செல்வம் பெருக வைகுண்ட ஏகாதசியில் பூஜை அறையில் வைக்க வேண்டிய பொருள்

perumal thulasi
- Advertisement -

நம்முடைய வழிபாட்டு முறைகளில் பல விசேஷமான நாட்களும் அதற்கான விரத முறைகளும் அனுசரிக்க ப்படுகிறது அதில் மார்கழி மாதத்தில் வரக் கூடிய இந்த வைகுண்ட ஏகாதசி விரதம் பெருமாளுக்கு மிகவும் உகந்ததாகவும் விசேஷமானதாகவும் கருதப்படுகிறது.

அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த நாளில் நம் வீட்டு பூஜை அறையில் வைத்து வணங்கக்கூடிய சில பொருட்களால் நம்முடைய செல்வ வளம் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வைகுண்ட ஏகாதசி அன்று பூஜை அறையில் வைக்க வேண்டிய பொருள்

வைகுண்ட ஏகாதசி அன்று இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வணங்குவதற்கு முன்பாக என்று வைகுண்ட ஏகாதசி என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த ஏகாதேசி திதியானது வெள்ளிக்கிழமை காலை 22.12.23 தொடங்கி மறுநாள் சனிக்கிழமை 23.12.23 காலை வரை இருக்கிறது. ஆகையால் சனிக்கிழமை அன்று தான் நான் கண் விழித்து வழிபாடு செய்ய வேண்டும்.

விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் வெள்ளிக்கிழமை மதியத்தோடு உணவு உண்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். சனிக்கிழமை காலையில் ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கும் வழிபாடு நடக்கிறது. ஆகையால் நாளைய தினத்தில் தான் நாம் விரதம், வழிபாடு அனைத்தையும் செய்ய வேண்டும். இந்த பூஜை முறையும் நாளை சனிக்கிழமை அன்றே செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்கள் சனிக்கிழமை அன்று காலையில் ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பதற்கு முன்பாகவே எழுந்து வீட்டில் குளித்து முடித்து தீபம் ஏற்றி வைத்து பெருமாளை வழிபட வேண்டும். இது மிகவும் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. அதன் பிறகு நீங்கள் அருகில் உள்ள பெருமாள் ஆலயத்திற்கு சென்று சொர்க்கவாசல் திறப்பு வைப்பவத்தை தரிசனம் செய்யுங்கள்.

அன்றைய தினத்தில் இந்த மூன்று பொருட்கள் உங்கள் பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டும். ஒன்று பச்சை கற்பூரம் இதை ஏற்கனவே நீங்கள் வாங்கி வைத்திருந்தாலும் அன்றைய தினத்தில் புதிதாக வாங்கி வைக்க வேண்டும். அதே போல் ஜாதிக்காய் இந்த ஜாதிக்காயையும் அன்றைய தினம் வாங்கி பூஜை அறையில் வையுங்கள். மூன்றாவது முக்கியமான பொருள் துளசி. இந்த துளசியை வெள்ளி சனிக்கிழமைகளில் பறிக்காமல் கடையில் வாங்கி சுத்தப்படுத்தி வைக்க பாருங்கள்.

- Advertisement -

பெருமாளுக்கு உகந்த இந்த மூன்று பொருட்களையும் ஏகாதசி அன்று பூஜை அறையில் வைத்து வணங்கி அதை பயன்படுத்தும் போது நம்முடைய வாழ்க்கையில் வளம் பெருகும் என்று சொல்லப்படுகிறது. பூஜை முடிந்த பிறகு அன்று மாலை தீபம் ஏற்றி வழிபட்ட பிறகு இந்த மூன்று பொருட்களை ஒன்றாக சேர்த்து நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வைகுண்ட ஏகாதசி அன்று செய்ய வேண்டியது

இதனால் வீட்டில் பணக்கஷ்டம் என்பது அறவே நீங்குவதோடு பணவரவு அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் இந்த மூன்று பொருட்கள் ஒன்றாக இருக்கும் இடத்தில் பெருமாளின் வாசம் நித்தியமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. பெருமாளின் பரிபூரண அருள் ஆசியோடு பெருமாளுக்கு உகந்த இந்த பொருட்களை வைத்து வணங்கும் போது விரதம் இருந்து வழிபட்ட பலனையும் பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -