உங்கள் வாக்கு பலிக்க, நீங்கள் சொல்வதை எல்லோரும் கேட்டு நடக்க உங்களுடைய வாயில் இந்த 1 பொருளை போட்டுக் கொண்டால் போதும்.

elekkai
- Advertisement -

நாம் பேசக் கூடிய பேச்சை நான்கு பேர் செவிகொடுத்து கேட்க வேண்டும் என்றாலே நமக்கு தனியாக ஒரு திறமை தேவைப்படுகிறது. சிலபேர் என்னதான் கழுதையாக கத்தினாலும், அவர்களுடைய பேச்சைக் கேட்பதற்கு ஆளே இருக்காது. குறிப்பாக நான்கு பேரை வைத்து வேலை வாங்க கூடிய இடத்தில் இருப்பவர்கள் சொல்லுக்கு ஒரு மரியாதை இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களுடைய பேச்சுக்கு ஒரு மரியாதை இருந்தால் தான் ஆளுமைக்கு ஒரு பவர் இருக்கும்.

இப்படி சொல் வாக்கிற்கு என்று தனியாக, செல்வாக்கைப் பெற வேண்டுமென்றால் என்ன செய்வது. பின் சொல்லக்கூடிய பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய சொல்லுக்கு ஒரு தனி மதிப்பே வந்துவிடும். நீங்கள் சொல்லக்கூடிய வாக்கும் பலிகும். அடுத்தவர்களுக்கு கொடுத்த வாக்கை சொன்ன நேரத்தில் காப்பாற்றி கொடுப்பீர்கள். அதற்காக யாருக்காவது சாபம் கொடுத்துவிட்டு அது பலிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடாது. நல்லதையே நினைத்து நல்லது மட்டுமே பேசி நல்ல விஷயங்களை சாதித்துக் கொள்ள இந்த பரிகாரம் உங்களுக்கு உடனடியாக நல்லதொரு பலனை கொடுக்கும்.

- Advertisement -

காலையில் எழுந்து பல் தேய்த்துவிட்டு வாயை முதலில் சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு வெறும் தண்ணீரைக் கொஞ்சமாக பருகிக் கொள்ளுங்கள். ஒரே ஒரு ஏலக்காயை எடுத்து உங்களுடைய பல் இடுக்குகளில் வைத்துக் கொள்ள வேண்டும். கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து ‘ஓம் ஸ்ரீம்’ என்ற வார்த்தையை 27 முறை உச்சரிக்க வேண்டும்.

அப்போது உங்களுடைய வாயில் ஏலக்காயில் இருந்து உமிழ்நீர் சுரக்கும். அந்த உமிழ் நீரை அப்படியே விழுங்கி விடலாம். மந்திரத்தை உச்சரித்து விட்டு ஏலக்காயை வெளியே துப்பி விடலாம். தொடர்ந்து 48 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து வந்தால் உங்களுடைய வாக்கு பலிக்க தொடங்கும். உங்களுடைய சொல்லுக்கு ஒரு செல்வாக்கு கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய இடத்திற்கு உங்களை இந்த பரிகாரம் கொண்டு செல்லும்.

- Advertisement -

முக்கியமான விஷயங்களை பேசுவதற்காக வெளியிடங்களுக்கு செல்கிறீர்கள். உதாரணத்திற்கு பெரிய வேலைக்கு இன்டர்வியூக்கு போறீங்க. அதில் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதற்கு நீங்கள் திறமையாக பேச வேண்டும் அல்லவா. அப்போது ஒரு ஏலக்காயை உங்கள் கையிலேயே எடுத்துச் செல்லுங்கள். இன்டர்வியூக்கு செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு ஏலக்காயை வாயில் போட்டு சிறிது நேரம் வைத்திருந்து அதன் பின்பு ஏலக்காயை கீழே துப்பி விட்டு நேர்காணலுக்குச் செல்லுங்கள். உங்களுடைய பேச்சில் வரக்கூடிய வித்தியாசத்தை நீங்களே கவனிப்பீர்கள்.

இதே போல வேறு எந்த நல்ல காரியத்திற்காக சென்றாலும் அது சக்ஸஸ் ஆக வாய்க்குள் ஒரு ஏலக்காய் போட்டுக்கொண்டால் போதும். இது ஒரு சிறிய பரிகாரம் தான். முயற்சி செய்து பார்த்துவிட்டு பலன் என்ன என்பதை அவரவர் உணர்ந்தால் தான் புரியும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -