நாளை வளர்பிறை வெள்ளிக்கிழமை. செல்வவளம் மேலும் மேலும் பெருக நாளை மகா லட்சுமி தாயாரின் பாதங்களில் இந்த பொருட்களை வைத்து வேண்டிக் கொள்ளுங்கள்.

thambulam
- Advertisement -

நம்முடைய செல்வ வளமும் மனநிம்மதியும் மேலும் மேலும் பெருக வேண்டுமென்றால் வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் மகாலட்சுமி வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக வளர்பிறையில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று நாம் செய்யக்கூடிய மகாலட்சுமி வழிபாடு நமக்கு பல மடங்கு செல்வ வளத்தைப் பெருக்கி கொடுக்கும். இதனடிப்படையில் சுலபமான முறையில் வளர்பிறை வெள்ளிக்கிழமை வழிபாட்டை நம்முடைய வீட்டிலேயே எப்படி மேற்கொள்வது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நாளை காலை 6 மணிக்கும் இந்த பூஜையை வீட்டில் செய்யலாம். காலை பூஜை செய்ய முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு இந்த பூஜையை செய்யலாம். எப்போதும் போல வீட்டை சுத்தம் செய்துவிட்டு மகா லட்சுமி தாயாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து, பூஜை அறையில் இருக்கும் மற்ற திருவுருவப் படங்களுக்கு புதியதாக பூக்களைப் போட்டு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு தாம்புல தட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, சேர்ந்த தாம்பூலத்தை வைத்து இதோடு பச்சை நிற வளையல் 1 டசன், பச்சை நிற ரவிக்கை துணி 1, 11 ரூபாய் காணிக்கை, முடிந்தால் மகாலட்சுமிக்கு பிடித்த மாதுளம்பழம் 2, வைத்துக்கொள்ள வேண்டும். மாதுளம் பழம் வாங்க முடியவில்லை என்றால், வாழைப்பழமாவது வைக்க வேண்டும். இதோடு ஒரு சிறிய கிண்ணத்தில் மணக்க மணக்க பசும்பால் ஊற்றிய பால் பாயாசம் இருக்கவேண்டும். நெய் ஏலக்காய் சேர்த்து பாயாசம் வாசமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாம்பூல தட்டையும் பூஜை அறையில் வைத்து அலங்கரித்து, மகாலட்சுமி தாயாரின் முன்பு அமர்ந்து உங்களுக்கு தெரிந்த மகாலட்சுமி தாயாரின் மந்திரத்தைச் சொல்லுங்கள். மந்திரம் சொல்லத் தெரியாதவர்கள் மந்திரத்தை ஒலிக்கவிட்டு காதால் கேட்கலாம். அப்படி இல்லை என்றால் ‘மகாலட்சுமி தாயே போற்றி’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரிக்கலாம். பிறகு சிறிது நேரம் மனதை ஒரு நிலைப்படுத்தி உங்களுடைய வேண்டுதலை இறைவனிடம் வையுங்கள்.

- Advertisement -

அதன்பின்பு இறுதியாக தீப ஆராதனையை காண்பித்து உங்களுடைய பூஜையின் நிறைவு செய்து கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் கணவன் மனைவி தம்பதியாக சேர்ந்து இந்த பூஜையை செய்து விட்டு தாம்புல தட்டில் வைத்த வளையல் மஞ்சள் குங்குமம் வெற்றிலை பாக்கு ரவிக்கைத் துணியை பாயாசம் இவையெல்லாவற்றையும் யாராவது ஒரு ஏழை சுமங்கலிப் பெண்ணுக்கு தானமாக கொடுத்து விட வேண்டும்.

இந்த பூஜையானது உங்களுடைய குடும்பத்திற்கு செல்வ கடாட்சத்தை நிறைவாக கொடுக்கும். வீட்டில் இருக்கக் கூடிய சுப காரிய தடையை நீக்கும். கடன் சுமை குறையும். வீட்டில் சந்தோஷம் பொங்கி வழியும். அந்த அளவிற்கு இந்த ஒரு சின்ன பூஜைக்கு நிறைய சக்தி உண்டு. இந்தப் பூஜையை செய்ய முடியாதவர்கள் நாளைய தினம் ஏதாவது ஒரு அம்பாள் கோவிலுக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வாங்கி கொடுப்பதும் சிறப்பான பலனை கொடுக்கும்.

- Advertisement -