வாடகை வீட்டை மாற்றும்போது மறக்காமல் இந்த 1 பொருளை கையோடு எடுத்து வாருங்கள். நீங்கள் வாழ்ந்த வாடகை வீட்டிலிருந்த அதிர்ஷ்டமும், சந்தோஷமும், உங்களுடனே புதுசாக குடியேறும் வீட்டிற்குள் வந்துவிடும்.

house
- Advertisement -

வாடகை வீட்டில் குடி இருக்கின்றோம். வாடகை வீட்டில் வாழும் போதும், பூஜை புனஸ்காரங்கள் செய்வோம். நல்ல காரியங்கள் செய்வோம். நமக்கும் நம் குடும்பத்திற்கும், நல்லது செய்யக்கூடிய மந்திரங்களை உச்சரிப்போம். இந்த பாசிட்டிவ் எனர்ஜி எல்லாம் நாம் வாழ்ந்து கொண்டிருக்க கூடிய வாடகை வீட்டில் இருக்கும். இப்போது அந்த வாடகை வீட்டை விட்டுவிட்டு, இன்னொரு புதுசாக வாடகை வீட்டுக்கு செல்ல போகின்றோம். அல்லது சொந்தமாக வீடு கட்டி குடி போகப் போகின்றோம் என்றால், நாம் ஏற்கனவே வாழ்ந்த இந்த வாடகை வீட்டில் சேர்த்து வைத்திருக்கும் பாசிட்டிவ் எனர்ஜியை எப்படி நம்மோடு எடுத்து செல்வது, அதற்கான ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிய வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சில பேருக்கு தற்போது வசித்துக் கொண்டிருக்கும் வீட்டை விட்டு இன்னொரு வீட்டுக்கு போவதற்கு மனசு இருக்காது. வாடகை வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் சொந்த வீடு போல உரிமையோடு சந்தோஷத்தோடு வாழ்ந்திருப்பார்கள். அந்த வாடகை வீட்டில் தான் பல வருடங்கள் வாழ்ந்து, தங்களுடைய குழந்தைகளுக்கு திருமணம் செய்து, பேரப்பிள்ளைகளை பார்த்து இருப்பார்கள். இப்படிப்பட்ட வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு குடி பெயர்வது என்பது ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயமாகத்தான் இருக்கும்.

- Advertisement -

வாடகை வீடு மாற்றும் போது செய்ய வேண்டிய பரிகாரம்:
ஆனால் விதி வேறு வீட்டிற்கு மாறியாக வேண்டும் என்ற நேரம் காலம் வரும்போது அதை நாம், மாற்றி தான் ஆக வேண்டும். வேறு எதுவும் செய்ய முடியாது. ஆனால் இப்படி வீடு மாற்றும்போது உங்களுடைய கையில் எலுமிச்சம் பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் எடுப்பதற்கு முன்பாக உங்கள் வீட்டு பூஜை அறையில் அமர்ந்து உங்களுடைய வலது கையில் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து, குல தெய்வத்தை நினைத்து வேண்டிக் கொள்ள வேண்டும்.

இந்த வீட்டில் இருக்கும் அதிர்ஷ்டமும், சந்தோஷமும் செய்த பூஜை போலீஸ்காரத்தில் கிடைத்த நன்மைகள் எல்லாமும் எங்களுடனே எங்கள் புது வீட்டிற்கு வர வேண்டும். இந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் வீட்டு குல தெய்வமும் காவல் தெய்வமும் இஷ்ட தெய்வமும் எங்களுடனே எங்கள் புது வீட்டிற்கு வந்து எங்களை பாதுகாக்க வேண்டும் என்று வார்த்தைகளை சொல்லி ஒரு சங்கல்பம் மேற்கொள்ள வேண்டும். அப்போது உங்களுடைய வலது கையில் அந்த எலுமிச்சம் பழம் இருக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி வேண்டுதல் வைக்கும் போது பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும். வாசம் நிறைந்த சாம்பிராணி தூபம் இருக்க வேண்டும். வேண்டுதலை, முடித்தவுடன் கையில் இருக்கும் எலுமிச்சம்பழத்தை தரையில் வைக்காதீங்க. ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிச்சாக கட்டி உங்களுடைய ஹேண்ட் பேகிலும் அல்லது வேறு ஏதாவது பையிலோ வைத்து ஆனியில் மாட்டி விடுங்கள்.

புது வீட்டிற்கு சென்று அங்கு ஜாமான்களை எல்லாம் அடுக்கி வைத்துவிட்டு பூஜை அறையில் சுவாமி படங்களை எல்லாம் மாட்டி வைத்து விட்டு, பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்து இந்த எலுமிச்சம் பழத்தை கொண்டு போய் உங்கள் வீட்டு பூஜை அறை அலமரியில் வைத்து மீண்டும் வேண்டுதல் வைக்க வேண்டும். இந்த வீட்டில் நாங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். பழை வீட்டில் இருந்த தெய்வங்கள், இந்த வீட்டில் குடியேறி எங்களை காக்க வேண்டும். அந்த வீட்டில் இருந்த அதிர்ஷ்டமும் சந்தோஷமும் இந்த வீட்டில் பரவி இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டால், அந்த எலுமிச்சம் பழத்தின் மூலம் உங்கள் பழைய வீட்டில் இருந்த அதிர்ஷ்டம் புது வீட்டிற்கு வந்துவிடும்.

- Advertisement -

பழைய வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த தெய்வங்கள் அந்த எலுமிச்சம் பழத்தின் மூலம் புது வீட்டிலும் குடியேறி விடும். ஒரு சிறிய எலுமிச்சம் பழத்திற்கு அவ்வளவு சக்தி இருக்குதுங்க. அதை கையில் வைத்துக் கொண்டு நீங்கள் எதை நினைத்தாலும் அதை அப்படியே தனக்குள் கிரகித்துக் கொண்டு அப்படியே உங்களுக்கு திரும்பவும் பிரதிபலிக்கக்கூடிய தன்மை இந்த தேவகனி என்று சொல்லப்படும் எலுமிச்சம் பழத்திற்கு உண்டு. (இதனால் நீங்கள் காலி செய்து விட்டு வந்த வீட்டில் இருக்கும் அதிர்ஷ்டத்திற்கு எந்த பாதிப்பும் வராது. நீங்கள் செய்த புண்ணியம் தான் உங்களோடு வரும். அந்த வீட்டில் இன்னொரு குடும்பம் வந்தாலும், அவர்களுக்கு எந்த வித பாதிப்பும் வராது.)

இதையும் படிக்கலாமே: நீங்க முன்னேறவே கூடாது என்று நினைப்பவர்கள் முன்பு வாழ்ந்து காட்ட, இந்த பொருளை மட்டும் எரித்து சாம்பல் ஆக்கி விடுங்கள் போதும். இப்படி செய்தால் அவர்களின் தீய எண்ணமும் இந்த தீயில் பொசுங்கி விடும்.

ஆனால் இதை நல்லதுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். எந்த ஒரு தவறான காரியத்திற்கும் பயன்படுத்தக் கூடாது. நாம் செய்யக்கூடிய தவறு நமக்கே திரும்பி விடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (இப்படி கொண்டுவரப்பட்ட எலுமிச்சம் பழம் காய்ந்த பிறகு ஓடுகின்ற தண்ணீரில் அல்லது கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.) மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாடில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -