அப்பா தாத்தா வாங்கிய கடனுக்கு இதுவரைக்கும் வட்டி மட்டும்தான் கட்றீங்களா? இந்த 6 விரல் பரிகாரத்தை தெரிந்து கொண்டால், அசல் தொகையை 6 நாட்களில் திருப்பி தரலாம்.

cash5
- Advertisement -

அப்பா சொத்து பிள்ளைக்கு. அப்பா வாங்கிய கடன்? அதுவம் பிள்ளைக்கு தானே. அப்பா சொத்தை எப்படி அனுபவிக்கின்றோமோ, அதே போல அப்பா வாங்கிய கடனை திருப்பித் தர வேண்டிய கடமை குழந்தைகளுக்கு தான் உள்ளது. ஆனால் எப்போவோ அப்பா வாங்கிய கடனுக்கு, இன்னும் வடிக்கட்ட கூடிய சூழ்நிலையில் சிக்கித் தவிப்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் உடனடியாக அவர்களுடைய கடன் பிரச்சனை தீரும். பல வருடங்களாக வட்டி மட்டுமே கட்டிக் கொண்டிருப்பவர், அசல் தொகையை திருப்பி தர நிச்சயம் ஒரு வாய்ப்பு கிடைக்கும். சில பேர், தான் வாங்கிய கடனைகூட திருப்பித் தர முடியாமல் வட்டி கட்டி கஷ்டப்படுவார்கள். கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனையிலிருந்து வெளிவரவும் இந்த எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்யலாம்.

இரண்டு லட்சம் கடன் வாங்கி இருப்பாங்க. இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் வட்டியை திருப்பி கொடுத்து இருப்பார்கள். ஆனால் அசலை மொத்தமாக திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். இந்த சுமை, ஒரு பெரிய சுமை. கையில் மொத்தமாக பணம் இல்லாதவன் என்ன செய்வான் பாவம். மாதம் சம்பாதிக்க கூடிய வருமானத்தில் இருந்து ஒரு தொகையை வட்டி மட்டும் தான் கட்ட செய்வான். வாங்கிய அசலுக்கு இணையாக வட்டி கொடுத்தவர்களுக்கு, கடன் கொடுத்தவர்கள் ஏதாவது ஒரு வகையில் சலுகை கொடுங்கள். கடன் கொடுத்த உங்கள் குடும்பத்திற்கும் நன்மை நடக்கும். சரி, இப்போது கடன் பிரச்சனையில் அவதிப்படுபவர்கள் செய்ய வேண்டிய 6 விரல் பரிகாரத்தை பார்த்து விடுவோம்.

- Advertisement -

கடன் சுமை குறைய புதுமையான 6 விரல் பரிகாரம்:
இது கொஞ்சம் வித்தியாசமான பரிகாரம் தான். ஆனால் ரொம்பவும் சக்தி வாய்ந்த பரிகாரம். இந்த பரிகாரம் செய்ய நீங்கள் கொஞ்சம் சிரமப்பட்டு ஆறு விரல் உள்ளவர்களை தேடி பிடிக்க வேண்டும். ஒரு புதியதாக தட்டு வாங்கிக் கொள்ளுங்கள். அதில் வெற்றிலை பாக்கு, மட்டை தேங்காய், வாழைப்பழம், சிவப்பு நிற வஸ்திரம், அல்லது சிவப்பு நிறத்தில் ஏதாவது ஒரு ஆடை, உங்களால் முடிந்த தட்சணையை வைத்து, துவரம் பருப்பு 1 கிலோ வைத்து செவ்வாய்க்கிழமை காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் இந்த தாம்பூல தட்டை, தட்டுடடுன் எல்லா பொருட்களையும் அந்த ஆறு விரல் உள்ள நபருக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

ஆறு விரல் கொண்ட ஆண் இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, கிழக்கு பார்த்தவாறு நின்று இந்த தானத்தை கொடுத்து விடுங்கள். அவர்கள் உங்களை விட வயதில் பெரியவர்களாக இருந்தால், அவர்களுடைய காலில் விழுந்து நமஸ்காரம் வாங்கிக் கொள்ளுங்கள். உங்களை பிடித்த கடன் பிரச்சனை அன்றிலிருந்து முடிந்துவிடும்.

- Advertisement -

முன்கூட்டியே 6 விரல் கொண்ட அந்த நபரிடம் சென்று உங்கள் பிரச்சினையை சொல்லி இந்த தானத்தை பெற்றுக் கொள்ள வேண்டி கேட்டுக் கொள்ளுங்கள். இந்த தானத்தை பெறுவதன் மூலம் அவருக்கு எந்த ஒரு பிரச்சனையும் வருவதற்கு வாய்ப்பு கிடையாது. உங்களுடைய கர்மா குறைந்து, கடன் பிரச்சனை தீர ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ள எளிய பரிகாரங்களில் இதுவும் ஒன்று.

ஒரே ஒரு வாரம் செவ்வாய்க்கிழமை இந்த தானத்தை மட்டும் கொடுத்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் அன்றிலிருந்து கடன் பிரச்சினை முடிந்தது என்றே வைத்துக் கொள்ளலாம். ஏதாவது ஒரு வகையில் கடனை திருப்பித் தருவதற்கான சந்தர்ப்பத்தை இந்த பிரபஞ்சம், ஏற்படுத்திக் கொடுக்கும். பிறகு கடன் இல்லாமல் வாழக்கூடிய வாழ்க்கையை வாழ்வதற்கு உண்டான வழிகளையும் காட்டிக் கொடுக்கும். அவ்வளவு சிறப்பு மிக்க எளிமையான பரிகாரம் இது.

இதையும் படிக்கலாமே: வம்சா வழியாக தொடரும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வருடத்திற்கு ஒருமுறை இதை செய்தாலே போதும். ஊழ்வினை கர்மா குறையும்.

ஆனால் ஆறு விரல் உள்ளவர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டியது உங்கள் கையில் தான் உள்ளது. எல்லா விஷயத்திலும் சிரமமில்லாமல் சாதிக்க முடியுமா. கடன் பிரச்சனை தீர வேண்டும் என்றால் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்று கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -