ஜாதகத்தில் இருக்கும் சுக்கிர தோஷம் நீங்கி சுக்கிர வசியம் ஏற்பட்டு செல்வ செழிப்புடன் வாழ ஒரு கைப்பிடி மொச்சை இருந்தால் அதை இப்படி செய்து விடுங்கள் போதும்.

deepam-sukran
- Advertisement -

ஒருவர் வாழ்க்கையில் நல்ல பண செழிப்புடன் வாழ வேண்டுமெனில் அவருக்கு சுக்கிர யோகம் இருக்க வேண்டும். பண வரவிற்காக நாம் எந்த ஒரு பரிகாரம் செய்தும் அதற்கான பலன் கிடைக்கவில்லை என்றால் அந்த ஜாதகத்தில் சுக்கிரதோஷம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. இந்த சுக்கிர தோஷம் இருப்பவருக்கு எந்த ஒரு காரியங்களும் எளிதில் நடைபெறாது. காரிய தடை, திருமண தடை, தொழில் தடை போன்ற பல்வேறு முடக்கங்கள் இருக்கும். இதை போக்குவதற்கான எளிய ஒரு பரிகாரத்தை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

சுக்கிர தோஷம் நீங்கி சுக்கிர யோகம் பெற
இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த கிழமையில் வேண்டுமானாலும் தொடங்கலாம். எந்த தவறும் இல்லை இந்த பரிகாரத்திற்கு தேவையானது ஒரு கைப்பிடி அளவு வெள்ளை மொச்சை, ஒரு வெள்ளை நிற துணி இது மட்டும் இருந்தால் போதும். இந்த வெள்ளை நிற துணியில் மொச்சை பயிரை சேர்த்து ஒரு முடிச்சாக கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த முடிச்சை இரவு நீங்கள் உறங்கும் முன் தலையனை அடியில் வைத்து விட்டு உறங்கி விடுங்கள். மறுநாள் காலையில் இதை எடுத்து ஒரு இடத்தில் பத்திரமாக வைத்து விட்டு மறுபடியும் அடுத்த நாள் இரவு உறங்கும் போது மறுபடியும் தலையணை அடியில் வைக்க வேண்டும். இப்படி ஒன்பது நாட்கள் தொடர்ந்து வைத்த பிறகு 10வது நாள் இந்த மொச்சை பயிறை வேக வைத்து காக்கைக்கு உணவாக வைத்து விட வேண்டும். இவ்வளவு தான் பரிகாரம். இந்த பரிகாரத்தை என்று தொடங்குகிறோமோ அன்றிலிருந்து 9 நாட்கள் வரை தொடர்ந்து செய்ய வேண்டும்.

இந்த மொச்சை பயிரை வேக வைத்து காக்கைக்கு உணவாக வைக்கும் நாள் அன்று மாலை அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். உங்களால் முடியுமானால் அர்ச்சனை அபிஷேகம் போன்றவற்றை செய்யலாம். ஆனால் விளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் அவசியம். ஒரு வேளை நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் பெருமாள் இல்லையெனில் வீட்டில் பெருமாள் படத்திற்கு முன்பாக விளக்கு ஏற்றி விடுங்கள். விளக்கு ஏற்றுவது அவசியம்.

- Advertisement -

இப்படி விளக்கு ஏற்றுவதோடு இல்லாமல் அதற்கு அடுத்த நாள் வெள்ளை நிறத்தில் உள்ளவற்றை நாம் பிறருக்கு தானமாக கொடுக்க வேண்டும். வெள்ளை நிறத்தில் உள்ள வஸ்திரங்கள், வெள்ளை நிறத்தில் உள்ள பூ, வெள்ளை நிற சாதம், தயிர் சாதம், கற்கண்டு சாதம் வேண்டும். இந்த சாதத்தை தாளிக்காமல் முழுவதுமாக வெள்ளையாக இருக்கும்படி செய்து கொடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி தாயாருக்கு படைத்த தேனை இந்த இடத்தில் ஊற்றினாலே போதும். பணத்தடைகளை அனைத்தையும் தகர்த்தெறிந்து பண வரவை தாராளமாக அள்ளி அள்ளி கொடுப்பார்.

வெள்ளை நிறமானது சுக்கிர காரியத்துவம் கொண்டதாக உள்ளது. அதே போல் மொச்சையானது சுக்கிர காரியத்துவம் கொண்ட து. இதை முடிச்சாக கட்டி காக்கைக்கு வைக்கும் போது இந்த தோஷம் நிவர்த்தியாகும். இந்த எளிய பரிகாரத்தை செய்து சுக்கிர தோஷத்தை நீங்கி சுக்கிரவாசியத்தை பெற்று செல்வ வளத்துடன் வாழ வழி தேடி கொள்ளலாம். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -