- Advertisement -

என் இளமையின் கனவுகளை
திருடியவளே..
என் இருதய ஓசையை
வருடியவளே..
தேயாத நிலவாய் என்னுள்
நிலைத்தவளே..
வாடாத பூவாய் தினம் தினம்
மலர்பவளே..

விலகிடாத நேசத்தை
உன் மீது நான் வைத்தேன்..
வாலிப தென்றலாய் உனை வருடி
நான் மகிழ்ந்தேன்..
தீராத ஊடலும்
தேன் சிந்தும் காதலும்
மாறாது என்னிடம்..
மகிழலாம் தினம் தினம்..

- Advertisement -
Love Kavithai image

இதையும் படிக்கலாமே:
கண்களில் வழிந்தோடும் காதல் – காதல் கவிதை

வாலிபத்தில் ஒவ்வொருவருக்கும் வரும் காதல் ஒரு புது வித சுகத்தினை தரும். அதில் சில அனுபவமாகவும் சில ஆறுதலாகவும் இருக்கும். ஒரு காதலன் எப்போதும் தன் காதலியின் கை பிடித்து நடக்கவே துடிப்பின். அவனுக்கு தன் உலகமே காதலியாக மாறும். அப்படி பட்ட காதலன்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்.

இது போன்ற மேலும் பல காதல் கவிதைகள், மண் மனம் வீசும் அழகிய தமிழ் கவிதைகள் பல படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -