கருப்பா இருக்கீங்கன்னு இனி கவலையே படாதீங்க. ஊற வெச்ச உளுந்து உங்களை உலக அழகியா மாத்திடும்.

face11
- Advertisement -

கருப்பா இருக்கோமே என்ற கவலை நிறைய பேருக்கு உள்ளது. ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி கலராக இருப்பவர்களை பார்க்கும்போது ஒரு ஆசை. நாமும் இவர்களைப் போல அழகாக இல்லையே என்று. இதற்காக யாரும் வருத்தப்பட வேண்டாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அழகுதான். வெள்ளையாக இருப்பவர்கள் ஒரு அழகு என்றால், கருப்பாக இருப்பவர்களும் அழகுதான். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ரொம்ப கருப்பா இருக்குமே அப்படின்னு நினைச்சு நினைச்சு வருத்தப்படாதீங்க. வெள்ளையாக இருப்பவர்களும் இன்னும் இன்னும் மெருகேறுவதற்கு இந்த குறிப்பை பின்பற்றலாம். மாநிறமாக இருப்பவர்கள், கருப்பாக இருப்பவர்கள் தங்களுடைய நிற அழகை இன்னும் கொஞ்சம் கூட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த குறிப்பை பயன்படுத்தலாம்.

சமையலறையில் இருக்கக்கூடிய வெறும் இரண்டு பொருட்களை வைத்தே இந்த பேக்கை தயார் செய்து விட முடியும். நம் எல்லோர் வீட்டு சமையல் அறையிலும் இருக்கக்கூடிய உளுந்து, வெந்தயம் இந்த இரண்டு பொருட்கள்தான் தேவை. உங்களுடைய வீட்டில் கருப்பு உளுந்து இருந்தால் அதை இந்த குறிப்புக்கு பயன்படுத்துங்க. கருப்பு உளுந்து இல்லை என்பவர்கள் வெள்ளை உளுந்தையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் உளுந்து, 1 ஸ்பூன் வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி முதலில் நன்றாக கழுவி விடுங்கள். பிறகு நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும். ஐந்து மணி நேரம் நிச்சயமாக இந்த இரண்டு பொருட்களும் ஊறவேண்டும். அப்போதுதான் மிக்ஸி ஜாரில் போட்டு ஆட்டி எடுக்கும் போது நைஸ் ஆக நமக்கு கிடைக்கும். முந்தைய நாள் இரவே இதை தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொண்டாலும் சரி.

ஊறிய இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸி ஜாரில், ஊற வைத்த தண்ணீரோடு போட்டு நைசாக அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இந்த பேக்கை அப்படியே முகம் கழுத்து பகுதிகளில் அப்ளை செய்ய வேண்டும். அப்ளை செய்த பின்பு லேசாக மசாஜ் செய்து அப்படியே காய விட்டு விடுங்கள். 30 நிமிடம் கழித்து உங்களுடைய முகத்தை தண்ணீரில் நனைத்துக்கொண்டு மீண்டும் 5 நிமிடம் போல வட்ட வடிவில் மசாஜ் செய்து குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட வேண்டும் சோப்பு போட்டு கழுவ கூடாது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: இரண்டே வாரத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்தக்கூடிய சக்தி இந்த 2 இலைகளுக்கு உண்டு. அடுத்த 2 மாதத்தில், 2 மடங்கு முடி வளர்ச்சியை தரும் ஹேர் பேக்.

இப்படி செய்த முதல் முறையிலேயே உங்களுடைய முகம் பளிச்சென மாறி இருப்பதை உணர முடியும். ஆனால் அடுத்த நாள் மீண்டும் உங்களுடைய முகம் பழைய நிறத்திற்கு வந்துவிடும். வாரம் தோறும் தொடர்ந்து 2 முறை இந்த குறிப்பை பின்பற்றி வர உங்களுடைய முகம் நிரந்தரமாக வெள்ளையாவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. வெந்தயமும் உளுந்தம் பருப்பும், சரும நிறத்தை அதிகரிக்க கூடிய தன்மை கொண்ட பொருட்கள். கொஞ்சம் குளிர்ச்சி நிறைந்த பொருட்களும் கூட. உங்களுக்கு ரொம்பவும் குளிர்ந்த உடல் நிலை என்றால் இந்த பொருட்களை 15 நிமிடம் மட்டுமே முகத்தில் பேக் போட்டுக்கொண்டு கழுவி விட வேண்டும்.

நாளுக்கு நாள் உங்களுடைய சரும அழகு கூடிக் கொண்டே செல்ல இந்த ஒரு குறிப்பு போதும். ட்ரை பண்ணி பாருங்க. அதிக செலவு செய்ய வேண்டாம். அதிகம் மெனக்கெட வேண்டாம். ஆரோக்கியமான அழகைப் பெற இந்த அழகு குறிப்பு உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -