இன்று வளர்பிறை பஞ்சமி திதி! இன்று மாலை வாராஹி அம்மனுக்கு இந்த 5 இலைகளை வைத்து வழிபாடு செய்தால், கேட்ட வரம் உடனே கிடைக்கும்.

varahi3
- Advertisement -

வளர்பிறையில் நாம் செய்யக்கூடிய எந்த வழிபாடாக இருந்தாலும் அது நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு இரட்டிப்பு பலனை கொடுக்கும். அந்த வரிசையில் இன்று வளர்பிறை பஞ்சமி திதி. இது வராஹி அன்னைக்கு மிக மிக உகந்த நாள். உங்களுடைய வீட்டில் வாராஹி தேவியை நினைத்து ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, இந்த பூஜையை மட்டும் செய்து பாருங்கள். வாழ்வில் நம்ப முடியாத நிறைய அதிசயங்கள் நடக்கும். நீங்கள் கேட்ட வரங்களை வாரி வழங்குவதில் வராஹி அன்னைக்கு ஈடு இணையான சக்தி இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை என்று கூட சொல்லலாம். சரி வாங்க பதிவிற்குள் செல்வோம்.

வராகி தேவி வழிபாட்டை பொறுத்தவரை சுத்தம் என்பது மிக மிக அவசியம். மனதும் சுத்தமாக இருக்க வேண்டும். நாமும் சுத்தமாக இருக்க வேண்டும். நம்மை சுற்றி இருக்கக் கூடிய இடமும் சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு அம்பாளின் திருவுருவப்படம் இருந்தால் அந்த படத்திற்கு சிவப்பு நிற அரளி பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

வராஹி தேவியின் திருவுருவப்படம் இல்லை என்றால் ஒரு மஞ்சளைப் பிடித்து வைத்து அதை வாராகி அம்மனாக பாவித்து கொண்டு இந்த பூஜையை செய்தால் நிச்சயம் பலன் உண்டு. இந்தப் பூஜைக்கு மிக மிக அவசியமாக இந்த 5 பொருட்கள் தேவை. வேப்ப இலை, துளசி இலை, வில்வ இலை, மருதாணி இலை, வெட்டிவேர். இந்த 5 பொருட்களையும் ஒரு தாம்புல தட்டில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஐந்து இலைகளும் வாராஹி அம்மனுக்கு மிகவும் உகந்த இலைகளாக சொல்லப்பட்டுள்ளது. வாராஹி அம்மன் மனம் குளிர்ந்து உங்கள் வீடு தேடி வருவதற்கு இந்த ஐந்து இலைகள் போதும்.

பூஜை அறையில் நீங்கள் ஏற்றி வைத்திருக்கு தீபத்திற்கு முன்பு வாராஹி அம்மனை மனதார நினைத்து அமர்ந்து கொள்ள வேண்டும். பின் சொல்லக்கூடிய மந்திரத்தை 27 முறை உச்சரிக்கவும்.

- Advertisement -

ஓம் நமோ பகவதி ரீம் ஹ்ரீம் ஜம் க்லௌம் மஹா
வராஹ முகி தாயே நமோ நமஹ.

மந்திரத்தை உச்சரிக்கும் போது தாம்புல தட்டில் வைத்து இருக்கும் இலைகளை வாராஹி அம்மனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். நீங்கள் மஞ்சளில் பிடித்து வைத்திருக்கும் வாராஹி அம்மனுக்கு இந்த இலைகளால் அர்ச்சனை செய்யுங்களாம். உங்களுடைய வீட்டில் வாராகி அம்மனின் திருவுருவ படம் இருந்தால் அந்த படத்திற்கு இந்த இலைகளால் அர்ச்சனை செய்துவிட்டு, உங்களால் முடிந்த நிவேதனத்தை வைத்து தீபாராதனை காட்டி, வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

ஒரு 10 நிமிடங்கள் பூஜை அறையிலேயே அமர்ந்து வராகி தேவியை நினைத்து மனதார தியானம் செய்யுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை அம்பாளிடம் சொல்லி, எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும்படி வேண்டுதல் வைத்தால் உங்களுடைய வேண்டுதல்களுக்காண பலன் அடுத்த ஒரு சில நாட்களிலேயே கிடைக்கும். இந்த பூஜையை இன்று மாலை 6.30 மணியிலிருந்து 9.00 மணிக்குள் செய்வது மிகவும் சிறப்பு. முழு நம்பிக்கையோடு வாராஹி தேவியின் பாதங்களை பற்றிக் கொண்டவர்கள் ஒருபோதும் கைவிடப்பட்டதில்லை.

- Advertisement -