நாளை வைகாசி மாத தேய்பிறை பிரதோஷம்! இந்த 5 ராசிகாரர்கள் நாளை சிவன் கோவிலுக்கு சென்றால் உங்களுக்கான அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்.

sivan-astro
- Advertisement -

நாளை(15.6.2023) வைகாசி மாதம் தேய்முறையில் வரவிருக்கும் பிரதோஷ தினம். இந்த பிரதோஷ தினம் வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கின்றது. நாளைய தினம் வியாழக்கிழமையோடு இந்த பிரதோஷ நாள் வந்திருப்பதால் இந்த நாளுக்கு என்ன சிறப்பு. நாளை குறிப்பாக யாரெல்லாம் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும், எந்த பூவை கொடுத்து சிவபெருமானை வழிபாடு செய்தால் கர்ம வினைகள் தீரும். குறிப்பாக நாளை தவறாமல் சிவபெருமானை எந்தெந்த ராசிக்காரர்கள், எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த விரிவான தகவலை தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

நாளை வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு:
நாளைய தினம் வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பதால் இதை குருவார பிரதோஷம் என்று சொல்லுவார்கள். குரு பகவானின் ஆசிர்வாதத்தை பெற, நாளைய தினம் சிவபெருமானோடு சேர்த்து தக்ஷிணாமூர்த்தியையும் நாம் வழிபாடு செய்யலாம். குரு திசை நடப்பவர்கள், குரு பகவானின் அருளாசியை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், நாளைய தினம் தவறாமல் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானையும் குரு பகவானையும் வழிபாடு செய்ய வேண்டும். திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், குழந்தை பேருக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள், நன்றாக மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். நாளைய தினம் சிவ வழிபாடு சேர்த்த தக்ஷிணாமூர்த்தி வழிபாடு உங்களுக்கு நிச்சயமாக கை மேல் பலனை கொடுக்கும்.

- Advertisement -

இது மட்டுமல்லாமல் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, இந்த மூன்று நட்சத்திரங்களை கொண்டவர்கள் நாளைய தினம் தவறாமல் மாலை நேரம் சிவன் கோவிலுக்கு சென்று பிரதோஷ நேரம் என்று சொல்லப்படும் நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணி வரை அந்த பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு உங்கள் கைகளால் தயிர் சாதத்தை கொண்டு போய் நெய்வேதியமாக வைத்து, அங்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்தால் உங்கள் வாழ்வில் மேலும் மேலும் நல்லது நடக்கும்.

இதே போல தனுசு ராசிக்காரர்களும், மீன ராசிக்காரர்களும் நாளைய தினம் கட்டாயமாக சிவபெருமான் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் தீராத பிரச்சனைகள் தீர நாளைய தினம் நீங்கள் சிவபெருமானை வேண்டிக் கொண்டால், அந்த வேண்டுதல் உடனடியாக நிறைவேறும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

சரிங்க, இவர்கள் மட்டும்தான் நாளைய தினம் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டுமா. நிச்சயம் இல்லை. நாளைய தினம் இந்த பூலோகத்தில் இருக்கக்கூடிய எல்லா உயிர்களும் பிரதோஷ நேரத்தில் ஈசனை நினைத்து வழிபாடு செய்யலாம். உங்களுக்கு இருக்கக்கூடிய கர்ம வினைகள் தீர்ந்து வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக குறைந்து, தோஷங்கள் எல்லாம் விலகி குடும்பத்தில் சந்தோஷம் பெருக நாளைய தினம் அனைவரும் சிவபெருமானை வழிபாடு செய்த அருள் ஆசையை பெற்றுக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: அமாவாசை அன்று இந்த பொருளை வாங்கி அம்மன் கோவிலுக்கு தானம் கொடுத்தால், வாழ்நாள் முழுவதும் எதிரி தொல்லை வரவே வராது. எதிரிகளால் வரும் கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியமும், உங்கள் குடும்பத்தை அசைக்க முடியாது.

உங்கள் கைகளால் சிவபெருமானுக்கு சாத்த வில்வ இலையை கட்டாயம் வாங்கி கொடுக்க வேண்டும். இதோடு சேர்த்து தும்பை பூ நாளை சிவபெருமானுக்கு வாங்கி கொடுத்தால் ஏழேழு ஜென்ம பாவங்கள் தீரும் புண்ணியம் சேரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த வழிபாட்டை செய்து நாளைய தினம் நாள் முழுவதும் ‘சிவாய நம’, ‘ஓம் நமசிவாய’, சிவ சிவ என்ற மந்திரத்தை சொல்லி சிவபெருமானின் அருள் ஆசியை முழுமையாக பெற வேண்டும் என்ற தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -