வாழ்க்கையில் அடிமேல் அடி விழுந்து கொண்டே இருக்கின்றதா? அடுத்தடுத்த துன்பங்கள், அடுத்தடுத்த கஷ்டங்களை தடுத்து நிறுத்த, இந்த காயை உங்கள் நிலை வாசலில் இப்படி கட்டி தொங்க விடுங்கள்.

pillaiyar
- Advertisement -

சில பேருக்கு சில சமயத்தில் அடுத்தடுத்து அடி மேல் அடி விழுந்துகொண்டே இருக்கும். காரணமே தெரியாமல் பிரச்சனைகள் வந்து சூழும். அடுத்தடுத்து கஷ்டங்கள் அடுத்தடுத்து துன்பங்கள். ஒரு பிரச்சனையை சரிசெய்து, நிம்மதியாக மூச்சுக் கூட விட்டிருக்க மாட்டோம். அதற்குள் பின்னாடியே மற்றொரு பெரிய பிரச்சனை வந்து நிற்கும். சில பேருக்கு நேரம் காலம் சரியில்லை என்றால் இப்படி நடப்பது உண்டு. உங்களுடைய நேரம் காலம் சரியில்லை, வாழ்க்கையில் தொடர் கஷ்டங்கள் மனக்குழப்பம், மீளமுடியாமல் பிரச்சனையில் மூழ்கி தத்தளித்து வருகிறீர்கள் என்றால் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பார்க்கலாம். இன்று நாம் ஊமத்தைச் செடியின் சிறப்புகளை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

oomathai

பொதுவாகவே உன்மத்தம் காய்க்கு கெடுதலை அகற்றக் கூடிய சக்தி உண்டு. இது நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை அகற்றுவதற்கு ஊமத்தங்காய் தீபத்தை ஏற்றி பலன் பெறலாம். ஆனால், இந்த ஊமத்தங்காய்க்கு மட்டும் அல்ல, உன்மத்தன் செடியில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும்மே மகத்துவம் அதிகம். ஊமத்தம் செடி ஒரு தெய்வசக்தி நிறைந்த செடி.

- Advertisement -

இந்த உம்மத்தின் செடியிலிருந்து ஊமத்தங்காய் மற்றும் ஊமத்தம் பூவை எடுத்து வீட்டிற்கு வர வேண்டும். உங்கள் வீட்டினருகில் இந்தச் செடி இருந்தால் பறித்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து ஊமத்தங்காய், ஊமத்தம்பூ இந்த இரண்டு பொருட்களையும் வாங்கிக் கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களையும் முதலில் வீட்டிற்கு கொண்டு வந்தவுடன் மஞ்சள் தண்ணீரை கொண்டு நன்றாக கழுவி விடுங்கள். அதன் பின்பு சிறிது நேரம் ஈரத்தினை ஆற வைத்து விட வேண்டும்.

oomathai1

ஊமத்தங்காய் பரிகாரம் | Oomathangai deepam pariharam

ஒரு மஞ்சள் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். மஞ்சள் துணியில் முதலில் குலதெய்வத்தை வேண்டி 1 ரூபாய் நாணயத்தை வைத்து, அந்த நாணயத்தோடு தயாராக எடுத்து வைத்திருக்கும் ஊமத்தங்காய், ஊமத்தம்பூ இந்த இரண்டு பொருட்களையும் வைத்து ஒரு முடிச்சு போட்டு உங்கள் வீட்டின் நிலைப்படியில் மஞ்சள் முடிச்சினை கட்டி தொங்க வைத்து விடுங்கள். இந்த முடிச்சை வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் தயார் செய்து நிலை வாசல் படியில் மாட்டலாம்.

- Advertisement -

தினமும் வீட்டில் தீபம் ஏற்றி ஊதுபத்தி காண்பிக்கும் போது இந்த முடிச்சுக்கும் ஊதுவத்தி காண்பித்தால் போதுமானது. இதைப்போல் உம்மத்த செடியில் இருந்து இலைகள் கிடைத்தால் அதை பறித்து வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். இந்த ஊமத்தம் இலைகளை சுத்தமான மஞ்சள் தண்ணீரில் கழுவி விட்டு, இந்த இலைகளால் வீட்டில் இருக்கும் விநாயகருக்கு திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து வர வேண்டும். ஊமத்தம் பூவையும் விநாயகருக்கு வீட்டில் சூட்டலாம். உங்களுக்கு தெரிந்த விநாயகரின் நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்தால் போதும். (3, 5, 7 என்று ஊமத்தை இலைகளை ஒற்றைப்படையில் எடுத்துக் கொள்ளுங்கள்.)

umathangai

3 வார திங்கட்கிழமை விநாயகருக்கு ஊமத்தை இலை அர்ச்சனை, ஊமத்தம் பூவைச் சூட்டி, உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டாலும், மீளமுடியாத கஷ்டத்திற்கு கூடிய விரைவில் விமோசனம் கிடைக்கும். நிலை வாசலில் கட்டி வைத்திருக்கும் முடிச்சு, உங்கள் வீட்டிற்குள் மேலும் மேலும் கஷ்டம் நுழைவதை தடுக்கும். கெட்ட நேரம், கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் இதில் உங்களுக்கு எதன் மூலம் கஷ்டம் வந்தாலும் அந்த கஷ்டத்தை நிவர்த்தி செய்யக் கூடிய சக்தி இந்த இந்த 3 பரிகாரங்களுக்குமே உண்டு.

vinayagar-1

வீட்டில் கெட்ட சக்தி நடமாட்டம் உள்ளது, கண் திருஷ்டி உள்ளது என்றால் ஊமத்தங்காய் தீபம். வீட்டிற்குள் கஷ்டம் நுழைய கூடாது என்றால் ஊமத்தங்காய் பூ சேர்ந்த மஞ்சள் நிற முடிச்சு, கஷ்டங்களை நிவர்த்தி செய்ய விநாயகருக்கு ஊமத்தை இலை அர்ச்சனை! மூன்று பரிகாரங்களையும் சேர்த்தும் செய்யலாம். அப்படி இல்லை என்றால், இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை செய்தாலும் தவறு கிடையாது . நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்து நல்ல பலனை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வேன்.

- Advertisement -