எந்த இடத்திலும் பயம் இல்லாமல் செல்ல, வாழ்க்கையில் வெல்ல, இந்த 1 பொருளை கையில் வைத்துக் கொள்ளுங்கள். தோல்வி உங்கள் பக்கம் வராது.

guru
- Advertisement -

சில பேருக்கு மன தைரியம் என்பதே இருக்காது. பொதுவான இடத்தில், மூன்றாவது மனிதர்களிடம் பேச வேண்டும் என்றால் பயப்படுவார்கள். நாலு பேருக்கு முன்னால் பேச சொன்னாலும் பயம் இருக்கும். நமக்கு தேவையானவற்றை பொது இடங்களுக்கு சென்று விசாரித்து வாங்க கூட சில பேருக்கு பயம் இருக்கும். எதற்கெடுத்தாலும் இப்படி மன பயத்தோடு இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். அடுத்தபடியாக, காரிய தடை. எந்த இடத்திற்கு சென்றாலும் நாம் செல்லக்கூடிய வேலை சரியாக நடந்து முடியாது. தொடர் தோல்விகள் வந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனையில் இருந்தும் தப்பிக்க இந்த பரிகாரத்தை செய்யலாம். ஆக மொத்தத்தில் உங்கள் கையில் இந்த 2 பொருள் இருந்தால் உங்களை வீழ்த்த யாராலும் முடியாது.

அது கண்ணுக்குத் தெரிந்த மனிதர்களாக இருந்தாலும், உங்களிடம் முட்டி மோதி ஜெயிக்க முடியாது. கண்ணுக்குத் தெரியாத கண் திருஷ்டி, கெட்ட சக்தி எதுவாக இருந்தாலும் உங்கள் உடம்பில் புகுந்து கொள்ள முடியாது . இத்தனை அற்புதமான வேலைகளையும் செய்யக்கூடிய அந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆவலாக இருக்கா. வாங்க பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

வாழ்வில் வெற்றி பெற செய்ய வேண்டியது:
நம் கையோடு எடுத்துச் செல்ல வேண்டிய அந்த இரண்டு பொருள் என்ன தெரியுமா. மஞ்சள் நீற எலுமிச்சம்பழம், பச்சை நிறத்தில் இருக்கும் அருகம்புல். அந்த குரு பகவானும் விநாயகரும் உங்களுடனே வருவார்கள். இந்த இரண்டு பொருளை கையோடு எடுத்துச் சென்றால். காலையில் எழுந்தவுடன் எப்போதுமே சுத்தபத்தமாக குளித்துவிட்டு சூரியனைப் பார்த்து ஒரு நமஸ்காரம் வைத்து விடுங்கள். இது உங்களுடைய அன்றைய நாள் பொழுதை சூப்பராக கொண்டு செல்லும்.

அடுத்து பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு, எலுமிச்சம் பழத்தையும் அருகம்பிள்ளையும் எடுத்து உங்கள் மணி பர்ஸ் அல்லது ஹேண்ட்பேகிலோ வைத்து விடுங்கள். அதன் பின்பு தினசரி வேலையை முடித்துவிட்டு வெளியே கிளம்புங்கள். நீங்கள் செல்லக்கூடிய காரியம் 100% வெற்றி. (எலுமிச்சம்பழம் அருகம்புல் மூன்று நாளுக்கு ஒருமுறை மாற்றினால் கூட போதும்.)

- Advertisement -

ஏதோ ஒரு சிக்கலான இடத்திற்கு போக வேண்டிய சூழ்நிலை அமைந்துவிட்டது. ஆனால் அந்த இடத்திற்கு போவதற்கு உங்களுக்கு மனதில் ஒரு பயம். ஒரு சின்ன எலுமிச்சம் பழத்தை வாங்கி உள்ளங்கைகளில் வைத்து மூடிக்கொண்டு, சிக்கலான இடத்திற்கு சென்றால் அந்த இடத்தில் இருக்கும் கண் திருஷ்டியோ, கெட்ட சக்தியோ, உங்கள் உடம்பில் ஊடுருவாது. ஏன் ஏவல் பில்லி சூனியம் கூட உங்களை நெருங்காது. அங்கு இருப்பவர்கள் பொறாமை என்னத்தொடு உங்களை பார்த்தால் கூட உங்களுடைய ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடாது.

நடு இரவு, நடு வீதியில் எலுமிச்சம் பழத்தை உள்ளங்கைகளில் வைத்து நடந்தாலும் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தி நம்மை நெருங்காது. பிரச்சனை இல்லை. அந்த அளவுக்கு சக்தி ஒரு எலுமிச்சம் பழத்துக்கு உண்டு‌ அதுவும் உங்கள் உள்ளங்கையில் இருக்கும் போது உங்களுக்கு அது ஒரு பாதுகாப்பு கவசமாக அமைந்து விடும்.

இதையும் படிக்கலாமே: அப்பா தாத்தா வாங்கிய கடனுக்கு இதுவரைக்கும் வட்டி மட்டும்தான் கட்றீங்களா? இந்த 6 விரல் பரிகாரத்தை தெரிந்து கொண்டால், அசல் தொகையை 6 நாட்களில் திருப்பி தரலாம்.

குருபகவானின் நிறம் மஞ்சள். குரு பகவானை நினைத்துக் கொண்டு இந்த எலுமிச்சம் பழத்தை உங்களோடு எடுத்துச் சென்றால் குரு கோடி நன்மைகளை காட்டிக் கொடுப்பார். விநாயகருக்கு சொந்தமான அருகம்புல், உடன் எடுத்துச் சென்றால் வரக்கூடிய அத்தனை தடைகளும் தவிடு பொடி ஆகிவிடும். இதுதான் இந்த பரிகாரத்தில் மறைந்திருக்கும் சூட்சமம். இந்த எளிமையான பரிகாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -