்க்க முடியாத பாவமாக வந்து முடிந்துவிடும். நியாயப்படி சொத்து பிரச்சனை உள்ளவர்கள் சிவனை இப்படி கும்பிட்டால், அந்த சொத்து பிரச்சனைக்கு ஒரு விடிவுகலம் பிறக்கும். நியாயத்திற்கு தான் சிவனை கூப்பிடனும். அநியாயத்தோடு சிவனது பாதத்தை போய் சரணடையாதிங்க.

சொத்து பிரச்சனை தீர சிவன் வழிபாடு

இந்த வழிபாட்டை நீங்கள் 27 பஞ்சமி திதி செய்ய வேண்டும். தேய்பிறை பஞ்சமி, வளர்பிறை பஞ்சமி இரண்டு பஞ்சமி திதியிலும் செய்யலாம். பஞ்சமி திதி வரும்போது உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு போங்க. 9 மண் அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இலுப்பை எண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்றி சிவபெருமானுக்கு முன்பு வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்போது கோவில்களில் எல்லாம் விளக்கு ஏற்றுவதற்கு தனியாக ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்திலேயே வைத்து விடுங்கள். சிவபெருமானுக்கு முன்பாக டேபிள் ஏதாவது போட்டு இருந்தால் அதன் மேலே இந்த விளக்கை ஏற்றி வைத்து விடுங்கள். இந்த விளக்குகளை ஏற்றி வைத்துவிட்டு அந்த சிவபெருமானுக்கு முன்பு அமர்ந்து இந்த சொத்து பிரச்சனையில் இருந்து விடுபட வழி காட்டு என்று சிவபெருமானை மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

இதை ஆண்கள் பெண்கள் யார் வேண்டும் என்றாலும் செய்யலாம். பெண்களால் தொடர்ந்து 27 பஞ்சமி திதி செய்வது சிரமம் இருக்கும். பஞ்சமி திதியில் மாதவிடாய் நாள் வந்துவிட்டால், அந்த வாரத்தை தவிர்த்து விட்டு, அடுத்த வாரம் தொடலாம். அப்படி இல்லை என்றால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இதை செய்யும்போது பெண்களால் இந்த விளக்கை ஏற்ற முடியாத சமயத்தில் ஆண்கள் இந்த விளக்கை கோவிலுக்கு சென்று ஏற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: கடன் தீர செவ்வாய்க்கிழமை துர்க்கை வழிபாடு

தொடர்ந்து 27 பஞ்சமி திதி இந்த ஒன்பது இலுப்பெண்ணெய் விளக்குகளை சிவன் கோவிலில் ஏற்றி விட்டால் எப்பேர் பட்ட சொத்து பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வந்துவிடும். வழிபாடு இவ்வளவுதான். புது மண் அகல் விளக்கு தான் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சிவன் கோவிலில் இருக்கும் விளக்குகளை எடுத்து துடைத்து கூட நீங்கள் இந்த விளக்கை ஏற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எளிமையான ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இதைப் பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -