பெண்கள் வைரம் அணிவது இவ்வளவு அதிர்ஷ்டங்களை கொடுக்குமா? வைரம் அணிவதில் இருக்கும் சிக்கல்கள் என்ன? இத தெரிஞ்சுக்காம வைரம் அணியாதிங்க ஆபத்து வரும்!

- Advertisement -

ஒரு பெண்ணுடைய உடலில் வைரம், வெள்ளி, தங்கம் போன்ற ஆபரணங்கள் அணிவது அதிர்ஷ்டகரமான பலன்களை கொடுக்கும் என்கிறது ஜோதிடங்கள். ஒரு குண்டுமணி தங்கமாவது பெண் அணிந்து இருந்தால், அவளிடம் லட்சுமி கடாட்சம் இருக்கும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதனால் தான் தங்கத்தின் மீது மோகம் அதிகம் இருக்கிறது. அந்த வரிசையில் வைரத்திற்கு இருக்கும் மதிப்பும் அதிகம்! வைரம் அணிவது அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் என்றார்கள். ஆனால் அதை எப்படி அணிவது? என்கிற ஒரு முறை உண்டு. அதை பற்றிய தெளிவான ஜோதிட தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

வைரம் என்பது ராசி கல்லில் ஒன்றாக இருப்பதால் பலருக்கும் ஒரு குழப்பம் நீடிக்கிறது. ராசிக்கல் என்பது அந்தந்த ராசிக்கு உரியவர்கள் மட்டுமே அணிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமாக கருதப்படுவதால், வைரம் அணிவது நல்லதா? கெட்டதா? என்கிற ஒரு குழப்பம் உண்டு. வைரத்தை எந்த வகையில் அணிகிறோம்? என்பது தான் இதில் இருக்கும் சூட்சமம் ஆகும். பெண்கள் வைரம் அணிவது அவரவர்களின் ராசிக்கு உரிய முறைப்படி தான் அணிய வேண்டும். ஆனால் பெண்கள் மூக்குத்தியாக வைரம் அணிவது என்பது எந்த விதமான தோஷங்களிலும் உட்படாதது.

- Advertisement -

வைர மூக்குத்தி அணியும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மேலும் ஆரோக்கியமும், கருப்பை சார்ந்த பிரச்சினைகளும் நீங்குவதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் வைர மூக்குத்திக்கு அப்படி ஒரு மதிப்பு உண்டு. வைர மூக்குத்தி அணியும் பொழுது, எந்த ராசி? என்பது நாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லா ராசியினரும் பெண்கள் மூக்குத்தியாக வைரம் அணிவது ரொம்பவே விசேஷமான பலன்களை கொடுக்கும்.

அவரவரின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப வைரம் அணியலாம். மிகச்சிறிய அளவிலான ஒற்றை வைரக்கல் மூக்குத்தியை அணிந்தாலும் சிறப்பு தான். எனவே உங்களின் சூழ்நிலைக்கு ஏற்ப உங்களால் முடிந்த பொழுது நீங்கள் சிறு வைரக்கல்லையாவது மூக்குத்தியாக அணிந்து கொள்ளுங்கள். மற்ற அணிகலன்களாக வைரம் அணிவதை தவிர்க்க வேண்டும். உங்கள் ராசிக்கு ஏற்ப உங்கள் கிரக நிலைகளின் அடிப்படையில் மட்டுமே வைரம் அணிய வேண்டும்.

- Advertisement -

சிலர் வைரம் எப்படி அணிவது? என்று தெரியாமல் வைர மோதிரம், வைரக்கல் பதித்த தோடு போன்றவற்றை வாங்கி அணிவது உண்டு. அதன் பிறகு அவர்களுக்கு நிறைய பிரச்சனைகளும், கஷ்டங்களும் வருவதாக கூறப்படுகிறது. எனவே எல்லா ராசியினாலும் வைரம் மற்ற அணிகலன்களாக அணியக் கூடாது. மூக்குத்தியாக எவர் வேண்டுமானாலும் அணியலாம் என்பது தான் இதில் இருக்கும் மிக முக்கியமான ஒரு விஷயம் ஆகும். ஒரு பெண்ணிற்கு கருப்பை என்பது ரொம்பவே முக்கியமான ஒரு உறுப்பாக கருதப்படுகிறது. கருப்பையை அகற்றுவதில் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.

கருப்பை அகற்றியவர்களுக்கு தன்னம்பிக்கை இழந்து காணப்படும். அவர்களிடம் சோர்வும், அசதியும் எப்பொழுதும் இருக்கும். இந்த கருப்பையை பலப்படுத்துவதற்கு, வீட்டில் பொருளாதார நிலை உயர்வதற்கும், ஒரு ஆணினுடைய முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கிறது இந்த வைர மூக்குத்தி. எனவே பெண்கள் அனைவரும் வைர மூக்குத்தி அணிந்தால் குடும்ப பொருளாதாரமும் உயரும். கணவனுடைய முன்னேற்றமும் இதில் அடங்கி இருப்பதால் வைர மூக்குத்தி அணிவதில் பெண்களும் ஆர்வம் அதிகம் காட்டுகின்றனர்.

- Advertisement -