1/2 கப் அரிசி மாவு இருந்தால் 10 நிமிடத்தில் சாஃப்டான ‘உப்பு உருண்டை’ இப்படி சூப்பராக சுவையாக செய்து விடலாம்!

uppu-urundai0
- Advertisement -

ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும் பொழுது கண்டதையும் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ளாமல் நல்ல ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளை வீட்டிலேயே நாம் செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. அப்படி ஒரு வகையான பத்து நிமிடத்தில் செய்யக் கூடிய எளிதான ஸ்நாக்ஸ் வகை தான் ‘உப்பு உருண்டை’. அரை கப் அரிசி மாவு இருந்தால் கூட போதும் சட்டென செய்து விடலாம். ஆரோக்கியாமான இந்த உப்பு உருண்டை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

uppu-urundai

உப்பு உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 1/2 கப்
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்

- Advertisement -

பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் – 1
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – 1 கொத்து

uppu-urundai

தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
வெங்காயம் – 1
உப்பு – தேவையான அளவிற்கு
எண்ணெய் – தேவையான அளவிற்கு

- Advertisement -

உப்பு உருண்டை செய்முறை விளக்கம்:
அரை கப் அளவிற்கு இடியாப்ப மாவு அல்லது கொழுக்கட்டை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை தாளித்தம் செய்யுங்கள். பின்னர் மிளகாய்களை நறுக்கி போட்டு, தேங்காய் துருவல் சேர்த்து, தேவையான அளவிற்கு பெருங்காயத்தூள் போட்டு வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

uppu-urundai2

பின்னர் இவற்றை அரிசி மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். சூடாக இருக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி மாவை கிண்டிக் கொண்டே வர வேண்டும். இதனால் நன்றாக மாவு வெந்து வரும். பின்னர் உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.

uppu-urundai3

இட்ளி அவிப்பது போல இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி ஒரு காட்டன் துணியை விரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் இந்த உருண்டைகளை வைத்து 10 நிமிடம் மூடி வைத்தால் போதும். மிருதுவான ஆரோக்கியம் மிகுந்த கார உப்பு உருண்டை தயாராகி இருக்கும். கொழுக்கட்டை செய்வது போல தான் இதுவும்! கொழுக்கட்டை இனிப்பு உருண்டை, உப்பு உருண்டை என்பது காரம் அவ்வளவு தான் வித்தியாசம். கட்டாயம் மாவில் சுடு தண்ணீர் மட்டுமே ஊற்ற வேண்டும்.

uppu-urundai4

அப்போது தான் மாவு மிருதுவான உருண்டையாக நமக்கு வரும். இல்லையென்றால் மாவு கெட்டியாக கடிப்பதற்கு சிரமப்படும் அளவிற்கு வந்து விடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னி வைத்து சாப்பிட்டால் ஒரு குட்டி பிரேக் பாஸ்ட் முடித்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே இதனை விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் உங்கள் வீட்டில் ஒரு முறை இப்படி செய்து கொடுத்து அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -