குடும்பத்தில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனையாக வந்து வீட்டில் நிம்மதியே இல்லையா? அப்படியானால் குலதெய்வ கோவிலுக்கு இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கிக் கொடுத்தால் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விடும்.

kula dheivam
- Advertisement -

சில குடும்பங்களை பார்த்தால் தெரியும் எப்போதும் ஏதோ ஒரு பிரச்சனையிலே உழன்று கொண்டிருப்பார்கள். ஒன்று சரியாகி அப்பொழுது தான் அப்பாடா என்று நினைப்பார்கள் அதற்குள் அடுத்த பிரச்சனை வந்து விடும். இப்படி தொடர்ந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து குடும்பத்தில் நிம்மதியே இல்லாமல் இருக்குமேயானால் அங்கு குலதெய்வத்தின் அருள் இல்லாமல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த குலதெய்வத்தின் அருளைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய ஒரு தகவலை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

குடும்பம் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டுமென்றால் நிச்சயாமாக அங்கு குலதெய்வத்தின் அருளும் ஆசியும் நிறைந்து இருக்க வேண்டும். அது இல்லாத பட்சத்தில் நாம் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் அங்கு பணம் மழையே பொழிந்தாலும் நிம்மதியோ சந்தோஷமோ இருக்காது. குடும்பம் விருத்தி அடைந்து அடுத்த கட்டத்திற்கு செல்லாது. ஆகையால் தான் குலதெய்வ வழிபாட்டிற்கு நம் முன்னோர்கள் காலம் முதல் இன்றைய காலக்கட்டம் வரை அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

- Advertisement -

பிரச்சனைகள் தீர குலதெய்வம் வழிபாடு
நம் குடும்பம் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற குலதெய்வ கோவிலுக்கு நல்லெண்ணையை வாங்கிக் கொடுக்க வேண்டும். நல்லெண்ணெய் என்பது வெப்பத்தை குறைத்து குளுமையை தரக் கூடியது. அப்படியான இந்தப் பொருளை நம் குலதெய்வத்திற்கு வாங்கிக் கொடுக்கும் போது குலதெய்வத்திற்கு நம் மீது இருக்கும் கோபம் தணியும் என்று சொல்லப்படுகிறது.

குலதெய்வம் வெகு தொலைவில் உள்ளது எங்களால் செல்ல முடியாது என்று நினைப்பவர்கள் பணமாக அனுப்பியாவது இந்த நல்லெண்ணையில் உங்கள் குலதெய்வத்திற்கு அபிஷேகம் செய்ய சொல்லுங்கள். அத்துடன் குலதெய்வத்திற்கு எரியும் தீபத்திலும் நீங்கள் வாங்கி கொடுக்கும் எண்ணெய் சிறிதளவாது இருக்க வேண்டும் அதையும் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி நீங்கள் வாங்கிக் கொடுக்கும் இந்த நல்லெண்ணெய் உங்கள் குலதெய்வ கோவிலுக்குள் சென்றாலே போதும். உங்கள் குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து நிம்மதி நிலவ ஆரம்பித்து விடும்.

- Advertisement -

இதிலும் பலருக்கும் இந்த ஒரு சந்தேகம் இருக்கும். குலதெய்வம் எதுவென்று எங்களுக்கு தெரியாது நாங்கள் என்ன செய்வது என்று கேள்வி எழும். இப்படி ஆனவர்கள் குலதெய்வத்திற்கு வாங்கிக் கொடுக்க முடியாத பட்சத்தில் உள்ளவர்களும் தங்களுக்கு இஷ்ட தெய்வமான ஏதேனும் அம்மன் கோவிலுக்கு இது போல வாங்கி கொடுக்கலாம். இது குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும். குலதெய்வம் எதுவென்று தெரிந்தவர்கள் கட்டாயம் குலதெய்வ கோவிலுக்கு மட்டும் தான் இதை வாங்கி கொடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மல்லிகை பூவை வைத்து இப்படி செய்தால் போதும். நஷ்டத்தில் இருக்கும் தொழில் கூட லாபகரமாக மாறும். வீட்டில் தங்கு தடை இன்றி பணம் வந்துகொண்டே இருக்கும்.

இந்த முறையில் குலதெய்வத்தை குளுமைப்படுத்தி வழிபாடு செய்து வரும் பொழுது உங்கள் குடும்பம் என்றென்றைக்கும் பிரச்சனை இல்லாமல் நிம்மதியுடனும் சந்தோஷமாகவும் வாழ்வதில் எந்த சந்தேகமும் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்து குலதெய்வத்தின் அருளை பெறலாம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -