வசதி வாய்ப்புகள் பெருக, நம்முடைய குடும்பம் காலாகாலத்திற்கும் சந்தோஷமாக வாழ்வாங்கு வாழ நிலை வாசலில் வைக்க வேண்டிய வைக்கோல் பரிகாரம்.

nilaivasal
- Advertisement -

நம்முடைய குடும்பத்திற்கு நாளுக்கு நாள் வசதி வாய்ப்புகள் பெருகி கொண்டே செல்ல வேண்டும். அதே சமயம் குடும்பத்தில் இருப்பவர்கள் வாழ்க்கையில் கஷ்டங்களை எதிர்கொள்ளும் போது, விபரீதமான எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது. வீட்டில் உள்ளவர்களுக்கு தலைகுனிவு ஏற்படக்கூடாது. ஊரே போற்றும் வகையில் நம்முடைய குடும்பம் வாழ்வாங்கு வாழ ஒரு சிறிய சுலபமான பரிகார முறையைத்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நெல்லை அறுவடை செய்த பிறகு நமக்கு கிடைக்கக்கூடிய பொருள்தான் இந்த வைக்கோல். இதை ஆடு மாடுகளுக்கு சாப்பிட தீவனமாக கொடுப்பார்கள் என்ற விஷயம் தானே நமக்கு தெரியும். இந்த வைக்கோல் அந்த காலத்தில் நிறைய நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. அதில் உதாரணத்திற்கு ஒன்று, அரசர்கள் செங்கோலை தங்களுடைய கையில் வைத்துக்கொண்டு ஆட்சி செய்வார்கள் அல்லவா. அந்த செங்கோலை புதியதாக தயார் செய்த பின்பு, அதை சில காலம் இந்த வைக்கோல் வைத்து சுற்றி பாதுகாத்து, அதன் பின்பு அந்த செங்கோல் மன்னனின் கையில் அரசாட்சிக்காக கொடுக்கப்படும் என்ற ஒரு விஷயமும் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

சரி, அதற்கும் பரிகாரத்திற்கும் என்ன சம்பந்தம். ஒரு நாட்டை செழிப்பாக சீரும் சிறப்புமாக ஆளக்கூடிய மன்னன் கையில் கொடுக்கப்படும் செங்கோலை செம்மையாக்க கூடிய சக்தி இந்த வைக்கோலில் இருக்கிறது என்றால், அப்போது நம் வீட்டை சுலபமாக நல்வழிப்படுத்த இந்த வைக்கோல் போதும். ஒரு மஞ்சள் துணியை எடுத்துக்கொள்ளுங்கள்.

அதில் சிறிதளவு வைக்கோல், ஒரு கைப்பிடி அளவு நெல் மணி, ஒரு விரலி மஞ்சள், சிறிய கரித்துண்டு ஒன்று, ஒரு ரூபாய் நாணயம், இந்த ஐந்து பொருட்களையும் ஒன்றாக வைத்து சிறிய முடிச்சு போல கட்டி உங்களுடைய நிலை வாசலில் கட்டித் தொங்க விடுங்கள். இந்த முடிச்சை வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் 6 மணி போல குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு தயார் செய்து நிலை வாசலில் கட்டி தொங்க விட வேண்டும்.

- Advertisement -

தினமும் விளக்கு ஏற்றும் போது ஊதுபத்தியை நிலை வாசலில் இருக்கும் இந்த முடிச்சுக்கு காண்பித்தால் மட்டும் போதும். அவ்வளவு தான். இந்த சிறிய முடிச்சுக்கு உள்ளே இருக்கக்கூடிய வைக்கோல் உங்களுடைய குடும்பத்தை சீர்படுத்தி நேர்வழியில் நல்வழிப்படுத்தும். இதோடு வைத்திருக்கும் கருப்பு நிற கரித்துண்டு உங்கள் வீட்டிற்குள் எந்த ஒரு கெட்ட சக்தியையும் வர செய்யாது. மஞ்சள் கொம்பு மங்களத்தை கொண்டு வந்து சேர்க்கும். ஒரு ரூபாய் நாணயம் செல்வ செழிப்பை கொடுக்கும். நெல்மணிகள் நம்முடைய வீட்டில் தன தானியங்கள் குறையாமல் இருப்பதற்கு. இதனடிப்படையில்தான் இந்த முடிச்சை தயார் செய்து நம் வீட்டு நிலை வாசலில் கட்டி வைத்திருக்கின்றோம்.

இந்த எல்லாப் பொருட்களுக்கும் உள்ளே இருக்கும் நேர்மறை ஆற்றலானது உங்கள் நிலை வாசலில் பரவி உங்கள் வீட்டிற்கு நிறைய இன்னும் நல்ல பல விஷயங்களை கொண்டு வர தொடங்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த சிறிய பரிகாரத்தை செய்து பாருங்கள். இந்த முடிச்சை கட்டிய ஒரு சில நாட்களிலேயே நல்ல மாற்றத்தை பார்க்க முடியும். இதற்கு உள்ளே இருக்கும் பொருட்களை வருடத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும். பழைய பொருட்களை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு மீண்டும் புதிய பொருட்களை வைத்து கட்டிக் கொள்ளலாம்.

- Advertisement -