வீட்டின் வடக்கிழுக்கு மூலையில் இதை வைத்தால், பணம் போதும் போதும் என்ற அளவுக்கு வந்து கொண்டே இருக்கும். கடன் என்ற வார்த்தைக்கு இடமே இருக்காது.

jathikai
- Advertisement -

ஏதாவது ஒரு பெரிய தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் வீட்டில் இருப்பவர்கள் கொஞ்சம் ஆழமாக யோசிக்க தொடங்கி விடுவார்கள். தேவையை பூர்த்தி செய்ய நிறைய செலவு ஆகும். என்ன செய்வது. கடன் வாங்கலாமா அல்லது வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பொருட்களை அடமானம் வைத்து பணத்தை தயார் செய்யலாமா என்று. உதாரணத்திற்கு புதிய வீடு வாங்க வேண்டும். புதிய நிலம் வாங்க வேண்டும். அல்லது புதியதாக வண்டி வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் அந்த தேவையை பூர்த்தி செய்ய நமக்கு நிறைய பணம் தேவைப்படும்.

இது தவிர வீட்டில் நம் குழந்தைகளுக்கு ஒரு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்றாலே நிறைய பணம் தேவைப்படும். குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்றாலும் இப்போது நிறைய செலவு. வாழ்க்கையை நல்லபடியாக நகர்த்திச் செல்ல வேண்டும் என்றாலே கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைதான் நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது. இப்படி வீட்டில் இருக்கக் கூடிய எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவிற்கு கையில் பணம் தேவை. கடனும் வாங்க கூடாது என்றால் என்ன செய்வது. பணத்தை வசியம் செய்ய வேண்டும். பணம் நமக்கு வசியமானால் தான், அந்த பணம் ஏதாவது ஒரு வகையில் வருமானமாக நம் கைக்கு வந்து சேரும்.

- Advertisement -

பணத்தை வசியம் செய்யக்கூடிய, குபேரரை வசியம் செய்யக்கூடிய, ஒரு சிறிய தாந்திரீக பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த பரிகாரத்திற்கு ஜாதிக்காய் – 1, ஏலக்காய் – 3, கிராம்பு – 3, 1 ரூபாய் நாணயம், இந்த நான்கு பொருட்களும் தேவை. சதுர வடிவில் ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளே மேலே சொன்ன நான்கு பொருட்களையும் ஒன்றாக வைத்து வசியமாக பச்சைக் கற்பூரம் 1 துண்டு வைத்து, இதை மஞ்சள் நூலில் முடிச்சாக கட்டி வடகிழக்கு மூலையில் யார் கண்ணுக்கும் தெரியாமல் எடுத்து வைத்து விடுங்கள்.

ஒரு ஆணியில் மாட்டி வைத்தாலும் சரி அல்லது ஒரு டப்பாவில் போட்டு திறந்தபடி வைத்தாலும் சரி. டப்பாவில் போட்டு மூடி விடக்கூடாது. இதன் உள்ளே இருக்கும் எனர்ஜி நம்முடைய வீட்டில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக வடகிழக்கு மூலையில் இந்த முடிச்சு இருக்கும்போது உங்கள் வீட்டில் இருக்கும் பணத்தடை அனைத்தும் நீங்கும். பணத்தை உள்ளே வர விடாமல் தடுக்கக்கூடிய சில சக்திகள் என்று உள்ளது. அதை எல்லாம் முறியடிக்கும் சக்தி இந்த ஜாதிக்காய் முடிச்சுக்கு உண்டு.

- Advertisement -

இதை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியமே கிடையாது. 6 மாதத்திற்கு ஒரு முறை பழைய முடிச்சுக்கு உள்ளே இருக்கும் பொருட்களை கால்படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் புதிய முடிச்சை வைக்கலாம். ஜாதிக்காய்க்கு நல்லதை அப்பயே வசியம் செய்யக்கூடிய தன்மை அதிகம் உள்ளது. நீங்கள் வேண்டும் என்றால் பணம் வைக்கும் பெட்டியில் கல்லாப்பெட்டியில் இப்படி ஒவ்வொரு ஜாதிக்காயை போட்டு வையுங்கள். அந்த இடம் எல்லாம் செழிப்பாக லக்ஷ்மி கடாட்சத்துடன் இருக்கும்.

சமையலறையில் அஞ்சறைப்பெட்டியில் ஒரு ஜாதிக்காயை போட்டு வையுங்கள். உங்களுடைய வீட்டில் தன தானியத்திற்கு எந்த ஒரு குறையும் வராது. அதாவது சாப்பாட்டிற்கு பிரச்சனை என்ற வார்த்தை இருக்காது. நீங்கள் செய்யக்கூடிய சமையல் வீணாகாமல் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிட இந்த ஜாதிக்காய் நல்லதொரு மாற்றத்தை உண்டு பண்ணும்.

சாப்பாட்டு விஷயத்தில் இது சரியில்லை அது சரியில்லை என்ற குறை இல்லாமல் வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் பிரச்சனை வராமல் இருக்க அஞ்சரை பெட்டியில் இருக்கும் ஒரு ஜாதிக்காய் போதும். நீங்கள் வேண்டுமென்றால் முயற்சி செய்து பாருங்கள். இந்த சின்ன ஜாதிக்காய் உங்களுடைய வீட்டில் பெரிய நல்ல மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -