வல்லாரைக் கீரை அழகு குறிப்பு

vallarai keerai
- Advertisement -

ஒருவர் இளமையாக இருக்க வேண்டும் என்றால் அவருடைய தலை முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தலைமுடி மட்டும் ஆரோக்கியமாக இருந்தால் போதுமா? முகத்தில் பிரச்சனைகள் இருந்தால் பரவாயில்லை என்று கேட்டால் முகமும் அழகாக இருக்க வேண்டும். இப்படி இரண்டும் அழகாக இருந்தால்தான் அவர்கள் முழுமையான அழகுடன் இருக்கிறார்கள் என்று பொருள்படும். இந்த இரண்டையும் அழகாக்குவதற்கும் நாம் வெவ்வேறு மூலிகைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரே ஒரு மூலிகையை பயன்படுத்தினால் போதும். தலைமுடியும் அழகாகும் முகமும் அழகாகும். அந்த மூலிகை என்ன என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

தலைமுடி சார்ந்த பிரச்சினைகள் என்று பார்க்கும் பொழுது முடி பிளவு, பொடுகு, முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்சனைகளை கூறலாம். முகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் என்று பார்க்கும் பொழுது கருமை, கருத்திட்டு, கரும்புள்ளிகள், பருக்கள், சுருக்கங்கள் இவற்றை கூறலாம். இவை அனைத்தையுமே சரி செய்யக்கூடிய ஒரு மூலிகை என்ன என்று பார்ப்போம்.

- Advertisement -

அந்த மூலிகைதான் வல்லாரை கீரை. வல்லாரை கீரையா? இது ஞாபக சக்திக்கு தானே உதவும் என்று தான் பலரும் நினைப்பவர்கள். ஆம் இந்த வல்லாரைக் கீரை எந்த அளவுக்கு நம்முடைய மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறதோ அதே அளவிற்கு தலையில் தடவும் பொழுது தலை முடி பிரச்சனைகளை நீக்குகிறது. முகத்தில் தடவும் பொழுது முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளையும் நீக்குகிறது. இதை எப்படி பயன்படுத்துவது? சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை.

வல்லாரைக் கீரையை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் நைசாக அரித்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதை தலைமுடி வேர்க்கால்களில் படும் அளவிற்கு நன்றாக தடவ வேண்டும். இதே போல் இதே விழுதை முகத்தில் தடவ வேண்டும். அதாவது இந்த ஒரு விழுதை ஹேர் பேக் மற்றும் ஃபேஸ் பேகாக பயன்படுத்த வேண்டும். அரை மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு போய் குளித்து விடுங்கள் அவ்வளவுதான்.

- Advertisement -

தலைமுடியில் இருக்கக்கூடிய பிரச்சனைகளும் நீங்கும். முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளும் நீங்கும். இப்படி வாரத்திற்கு இரண்டு நாட்கள் வீதம் தொடர்ந்து 48 நாட்கள் நாம் இந்த மூலிகையை பயன்படுத்த வேண்டும். இப்படி பயன்படுத்துவதன் மூலம் தலைமுடி உதிர்தல் என்பது முற்றிலும் நின்றுவிடும். முடி வேகமாக வளரும். அதுவும் கருமையாக வளரும். இளநரை மாறும். பொடுகு பிரச்சனை அனைத்தும் நீங்கும். முடி பிளவு சரியாகும். ஆரோக்கியமான அடர்த்தியான முடியை பெற முடியும்.

முகத்தில் தடவும் பொழுது முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், கருந்திட்டுக்கள், சூரிய ஒளிக்கதிர்களால் ஏற்பட்ட கருமை அனைத்தும் நீங்கும். முகப்பருக்கள் ஏற்படாமல் தடுக்கும். ஏற்கனவே இருந்த முகப்பருக்களை நீக்கும். முகப்பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மறையும். முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் அனைத்தும் நீங்க ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: முக கருமை நீங்கும் ஸ்க்ரப்பர்

ஒரே ஒரு கீரை நம்முடைய அழகை முழுமையாக பாதுகாக்க கூடிய அற்புதமான கீரை. இந்த கீரையை இனிமேல் பார்த்தால் கண்டிப்பான முறையில் வாங்கி உபயோகப்படுத்துங்கள். நல்ல பலனை பெற முடியும்.

- Advertisement -