வீட்டின் இந்த திசையில் மட்டும் இவற்றை தெரியாமல் கூட வைக்காதீர்கள்! இதுதான் உங்களுக்கு பணத்தை கொடுக்கக் கூடிய திசையாக இருக்கிறது தெரியுமா?

vasthu
- Advertisement -

நம்முடைய வீட்டில் ஒவ்வொரு திசையிலும், ஒவ்வொரு விதமான பலன்களை கொடுக்கக்கூடிய அம்சம் உள்ளது என்று வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது. வாஸ்து பகவானுடைய அம்சம் நம்முடைய வீட்டில் நிறைந்து காணப்படுகிறது. அதில் இந்த ஒரு திசையில் வைக்க கூடாத பொருட்களை வைத்தால் செல்வ வளம் தடைபடும் என்றும் கூறுகிறது. அந்த திசை எந்த திசை? அதில் வைக்க கூடாத பொருட்கள் என்ன? என்பது போன்ற வாஸ்து சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வாஸ்து ரீதியாக வடகிழக்கு என்பது தான் குபேரனுடைய திசையாக இருக்கிறது. வாஸ்து பகவானும், குபேரனும் இணையும் பொழுது நமக்கு பணவரவிற்கு தடையே இருக்காது. எங்கிருந்து தான் பணம் வரும் என்று தெரியாது, பணம் வந்து கொண்டே இருக்கும். சிலர் திடீரென பணக்காரர்களாக ஆவதும் இதனால் தான் போலும்!

- Advertisement -

திசைகளில் வடகிழக்கு திசை என்பது ரொம்பவும் முக்கியமானது. இங்கு குபேரன் வசிப்பதால் பெரும்பாலும் பீரோ, லாக்கர் போன்றவற்றை இங்கு தான் வைப்பார்கள். இந்த இடத்தில் கழிப்பறை அமைந்திருக்கக் கூடாது. அப்படி அமைந்திருந்தால் தொடர் நஷ்டங்களும், தோல்விகளும் வந்து சேரும். வடகிழக்கு திசையில் செருப்பு, ஷூ, இவைகளுடைய ஸ்டாண்ட் மற்றும் கனமான எந்த பொருட்களையும் இந்த இடத்தில் கண்டிப்பாக வைக்கவே கூடாது. இப்படி வைப்பதால் தரித்திரம் உண்டாகும். எதிர்மறை ஆற்றல்களை இவை ஈர்க்கக்கூடிய தன்மை கொண்டுள்ளதால், இவை உடனடியாக அகற்றப்பட வேண்டும். இல்லையேல் குடும்பத்தில் தொடர் பிரச்சினைகள் வரத் தான் செய்யும்.

அதுபோல வடகிழக்கு மூலையில் குப்பையாகவும் வைத்திருக்கக் கூடாது. சிலர் அந்த இடத்தில் தான் குப்பைகளை சேர்ப்பார்கள் அல்லது குப்பை தொட்டியை கொண்டு போய் வைத்திருப்பார்கள். வடகிழக்கு என்பது குபேரன் ஆட்சி செய்யும் திசை, அந்த இடத்தில் குப்பையை வைத்தால் எப்படி பணம் சேரும்? பணம் சேர்வதற்கு பதிலாக அது கரைந்து கொண்டே செல்லும், எனவே இந்த இடத்தில் குப்பைகளை குவிக்காதீர்கள்.

- Advertisement -

வீட்டின் வடக்கு பிரிவு முழுவதும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வடக்கு திசையில் உள்ள சுவற்றில் கண்ணாடியை மாட்டி வைத்தால் அது பன்மடங்கு பெருகுவதாக நம்பிக்கை உண்டு. நகை பெட்டி வைத்திருக்கிறீர்கள், நகை வைக்கும் இடங்களில் கூட நீங்கள் இது போல கண்ணாடி வைத்தால் அந்த நகையானது பன்மடங்கு பெருகும் என்கிற நம்பிக்கை உண்டு. அதே போல பணம் வைக்கும் இடத்திலும் பணம் கண்ணாடியில் தெரியும்படி கண்ணாடி ஒன்றை சிறியதாக வைத்தால் பணம் பெருகும் என்பதும் உண்டு.

இதையும் படிக்கலாமே:
ராகுவின் சாரம் பெற்ற இந்த ஒரு மரத்தை தெரியாமல் கூட இந்த இடத்தில் வீட்டில் வளர்க்க வேண்டாம்!

அதே போல தான் வடக்கு திசையில் கண்ணாடி வைத்தால் பணவாரமானது குவியும் என்கிற நம்பிக்கையும் வாஸ்து சாஸ்திரத்தில் உண்டு. அந்த இடத்தில் கண்ணாடி மட்டும் அல்லாமல் குபேர எந்திரம், குபேர வஸ்திரம் போன்றவற்றை வைத்தாலும், குபேரன் படத்தை மாட்டி வைத்தாலும் கூட உங்களுக்கு செல்வ வளம் அதிகரிக்கும். பண வரவு தடையில்லாமல் வந்து கொண்டே இருக்கும். வருமானம் பெருகும், புதிய வாய்ப்புகள் கிடைக்கும், நினைத்ததெல்லாம் நடக்கும். எனவே வடகிழக்கு திசையை நீங்களும் சரியாக அமைத்து பலன் பெறலாமே!

- Advertisement -