நாளை வளர்பிறை பஞ்சமி திதி! வருமானம் பெருகிக்கொண்டே செல்ல நாளைய தினம் வாராகி அன்னைக்கு உங்கள் கைகளால் இந்த ஒரு பூவை வைத்து வழிபாடு செய்யுங்கள்.

varahi
- Advertisement -

அமாவாசை முடிந்து வரக்கூடிய பஞ்சமி திதியை வளர்பிறை பஞ்சமி திதி என்று சொல்லுவார்கள். இந்த பஞ்சமி திதியானது வாராகி அன்னைக்கு மிகவும் உகந்த நாள். அது மட்டும் கிடையாது. ஆனி மாதம் அமாவாசை முடிந்தவுடன் ஆஷாட நவராத்திரி தொடங்கி இருக்கின்றது. ஆனி அமாவாசை திதி முடிந்து அடுத்த ஒன்பது நாட்களும் வாராகி அன்னைக்கு உகந்த நாட்களாக சொல்லப்பட்டுள்ளது. சில பேர் இந்த நவராத்திரியை தங்களுடைய வீட்டில் கலசம் நிறுத்தி வழிபாடு செய்யக்கூடிய வழக்கமும் உண்டு. இந்த ஆஷாடா நவராத்திரியோடு சேர்ந்து வெள்ளிக்கிழமை பஞ்சமி திதி வந்திருப்பதால் அந்த நாளை நாம் தவறவிடக்கூடாது‌.

இந்த ஆஷாட நவராத்திரியில் ஒன்பது நாள் வராகி அன்னையை வழிபட்டால் என்ன பலன் கிடைக்குமோ, அதே பலனை நாளை ஒருநாள் வாராகி தாயை வழிபடும்போது நம்மால் பெற முடியும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த ஒரு நாள் தான் நாளைய தினம். நாளை வாராகி அன்னையை வீட்டில் எப்படி வழிபாடு செய்யலாம் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

- Advertisement -

வருமானம் அதிகரிக்க நாளை வாராகி வழிபாடு:
வாராகி வழிபாடு என்றாலே அது மாலை நேரத்தில் தான் செய்ய வேண்டும். மாலை 6.30 மணிக்கு மேல் வாராகி வழிபாட்டை வீட்டில் செய்யலாம். இன்று 22-06-2023 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5:30 மணிக்கு, பஞ்சமி திதி பிறக்கின்றது. நாளை 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7:54 வரை பஞ்சமி திதி இருக்கின்றது.

இன்று மாலை 6.30 மணிக்கு மேல் இந்த வழிபாட்டை செய்யலாம். தவறு கிடையாது. அதைவிட நாளைய தினம் மாலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் இந்த வழிபாட்டை நீங்கள் செய்தீர்கள் என்றால் அது உங்களுக்கு இன்னும் நிறைய பலனை கொடுக்கும். காரணம் நாளை மகாலட்சுமி தேவிக்கு உரிய வெள்ளிக்கிழமை. சுக்கிர பகவானுக்கு உரிய வெள்ளிக்கிழமை. கூடவே பஞ்சமி திதி வந்திருப்பதால் உங்கள் பண கஷ்டம் தீர இந்த வழிபாட்டை நாளைய தினம் செய்வது சிறப்பு.

- Advertisement -

நாளை மாலை வழக்கம் போல வெள்ளிக்கிழமை பூஜை செய்ய உங்கள் வீட்டில் பூஜை அறை தயாராக இருக்கும். உங்களுடைய வீட்டில் நாளை வாராகி அன்னையின் திருவுருவப்படம் இருந்தால் அந்த திருவுருவப்படத்திற்கு மூன்று செம்பருத்தி பூக்களை வைத்து உங்கள் வறுமை நீங்க வேண்டும். கடன் சுமை குறைய வேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் வாராஹி அன்னையின் படம் இல்லை என்றாலும் கவலைப்பட தேவையில்லை. மஹாலட்சுமியையே வாராகி தாயாக நினைத்து அவளுக்கு செம்பருத்திப் பூக்களை வைக்கலாம். தவறு கிடையாது. செம்பருத்திப் பூ கிடைக்காத பட்சத்தில் எந்தவிதமான சிவப்பு நிற பூக்கள் கிடைத்தாலும் நாளைய தினம் பூஜைக்கு பயன்படுத்தலாம்.

இந்த செம்பருத்திப் பூவை அம்மனுக்கு சாத்துவதில் அவ்வளவு ஒரு பவர். இந்த பூவை வைத்து நீங்கள் என்ன வரங்களை கேட்டாலும் அம்பாளிடமிருந்து சுலபமாக பெற்றுவிடலாம். இந்த வாராகி அன்னையும் அப்படித்தான். குழந்தை உள்ளம் கொண்டவள். நீங்கள் உண்மையாக கேட்கக்கூடிய வேண்டுதலை உரிமையோடு கேட்கக் கூடிய வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றி வைப்பாள்.

இதையும் படிக்கலாமே: தண்ணீரில் இந்த மூன்று பொருட்களை ஒன்றாக போட்டு பூஜை செய்து இந்த மந்திர வார்த்தை சொல்லி வீடு முழுவதும் தெளித்தால் வீட்டில் நகை பணம் கொஞ்சமும் வற்றாமல் மேலும் மேலும் பெருகிக் கொண்டே செல்லும்.

இது அல்லாமல் வாராகிக்கு கிழங்கு வகைகளை நிவேதனமாக வையுங்கள். ஒரு டம்ளர் பானகம் நிவேதனமாக வையுங்கள். வாராகி அன்னைக்கு மன சுத்தத்தோடு சேர்ந்த உடல் சுத்தமும் மிக மிக அவசியம். அதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாளை தினம் இந்த எளிமையான வழிபாட்டை வீட்டில் செய்யும் போது உங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியும் மனநிறைவும் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை செய்து பலன் பெறலாம் என்ற கருத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -