சமையலறையில் இருக்கும் இந்த 1 பொருளை உங்கள் கையால் தொட்டு விட்டு, கொடுத்த பணத்தை வசூல் செய்ய செல்லுங்கள். வராத பணம் கூட வீடு தேடி வந்துவிடும்.

cash
- Advertisement -

நிறைய பேர் நம்பிக்கையின் பேரிலோ அல்லது கடனாகவோ அடுத்தவர்களுக்கு பணம் நகை சொத்து பத்திரம் போன்ற பொருட்களை எல்லாம் கொடுத்து இருப்பார்கள். ஆனால் திருப்பி கேட்டால், அந்த பணமோ நகையோ நமக்கு மீண்டும் கிடைக்காது. நம்முடைய அவசர தேவைக்கு, நம்முடைய பணத்தை நகையை பயன்படுத்த முடியாமல் சிக்கிக் கொள்வோம். இப்படி நீங்கள் கடனுக்காக கொடுத்து இழந்த பணத்தை, நகையை திரும்பவும் மீட்டெடுப்பதற்கு உண்டான ஒரு எளிமையான ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை செய்வது என்பது ரொம்ப ரொம்ப சிறப்பு.

கொடுத்த பணத்தை திரும்ப பெற செய்ய வேண்டிய பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு கண்ணாடி பவுல் தேவை. அந்த கண்ணாடி பவுல் நிரம்ப சர்க்கரை, அந்த சர்க்கரைக்கு மேலே வைப்பதற்கு 9 கிராம்பு. இது மட்டும் இருந்தால் போதும். கண்ணாடி பவுலில் நிரம்ப சக்கரையை கொட்டி வைத்து, 9 கிராம்புகளை சர்க்கரையில் சொருகி வைக்க வேண்டும். பூ போல இருக்கும் மொட்டுப்பகுதி மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும். கிராம்பின் காம்பு பகுதி சர்க்கரையில் புதைந்து இருக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி தயார் செய்த இந்த கிண்ணத்தை உங்கள் வீட்டு சமையல் அறையில், சமையல் மேடையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். நீங்கள் கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதற்கு வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பாக, உங்களுடைய வலது கை விரல்களை இந்த சர்க்கரையின் மேலும், கிராம்பின் மேலும், படும் படி தொட்டுக் கொண்டே, மனதார மகாலட்சுமி தாயை வேண்டிக் கொள்ளுங்கள். நீங்கள் கொடுத்த பணம் நகை திரும்பவும் உங்கள் கைக்கே வந்து விட வேண்டும் என்றவாறு வேண்டுதலை நம்பிக்கையோடு வைக்க வேண்டும்.

பிரார்த்தனை செய்து கொண்டு, தொலைபேசியின் மூலம் பணம் வாங்கியவரை அழைத்து, பணத்தை திருப்பி கேட்கலாம். அப்படி இல்லை என்றால் நேரில் சென்று உங்களுடைய நிலைமையை எடுத்துச் சொல்லி, வாங்கிய பணத்தை திரும்பித் தருமாறு வேண்டுகோள் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்து, சமையல் அறையில் இருக்கும் சர்க்கரையை தொட்டு விட்டு சென்றால், உங்களுடைய முயற்சிகளில் சீக்கிரம் வெற்றி கிடைக்கும். உங்களிடம் இருந்து பணத்தை வாங்கி சென்றவர்கள், நகையை வாங்கி சென்றவர்கள் சீக்கிரமே அதை, உங்களுக்கு திருப்பி கொடுத்துவிடுவார்கள். அதற்கு உண்டான எளிமையான தாந்திரீக பரிகாரம் தான் இது.

- Advertisement -

நீங்கள் கிண்ணத்தில் சர்க்கரையை கொட்டி, ஏலக்காயை சொருகி வைக்கக்கூடிய நேரம் சுக்கிர ஹோரையாக இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7, மதியம் 1 மணியிலிருந்து 2, இரவு 8 மணியிலிருந்து 9 இந்த மூன்று நேரத்தில், ஏதாவது ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்து, அந்த கண்ணாடி பவுலை தயார் செய்து சமையலறையில் வைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஜாதகத்தில் இருக்கும் சுக்கிர தோஷம் நீங்கி சுக்கிர வசியம் ஏற்பட்டு செல்வ செழிப்புடன் வாழ ஒரு கைப்பிடி மொச்சை இருந்தால் அதை இப்படி செய்து விடுங்கள் போதும்.

அதேபோல இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இந்த கிண்ணத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை இலவங்கத்தை மரத்தடியில் கொட்டி விட்டு, மீண்டும் புதியதாக சர்க்கரை லவங்கம் வைக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -